அமரர் யோகநாதன் சிவகௌரி

  • 1 members
  • 1 followers
  • 2264 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
இப்போதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது....உண்மை தானே-?
  • 316
·
Added a post
ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.“பணம், செல்வம், தங்கம், வைரம்..” என்றான் ஏழை ஆசையோடு. கடவுள் வலது கையின் சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது. ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.அவன் பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை.சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அந்த_விரல் வேண்டும்” என்றான் ஏழை. கடவுள் மயங்கி விழுந்தார்.
  • 383
  • 396
·
Added a news
கண்டி , வத்தேகம கல்வி வலயத்திற்கு உட்பட்ட குண்டசாலை பிரதேசத்தில் உள்ள “கெஹெலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை” என்ற பாடசாலையின் பெயர் “குண்டசாலை அரச ஆரம்ப பாடசாலை” என மாற்றப்பட்டுள்ளது.மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று (16) விடுத்த உத்தரவின் கீழ் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளில் பெயர்களை மாற்றுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாகாண கல்வி திணைக்களத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, “கெஹெலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை” என்ற பாடசாலையின் பெயர் தற்போது “குண்டசாலை அரச ஆரம்ப பாடசாலை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • 407
நினைப்பது ஒன்று.... உண்மை நிலவரம் வேறு...
  • 416
இன்றைய நிலவரம் இதுதானே?
  • 421
·
Added article
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் எவர் கிரீன் காமெடி காட்சிகள் நிறைந்த கரகாட்டக்காரன் திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான். கவுண்டமணி – செந்தில் கூட்டணி இந்த படத்தில் பெரிய அளவில் காமெடி காட்சிகளை வொர்க்அவுட் செய்திருப்பார்கள். இதன் காரணமாக இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.அதே சமயம் இந்த படத்தில் கவுண்டமணி கேரக்டரில் நடிக்க இருந்தவர் வேறு ஒரு நடிகர் என்பதும், நடிகர் ராமராஜன் தான் கவுண்டமணிக்கு ஆதரவாக பேசி அவரை படத்தில் நடிக்க கமிட் செய்தார் என்பதும் பலரும் அநியாத ஒரு தகவல். தமிழ் சினிமாவின் இன்றைக்கு ரீ-ரிலீஸ் செய்தாலும் பெரிய வசூலை கொடுக்கும் வகையிலான படங்களில் ஒன்றாக இருக்கும் கரகாட்டக்காரன் 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம்.ராமராஜன் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தின் மூலம் நடிகை கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். மேலும் கவுண்டமணி செந்தில், கோவை சரளா, காந்திமதி, சண்முகசுந்தரம், சந்தானபாரதி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். 2 கரகாட்ட கோஷ்டிக்கு இடையே நடக்கும் சம்பவங்களை காமெடியாக சொல்லிய இந்த படத்தில், கவுண்டமணி – செந்தில் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.தனித்தன்மையுடன் இருக்கும் கரகாட்டக்காரன் படத்தில், வரும் வாழைப்பழ காமெடி, அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு காமெடி காட்சியாக பேசப்பட்டு வருகிறது. காலம் கடந்து புகழ் பெற்று வரும் காரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி நடித்திருந்த தவிள் வித்வான் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் எஸ்.எஸ்.சந்திரன். இதை பற்றி தெரிந்த நாயகன் ராமராஜன், அவர் வேண்டாம் அவருக்கு பதிலாக கவுண்டமணி நடிக்கட்டும் என்று கூறியுள்ளார்.எஸ்.எஸ்.சந்திரன் அரசியல் பேசுவார். அவரது அரசியல் வேறு எனது அரசியல் வேறு. அதுவும் இல்லாமல் இந்த படம் அரசியல் படம் அல்ல. அதனால் இந்த படத்தில் அவர் வேண்டாம். அந்த கேரக்டருக்கு கவுண்மணியை போடலாம் என்று கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இதற்கு மறுத்துள்ளனர். உடனே ராமராஜன் இந்த படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் இருந்தால் என்னை விட்டுவிடுங்கள் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.அதன்பிறகு வேறு வழி இல்லாமல், இந்த படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் நீக்கப்பட்டு, கவுண்டமணி உள்ளே வந்துள்ளார். கவுண்டமணி – செந்தில் – கோவை சரளா ஆகியோர் இடையோன காமெடி காட்சிகள் கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்தது. இந்த படத்தின் கதை சாதாரண கதைதான் என்றாலும் கூட, காமெடி காட்சிகளுக்காக கரகாட்டக்காரன் படம் இன்றும் தனித்தன்மையுடன் உயர்ந்து நிற்கிறது.
  • 429
பெரிய பாறையில் கட்டப்பட்ட வீடு இருப்பது போர்ச்சுக்கல் நாட்டில்,காஸா டோ பெனடோ casa do penedo அதாவது பாறைவீடு என்று அர்த்தம்,இயற்கையான நான்கு பாறைகளால் ஆன இந்த வீடு 1972ல் கட்டப்பட்டது!
  • 704
·
Added a post
பல லட்சங்கள் முதலீடு செய்து கடையை தொடங்கினார். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பலரும் பொருட்களை கடன் சொல்லி வாங்கிச் சென்றனர். இப்பொழுது மிச்சம் இருப்பது இதுதான்..."இல்லை" "முடியாது" "NO" என்று சொல்லாததன் விளைவு, இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறார். நீங்கள் "சரி" என்று சொல்வதன் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைக்கிறீர்கள். ஆனால் அது பல நேரங்களில் உங்களுக்கு "இழப்பையே" ஏற்படுத்துகிறது.எங்கு "சரி", எங்கு "முடியாது" என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.உங்களிடம் பணம், அந்தஸ்து எல்லாம் இருக்கும் பொழுது கூட்டம் கூட்டமாக வந்தவர்கள், ஒன்றுமில்லாமல் நீங்கள் நிற்கும் பொழுது ஒருவர் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை."கடன் அன்பை முறிக்கும்" என்று சும்மாவா சொன்னாங்க!
  • 726
·
Added a post
இங்கிலாந்து நாட்டில் சசெக்ஸ் என்ற இடத்தில் இப்படி ஒரு கட்டுமானம். Ouse Valley Viaductஊஸ் ஆற்றின் குறுக்கே லண்டன்-பிரைட்டன் பாதையைக் கொண்டு செல்வதற்காக 1838 ஆம் ஆண்டில் இந்த வையாடக்ட் முதலில் கட்டப்பட்டது.கட்டுமானம் 1842 இல் நிறைவு அடைந்தது. இந்த வையாடக்ட் 96 அடி (29 மீ) உயரம் கொண்டது மற்றும் 37 அரை வட்ட வளைவுகள், ஒவ்வொன்றும் 30 அடி (9.1 மீ), மொத்த நீளம் 1,480 அடிகள் (450 மீ) சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் செங்கற்கள் உள்ளன.
  • 720
·
Added a news
இணையவழி நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் 218 வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இணையவழி நிதி மோசடி தொடர்பான கைதுகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், சிலாபம் இரணவில பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிசாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜைகள் தவிர்ந்து, மலேசியர்கள், எத்தியோப்பியர்கள், கென்ய நாட்டவர்களும் அடங்குவதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் தங்கியிருந்த விடுதிக்குக் கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் மாதாந்தம் 19 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துடன் 2 இலங்கையர்களும் தொடர்புபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் மேலதிக சோதனைக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், இணையவழி நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பான சட்ட அமுலாக்கத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாகச் சீன தூதரகம் அறிவித்துள்ளது. இதனிடையே, மியான்மார் மற்றும் தாய்லாந்தில் இயங்கும் சைபர் குற்ற முகாம்கள் போன்று, இலங்கையிலும் நிதி மோசடிகள் இடம்பெறுவதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர். எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.000
  • 859
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 31ஆம் தேதி   மேஷம் -ராசி: மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கைத் துணையுடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். பணிபுரியும் இடத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். வியாபாரப் பணிகளில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம் ராசி: கல்விப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுக எதிர்ப்புகளையும், திறமைகளையும் அறிந்து கொள்வீர்கள். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மிதுனம் -ராசி: புதிய வாகனங்களை வாங்குவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய வீடு மற்றும் கால்நடை சார்ந்த செயல்களில் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மருத்துவ சிகிச்சைகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் கடகம் -ராசி: செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மாமியார் உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு சிம்மம் -ராசி:காதில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை தரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் கன்னி -ராசி: துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் ஆதாயமடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அறப்பணிகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வு கிடைக்கும். வாழ்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு துலாம் -ராசி: உணவு சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடலளவில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் விருச்சிகம்- ராசி: குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் தனுசு -ராசி: தொழில் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை மகரம் -ராசி:அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் கும்பம் –ராசி:புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். வஞ்சகமான பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களை வழிநடத்தி செல்லும் திறமை வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மீனம் -ராசி: சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு   இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 1009
ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை 17.10.2024சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 05.25 வரை பௌர்ணமி. பிறகு பிரதமை.இன்று மாலை 05.36 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 990
good morning...
  • 998
·
Added a news
பொது தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அதற்கமைய, அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணையம் இது தொடர்பில் அறிவிப்பு விடுத்துள்ளது.இதுபோன்ற கணிப்புகளை வெளியிடுவது தேர்தல் சட்டப்படி கடுமையான குற்றமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இவ்வாறான கணிப்புகளை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
  • 1014
·
Added a news
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,540,161 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் 13 நாட்களில் 55,353 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அதில் 29.2% அல்லது 16,163 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.இது தவிர, சீனாவில் இருந்து 3,963 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 3,926 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 3,469 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.000
  • 1035
·
Added a news
யாழ்.மாவட்ட செயலகத்தின், காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (16) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்துதெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இக் கூட்டத்தின் நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதும், நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதாகவும் தெரிவித்தது. இவ் மீளாய்வுக் கூட்டத்தில் நிதி முன்னேற்றங்களை ஆராய்ந்த வகையில் திருப்திகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.000
  • 1018
·
Added a news
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. யாழ். பொலிஸ் நிலைய மாநாட்டு மன்டபத்தில் நேற்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கும் முகமாக குழு ஒன்று அமைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 51 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.இந்தக் குழுவில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சார்பில் 7 உறுப்பினர்களும், தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 44 உறுப்பினர்களும் என மொத்தமாக 51 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.மேலும், தேர்தல் பிரசார இடங்களுக்கு அனுமதி கோரல், ஒலிபெருக்கி சாதனங்களைப் பயண்படுத்தும் கால அளவு தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.000
  • 1019
·
Added a news
குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்தும் போது, ​​அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலிருந்து சில இரசாயனங்கள் நீருடன் கலப்பதாக உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.அவற்றில் சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குடிநீர் நிரம்பிய பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சிலர் நீரை சேமித்து வைப்பதற்காக குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதாகவும்,அவை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது00
  • 1040
·
Added a news
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையில் இராஜதந்திர நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் சாத்தியமானது என கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.இந்தியா மீதான சாத்தியமான தடைகள் பற்றி கேள்வியெழுப்பிய போது, "அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக" அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.முன்னதாக, கனேடிய குடிமக்களை குறிவைக்கும் குற்றச் செயல்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியிருந்தார்.பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் இந்தியாவின் முகவர்கள் ஈடுபட்டிருப்பதற்கான "தெளிவான ஆதாரங்கள்" குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கவலை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது, கனடா காலில் தன்னைத்தானே சுட்டுக்கொள்வது போன்றது என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த விடயம் தொடர்பில் இன்போமெரிக்ஸ் மதிப்பீடுகளின் பொருளாதார நிபுணர் சங்கநாத் பந்தோபாத்யாய் கருத்து வெளியிடுகையில்,“கனேடிய வணிகங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன, அதன் வளர்ச்சி மற்றும் வருமானம் அதிகமாக உள்ளது. கனடிய ஓய்வூதிய நிதிகள் இந்தியாவில் 75 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.600 க்கும் மேற்பட்ட கனேடிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன, மேலும் 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையில் தீவிரமாக வணிகத்தைத் தொடர்கின்றன” என்று பந்தோபாத்யாய் சுட்டிக்காட்டினார்.பொருளாதாரத் தடைகள் விவசாயத் துறையில், குறிப்பாக இந்தியாவிற்கு கனடாவின் பருப்பு ஏற்றுமதியில் எவ்வாறு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.“கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புகளின் முக்கிய ஆதாரமாக இந்தியா உள்ளது. கனடா, அவுஸ்திரேலியா போன்ற போட்டியாளர்களிடம் பருப்புக்கான அதன் சந்தைப் பங்கை இழக்கும் அபாயம் உள்ளது.அவுஸ்திரேலியாவின் பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் சந்தையில் பெருகிய முறையில் போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2019 ஆம் ஆண்டு முதல், அவுஸ்திரேலியா இந்தியாவுக்கான பருப்பு ஏற்றுமதியை படிப்படியாக அதிகரித்து வருகிறது.கனேடிய பருப்பு ஏற்றுமதியில் தாக்கம்குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றாலும், இராஜதந்திர நெருக்கடி இந்திய இறக்குமதியாளர்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடும்” என்றார்.எவ்வாறாயினும், இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) அதன் பங்களிப்பு வெறும் 0.57 சதவீதமாக இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக கனடா சிறிய செல்வாக்கைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • 1037
·
Added a news
தாதியர் பற்றாக்குறை, அதிக வேலைப்பளு மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக சுமார் 5000 தாதியர்கள் முறையான அறியப்படுத்தல்கள் எதுவுமின்றி சேவையிலிருந்து விலகல், உரிய காலத்திற்கு முன்னர் ஓய்வு பெறுதல் அல்லது சேவையிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக, தாதியர் பற்றாக்குறை மற்றும் அதிக அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ரவிந்திர கஹதவஆரச்சி தெரிவித்தார்.அண்மையில் சுமார் 5000 தாதியர்கள் உரிய காலத்தில் ஓய்வெடுக்கவுள்ளனர். இந்நிலையில், தாதியொருவர் மூவரது பணியை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இதனால் தாங்க முடியாத அதிக வேலை அழுத்தத்தால் தாதியர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.2021ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 2,528 தாதியர்கள் சேவையை விட்டு செல்லுதல், உரிய காலத்திற்கு முன்னர் ஓய்வு பெறுதல் மற்றும் நாட்டை விட்டு வெளியேறிய கவலைக்குரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.2019-2020 ஆண்டுகளில் உயர்தரம் சித்திபெற்ற 3000 பேரை தாதியர் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள அப்போதைய அரசாங்கம் தீரமானித்தாலும் கூட அவர்களில் 2183 பேர் மாத்திரமே அதற்கு தகுதி பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.000
  • 1024
·
Added a news
உக்ரைனுக்கு எதிரான போரில் உதவுவதற்காக வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு மேற்கத்திய தூதர் தெரிவித்துள்ளார்.இது மொஸ்கோவிற்கும் பியோங்யாங்கிற்கும் இடையே ஆழமடைந்து வரும் இராணுவ உறவை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், எந்த வகையான வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று மேற்கத்திய இராஜதந்திரி Kyiv Independent இடம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், உக்ரைன் தரப்பில் இருந்து இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.“ரஷ்யாவும், வட கொரியாவும் இராணுவ உறவுகளை ஆழப்படுத்துவது, உக்ரேனில் போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு மொஸ்கோவின் வளங்களின் தேவை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது."கடந்த 2.5 ஆண்டுகளில் ரஷ்யாவும் அதன் இராணுவமும் வட கொரியாவிடம் கடன் வாங்கவும், ஆதரவை வாங்கவும் வேண்டியுள்ளது என்பது தெளிவான குறிகாட்டியாகும்" என்று இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளரான ஜோன் ஃபோர்மேன் தெரிவித்துள்ளார்.முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பியாங்யாங்கிற்குச் சென்றபோது இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இவ்வாறான பின்னணியில் வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரிக்கும் ரஷ்யாவின் திட்டங்களில் வடகொரியாவின் ஈடுபாடு உள்ளடங்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் கூறியிருந்தார்.ரஷ்யாவும் வட கொரியாவும் தங்கள் கூட்டணியை ஆழப்படுத்தி வருவதாகவும், வட கொரியா ஆயுதங்களுடன் உக்ரைனின் முன் வரிசைகளுக்கு பணியாளர்களை அனுப்பும் அளவிற்கு கூட்டாண்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இதேவேளை, ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் வடகொரிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் சமீபத்திய நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • 1044
·
Added a news
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபதுக்கு போட்டி இன்று நடைபெறவுள்ளது.தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இதேவேளை இரு அணிகளும் வெற்றி பெற்று சம நிலையில் இருப்பதால் இப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்மேலும் 2020ஆம் ஆண்டுக்கான முதலாவது இருபதுக்கு இருபதுக்கு போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது000
  • 1041
·
Added a news
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன இந்த குற்றச்சாட்டை இன்று தம்புள்ள பிரதேசத்தில் வைத்து முன்வைத்துள்ளார்.அரசாங்கம் தொடர்ச்சியாக வரையின்றி கடன் பெற்றுக்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.எனினும், நாட்டு மக்களுக்கு எவ்வித உணரக்கூடிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்க ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட முடியாது என்பது தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோருக்கான 3000 ரூபாவினை இன்னமும் செலுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த 2ஆம் திகதி, 9ஆம் திகதி, 11ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதிகளில் அரசாங்கம் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது எனவும் இதன் மொத்த தொகை 41900 கோடி ரூபா எனவும் தெரிவித்துள்ளார்.இதன்படி, புதிய அரசாங்கம் மணித்தியாலத்திற்கு 134.9 கோடி ரூபா என்ற அடிப்படையில் கடன் பெற்றுக்கொண்டுள்ளது என ரோஹினி கவிரட்ன தெரிவித்துள்ளார். 000
  • 1031
·
Added a news
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஆய்வுக் கூடங்களில் போதியளவு வசதிகள் இல்லை என பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளார்.எனவே, தற்போது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்யின் தரம் குறித்து ஆராய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்படும் சில வகை தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான இரசாயனங்கள் உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கடந்த வாரம் உறுதியளித்திருந்தார்.இலங்கைக்கு தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யும் போது, உணவுப் பரிசோதகர்களால் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.சுங்கப் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வியாபாரத்தளங்களில் விற்பனை செய்யப்படும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் குறித்து தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொள்வதாக உபுல் ரோஹன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
  • 1029
·
Added a news
நடப்பு ஆண்டின் மகளிர் 20 க்கு 20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளுக்காக, அனுபவம் வாய்ந்த நான்கு நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இலங்கையின் நிமாலி பெரேரா, ஜமேக்காவின் ஜாக்குலின் வில்லியம்ஸ், தென்னாபிரிக்காவின் லோரன் ஏஜென்பேக் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிளாரி பொலோசாக் ஆகிய நான்கு பேரே அரையிறுதிகள் மற்றும் இறுதிப்போட்டியின் நடுவர்களாக செயற்படவுள்ளனர்.இதன்படி இன்று நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான அரையிறுதிப் போட்டிக்கு நிமாலி பெரேரா மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் நடுவர்களாக செயற்படுவார்கள் என்றும், மூன்றாவது நடுவராக இங்கிலாந்தின் அன்னா ஹாரிஸ் செயற்படவுள்தாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.மேலும், நான்காவது நடுவராக நியூஸிலாந்தின் கிம் கொட்டன் மற்றும் போட்டி நடுவராக இலங்கையின் மிச்செய்ல் பெரேரா ஆகியோர் இணைந்துகொள்ளவுள்ளனர்.இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் நியூசிலாந்தை சார்ஜாவில் எதிர்கொள்ளும் இரண்டாவது அரையிறுதியில், தென்னாப்பிரிக்காவின் ஏஜென்பேக் மற்றும் அவுஸ்திரேலிய பொலோசாக் ஆகியோர் நடுவர்களாக செயற்படுவார்கள்.இருவருடன் அவுஸ்திரேலியாவின் எலோயிஸ் செரிடன் மூன்றாவது நடுவராகவும், இந்தியாவின் விருந்தா ரதி நான்காவது நடுவராகவும் இணையவுள்ளனர். மேலும், போட்டி நடுவராக இந்தியாவின் ஜி.எஸ்.லட்சுமி செயற்படவுள்ளார்000
  • 1031
·
Added a news
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவதில் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றதுபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.இந்த பதவி வெற்றிடங்கள் நிரப்பப்டாமையினால் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே, அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு குறித்த மாணவர்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வ ஆவணங்கள் கிடைக்கப் பெற முன்னதாகவே சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களை சேர்க்கும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாணவர்களின் காலம் விரயமாகக் கூடாது என்பதற்காக இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி அவசியமாகின்றது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாதாந்தம் இரண்டு தடவைகள் மட்டுமே கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, எதிர்வரும் 24ம் திகதியே ஆணைக்குழுவின் அடுத்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.அன்றைய தினம் வரையில் புதிய அதிகாரிகள் கூடாவிட்டால் மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மேலும் தாமதமடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கடந்த 14ம் திகதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்000
  • 1036
·
Added a news
இலங்கையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் இலங்கையில் ஐந்து வயதுக்குக் குறைந்த பராயத்தில் உள்ள 10 ஆயிரத்து 323 சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதே ​போன்று 25 ஆயிரத்து 269 பேரளவான ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஐந்து வயதுக்குக் குறைவான இலங்கைச் சிறுவர்களில் வயதுக்கேற்ற எடையைக் கொண்டிராத சிறுவர்கள் இரண்டு இலட்சத்தி 15 ஆயிரத்து 386 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.அதற்கு மேலதிகமாக வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு லட்சத்தி 33 ஆயிரத்து 538 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குடும்ப சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.000
  • 1034