Feed Item
Added a news 

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுகாவில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை ஐஸ் கிரீம் விற்க ஒருவர் வந்துள்ளார். அவரிடம் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஐஸ் கிரீம் வாங்கியுள்ளனர். அவர்கள் ஐஸ் கிரீம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மூன்று பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

ஐஸ் கீரிம் சாப்பிட்ட ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகளான பூஜா, பிரசன்னா வீட்டிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது தாய் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரேகெரே காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து, உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அவர்களது தாய் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஐஸ் கிரீம் விற்க வந்த நபரை தேடி வருகின்றனர். ஐஸ் கிரீம் சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 300