Feed Item
Added a post 

ஒரு கணவனும் மனைவியும் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர், அப்போது மனைவிக்கு திடீரென ஒரு சந்தேகம்...

"நான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறேன் ஒரு கேள்விக்கு கூட பதிலை காணோமே, இவருக்கு என்னாச்சு!" ஒருவேளை தன்னுடைய கணவனுக்கு காதுதான் கேட்கவில்லையோ காலையில் நன்றாகத்தானே இருந்தார் என்று? பயந்தவள் ஆனால் அதை... தன் கணவனிடம் நேரடியாக கேட்க அவளுக்கு கொஞ்சம் தயக்கம், உடனே தன்னுடைய செல்போனை எடுத்து இந்த விஷயத்தை அவளின் உறவுக்கார பெண் டாக்டருக்கு மெசேஜ் எழுதி அனுப்பினாள்...

அந்த டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...

இருபது அடி தூரத்தில் நின்றுகொண்டு உங்கள் கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,... அவரின் காதில் விழவில்லையா? அல்லது கேட்காதது போல் நடிக்கிறாரா! என்று அவர் கண்களை உற்றுப் பாருங்கள்,.... மேலும் சந்தேகம் எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்...

அதற்கும் பதில் வரவில்லை எனில் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லுங்கள், காது கேட்காதது போல் நடித்தாலும் சொன்னதையே திரும்ப சொன்னால் யாருக்கேனும் கோபம் வரும்தானே? அதுவும் பிடிபடவில்லை எனில்... அவரை என் கிளினிக்கு அழைத்து வாருங்கள்...

குழப்பத்தில் இருந்தவள், டாக்டர் சொல்லியதை செய்து பார்க்க... எழுந்து வீட்டு வாசலில் நின்று உள்ளிருந்த கணவனிடம்...

இன்று பசங்களுக்கு பள்ளிக்கூட கட்டணம் கட்டியாச்சானு? கேட்டாள்...

பதில் எதுவும் இல்லை...

பின் வீட்டு வரவேற்பறையில் நின்று அதே கேள்வியைக் திரும்ப கேட்டாள்... அதற்கும் பதில் ஒன்றும் வரவில்லை... மீண்டும் ஹாலில் நெருங்கி வந்து திரும்பத் திரும்ப அதே கேள்வியை கேட்டாள்...

ம்ம்ஹும்ம்...

மறுபடியும் சமையலறை வாசலில் நின்றுகொண்டு மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்... கணவரிடமிருந்து எந்தவொரு பதிலுமே வரவில்லை...

"அய்யய்யோ... போச்சு என் புருசனுக்கு ரெண்டு காதுமே கேட்கவில்லையே என்ன செய்வேன், என்று புலம்பியவள்... வேகமாக ஓடிவந்து கணவனின் அருகில் அமர்ந்து கொண்டு அவன் காது அருகே சென்றுச் சத்தமாக மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.... படார் என தலையை திருப்பிய கணவன் தலையை சொரிந்தபடியே எழுந்து கோபத்துடன்...

”ஏன்டீ லூசு ! இப்படி காதுல வந்து கத்துற, எத்தனை தடவைதான் கேட்ட கேள்வியே திரும்பத் திரும்ப கேட்ப... நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்..."

அவன் மனைவி அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய்விடுகிறாள்........

...ஓ... என்று தலையை சொரிந்தவள் மயங்கி கீழே விழுகிறாள்...

உண்மையில் காது கேளாமல் போனது அவன் மனைவிக்குத்தான்............!

இப்படித்தான் பலர் பிரச்சனையை தன்னிடம் வைத்துக்கொண்டு... அது பிறரிடம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்,

  • 919