·   ·  244 posts
  •  ·  0 friends

பெண்மையைப் போற்றுவோம்

ஒரு பெண்ணின் கணவர் ஒருவர் தற்செயலாக ஒரு உளவியல் நிபுணரை சந்தித்தார்.அப்போது நடந்த உரையாடல்.

நிபுணர்: நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்..?

கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

*உங்கள் மனைவி..?

*அவள் வேலைக்கு செல்வது கிடையாது.வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்

*நிபுணர்: ஓ..அப்ப குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?

*என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லை சும்மாதானே இருக்கா.

*தினமும் காலை உணவு சமைப்பதற்கு உங்கள் மனைவி எப்போது எழுவார்?

*அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

*உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?

*என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்கு தான் வேலையில்லையே.

*பள்ளியில் விட்டுவந்த பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

*மார்க்கெட்டுக்கு செல்வார், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பார், துணி துவைப்பார். உங்களுக்கு தெரியுமா... அவளுக்குத்தான் வேலையில்லையே..

*மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

*நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

*பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

*இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

நிபுணர்: உங்கள வாக்குமூலப்படி அதிகாலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை...என ஓடும் பெண் அவள். அவளை 'வீட்டுல சும்மாதானே இருக்கா' என்று பேசுவது எவ்வளவு கொடுமை? அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது.

ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள, இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?'

என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலை பாருங்கள்.

*நான் ஒரு மகள்

*நான் ஒரு மனைவி

*நான் ஒரு மருமகள்

*நான் ஒரு தாய்

*நான் ஒரு அலாரம்

*நான் ஒரு சமையல்காரி

*நான் ஒரு வேலைக்காரி

*நான் ஒரு ஆசிரியர்

*நான் ஒரு செவிலியர்

*நான் ஒரு பணியாளர்

*நான் ஒரு ஆயா

*நான் ஒரு பாதுகாவலர்

*நான் ஒரு ஆலோசகர்

*நான் ஒரு நலன் விரும்பி

*எனக்கு பகலிலும் விடுமுறை இல்லை. *இரவிலும் என்னை விடுவதில்லை. *உடல்நிலை சரியில்லை என்றாலும் லீவு எடுக்க முடியாது.

ஆனால் எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் அம்பு, 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கேன்?'

*ஆண்களே உங்கள் மனைவியை மதியுங்கள். மனோரீதியாக

*அவளுக்கு ஓய்வும் கொடுங்கள்..

*இதில் இன்னும் மோசம்..! வேலைக்கு

செல்லும் பெண்களின் நிலை.

பெண்மையை போற்றுவோம்.

  • 101
  • More
Comments (0)
Login or Join to comment.