·   ·  289 posts
  •  ·  0 friends

கஞ்சன்

ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான்.

ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.

நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.

கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை. அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க, அவர்கள் வேண்டாம் என்றனர்.

அவரும் விடாமல், ”நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள். நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது. சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம். ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,” என்றார்.

உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்.

ஹெலிகாப்டர் இயக்குநர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.

குட்டிக் கரணம் போட்டார். வேகமாக இயக்கினார். ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை.

கீழே இறக்கியதும் இயக்கு3ர் அந்தக் கஞ்சனிடம், ”எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?” என்று வியப்புடன் கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக, ”எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் சமாளித்து விட்டேன்,” என்றான்.

அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,

”என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.” என்று பெருமையாக கஞ்சன் சொன்னான்,

  • 454
  • More
Comments (0)
Login or Join to comment.