·   ·  1669 posts
  •  ·  0 friends

கும்பகோணம் தாராசுரம் கோயிலில் உள்ள "இசைப்படிகள் "

இந்த கோயிலை கட்டியவர் இரண்டாம் ராஜராஜ சோழன். இவர் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் ஆவார்.

கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழகிய கோயில் வந்து விடும் .

ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு "ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும்.

ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும். இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது.

அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.

உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.

தவறாமல் காண வேண்டிய கலைநயம் மிக்க கோயில்களில் இதுவும் ஒன்று.

(படத்தை பாருங்கள்... மக்கள் இந்த கலை பொக்கிஷத்தின் அருமை புரியாமல் எப்படி சேதமாக்கி இருக்கிறார்கள் )

  • 59
  • More
Comments (0)
Login or Join to comment.