- · 0 friends
அதிகாரம் என்பது மக்களின் நம்பிக்கையில் இருக்கிறது
தரையில் விரித்து அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பவர், ஐவரி கோஸ்ட் (Côte d’Ivoire) நாட்டின் ஜனாதிபதி டாக்டர் ஹசன் அப்துர் ரஹ்மான் வத்தாரா அவர்கள்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற அவர் எந்த ஆடம்பரமும் இன்றி, தனது சொந்த செலவில் புனித பயணத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சவூதி அரச மன்றம் மரபுப்படி வழங்கியிருந்த அரண்மனை தங்குமிடத்தையும் பணிவுடன் மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை பார்த்த பலரின் மனதில் எழுந்த ஒரே கேள்வி — “அவருடைய பாதுகாப்பு எங்கே?”
ஏனெனில், அவருடன் எந்த பெரிய பாதுகாப்பு படையும் இல்லையென கூறப்படுகிறது.
ஆனால் அதற்கான பதிலை இந்த ஒரு படம் தானாகவே சொல்லுகிறது…
ஒரு தலைவர் தனது மக்களிடம் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தால், மக்கள் அவரை அச்சமின்றி நேசிப்பார்கள். மக்கள் பாதுகாப்பாக வாழும் நாட்டின் தலைவர், தானும் அமைதியாக உறங்க முடியும்.
ஹசன் அவர்கள் ஆட்சியை ஏற்ற பின்னர், ஐவரி கோஸ்ட் நாடு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையை அடைந்ததாக உலக ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. குறுகிய காலத்திலேயே அந்நாட்டின் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகைப்படம் ஒரு சாதாரண காட்சி அல்ல… அதிகாரம் என்பது ஆடம்பரத்தில் இல்லை, மக்களின் நம்பிக்கையில் இருக்கிறது என்பதற்கான நினைவுச் சின்னம்.
அல்லாஹ் அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு, அனைத்து நன்மைகளிலும் வெற்றியளிப்பானாக. ஆமீன் 🤲
குறிப்பு : இது 2024 ஹஜ் புகைப்படம் தற்போது வைரல்