·   ·  729 posts
  •  ·  0 friends

மூச்சு விட சிரமமா உள்ளதா?

ஆறு மிளகுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு இடித்து ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் இதை சேருங்கள். பின் அடுப்பை பற்ற வைத்த சூடேற்றுங்கள். மிளகுடன் மூன்று திப்பிலிகளை இடித்து சேருங்கள். பின்னர் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி துண்டுகளாக கிழித்து சேருங்கள். ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டியதும் அடுப்பை அணைத்து நா பொறுக்கும் சூட்டில் ஆற விட்டு விடுங்கள். இந்த கசாயத்தை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பு குடித்து வந்தால் விரைவாகவே சுவாசக் குழாய் விரிவடைய ஆரம்பித்து விடும். இதனால் மூச்சு விடுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல சுவாசம் உண்டாகக்கூடும்.

  • 82
  • More
Comments (0)
Login or Join to comment.