
கல்லீரல்
கல்லீரல் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் இரவு தூக்கம் தான் .
கண்டிப்பாக இரவு தூங்கக் கூடிய உயிரினமாக மனித இனம் படைக்கப்பட்டிருப்பதால் இரவு 10 மணிக்கு முன்பாக உறங்கச் செல்ல வேண்டும்.
10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஆழ்ந்து உறங்க வேண்டும்.
எவர் தன் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணம் மீது மோகம் கொள்ளாமல் தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் இரவு உறங்க செல்கிறார்களோ அவர்களின் கல்லீரல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும்.
ஒரு செல்போனை எப்படி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்திவிட்டு அதற்கு சார்ஜ் செய்கிறோமோ அதே போல இந்த மனித உடலின் கல்லீரலை சார்ஜ் செய்யக்கூடிய நேரம் என்பது இரவு 10 மணி முதல் 4 மணி வரை ஆகும்.
அடுத்ததாக இரவு ரசாயனம் அதிகம் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும் மாமிச உணவுகளை உட்கொள்ளாமல் இரவு உணவான எளிமையான உணவுகளை உட்கொண்டால் கல்லீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.
மருந்து மாத்திரைகள் தான் கல்லீரலை அதிகமாக சேதப்படுத்தக்கூடிய ஒன்று ஆகையால் ரசாயன மருந்து மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருந்தால் உங்கள் கல்லீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.
உடலின் ஆரோக்கியத்திற்கு கல்லீரல் எந்த அளவு உதவி செய்கிறது அந்த கல்லீரலுக்கு இரவு தூக்கத்தின் மூலம் நாம் உதவி செய்ய வேண்டும் அப்படி உதவி செய்யும்பொழுது நீண்ட ஆரோக்கியத்தோடு வாழலாம்.