·   ·  490 posts
  •  ·  0 friends

காமராஜரின் யோசிக்கும் திறன்

"என்ன வேணாலும் நடந்துட்டு போகுதுயா.. மொதல்ல அந்த நிறுவனத்தை மூட சொல்லி உத்தரவு போடு.." 1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் போர் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த போரில் நாம் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்த தோல்வியால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். அந்த சமயம் நமது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவர் நமது காமராஜர் ஐயா..

காமராஜர் நேருவிடம் கேட்டார்.

"ஏன்.. எதனால் நாம் தோல்வி அடைய நேர்ந்தது?" என்று கேட்டார்.

அப்பொழுது நேரு சொன்னார்.

"நமக்கு இருக்கக்கூடிய இரணுவ ஆயுதங்கள் எதுவும் அவ்வளவு வலிமையானதாக இல்லை. நாம் நவீன இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வாங்கி நம்முடைய இராணுவத்தை வலிமைப்படுத்தினால் தான், நாம் ஜெய்க்க முடியும்..!" என்று நேரு சொன்னார்.

"அப்டினா, முதல்ல அத பண்ணுங்க.. தேசத்தோட பாதுகாப்புதான ரொம்ப முக்கியம். உடனே அந்த இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வாங்கி இராணுவத்தை வலிமைப்படுத்த வேண்டியது தான..." என்று கேட்டாராம் காமராஜர்.

நேரு சொன்னார், "நாம் அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்கள் எல்லாம் வாங்கிவிட்டோம்.. ஆனால், அதில் ஒரு சின்ன சிக்கல்" என்றார்.

"என்ன சிக்கல்?"- காமராஜர்,

"அந்த இராணுவ ஆயுதங்கள் அனைத்தையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென்றால், 'அங்கு அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பேங்க் நமக்கு ஜாமீன் கையெழுத்து (அதாவது சூரிட்டி) போட்டால் தான் நமக்கு அந்த ஆயுதங்களை அனுப்பி வைப்போம்' என்று அமெரிக்கக்காரன் சொல்லிவிட்டான். ஆனால், நம் இந்தியாவை நம்பி அங்கிருக்கக்கூடிய எந்த வங்கியும் 'Assurance' உறுதியளிக்க தயாராக இல்லை. அதான் என்ன பண்றதுனு தெரியல" என்று மிகவும் கவலையோடு நேரு காமராஜரிடம் சொன்னார்.

காமராஜர் தன்னுடைய ஆட்சியில் பத்துக்கும் மேற்பட்ட அணைகளை கட்டியவர். அப்பொழுதே ஏகப்பட்ட நீர்மின் நிலையங்கள், மதிய உணவுத் திட்டம் என்று நிறைய வித்தியாசமான ஐடியாக்களை புகுத்தியவர் காமராஜர். அவருக்கா ஐடியாவிற்கு பஞ்சம் இருக்கப் போகிறது. காமராஜர் வழக்கம்போலவே சிறிது வித்தியாசமாக யோசித்தார்.

"ஒன்னும் பிராப்ளம் இல்ல நேரு. அமெரிக்க வங்கியில் கிளை ஏதாவது இந்தியாவில் இருக்கிறதா..?" என்று கேட்டார் காமராஜர்,

"இருக்கு. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க் கிளை இந்தியாவில் இருக்கு"

உடனே காமராஜர் ஐயா, "இங்கிருக்கக்கூடிய அந்த அமெரிக்க வங்கியை முதலில் மூட உத்தரவு போடு" என்றார் காமராஜர்.

நேரு பதறிப் போய் "என்னது.. அமெரிக்க நிறுவனத்தை நாம் மூட வேண்டுமா? அப்படி செய்தால் உலகளவில் பிரச்சனை வந்துவிடும்" என்று பயந்தார் நேரு.

"என்ன வேணாலும் நடந்துட்டு போகுதுயா.. மொதல்ல அந்த நிறுவனத்தை மூட சொல்லி உத்தரவு போடு.." என்றார் காமராஜர்.

காமராஜர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நேருவும் அந்த அமெரிக்க நிறுவனத்தை அழைத்து "நீங்கள் எங்களுக்கு உதவி பண்ணாத காரணத்தால், சீக்கிரம் உங்கள் கடையை மூடிவிட்டு உங்கள் நாட்டுக்கு நடையைக் கட்டுங்கள்" என்றாராம்.

உடனே அந்த வங்கியில் மேலாளர் பதறிப்போய் அமெரிக்காவைத் தொடர்புக் கொண்டு விஷயத்தைக்கூறி, அந்த அமெரிக்க அதிகாரிகள் உடனே பதறிப் போய் இந்தியாவிற்காக சூரிட்டி கையெழுத்துப் போட்டு அடுத்த பதினைந்தாவது நாளில் அந்த நவீன ஆயுதங்கள் இந்தியாவிற்கு வந்து இறங்கின.

இதுதாங்க காமராஜர் ஐயாவின் மாத்தி யோசிக்கும் திறன்.!

'அவனுடைய கடையை இங்கு மூடினால், அவன் வழிக்கு வருவான்' என்ற அந்த மாத்தி யோசிக்கும் திறன் தான், நம் தேசத்தின் பாதுகாப்பையே நிர்ணயம் செய்திருக்கிறது.

  • 676
  • More
Comments (0)
Login or Join to comment.