- · 0 friends
படித்தில் பிடித்தது...
தவறாக எழுதியது ‘பேனாவாக'
இருந்தாலும் எல்லோரும்
காகிதத்தைக்
கிழித்துப் போடுவதைப் போல.
தவறு செய்தவவரை விட்டுவிட்டு
இன்னொருத்தரிடம்,
குற்றம் கண்டுபிடிப்பதே இங்கு பலரின்வேலை..
பெரும்பாலான மனிதர்கள்
தன்னலம் மிக்கவர்களாக வலம் வருகிறார்கள்.
நேசித்தால் பிழைகளைப் பார்ப்பதில்லை,
வெறுத்தால்
நல்லதைப் பார்ப்பதில்லை.
விருப்பத்திற்கும், நேசத்திற்கும் வேறுபாடு உண்டு.
பூக்களை விரும்பும் அன்பர்கள் பறித்துச்சூடுகிறார்கள்,
பூக்களை நேசிப்பவர்கள்
செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.
உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுங்கள்.
உங்களை யாருக்குப் பிடிக்கவில்லையோ,
அவர்கள் மகிழ்ச்சிக்காக
அவரை விட்டு விலகுங்கள் அமைதியாக.