- · 0 friends
உட்கார்ந்தால் எழுந்திருக்காத மருமகனும் , படுத்தால் எழுந்திருக்காத மருமகளும்
ஒரு பெரியவர் தன் மகனுக்கும் மகளுக்கும், மருமகள் மற்றும் மாப்பிள்ளை தேடி அலைந்தார்.
தன் நண்பரிடம் தன் மகனுக்கு ஒரு பெண்ணையும்
தன் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்குமாறு கேட்டார்.
அதற்கு அந்த நண்பர் கேட்டார்
எந்த மாதிரி மாப்பிள்ளை மற்றும் எந்த மாதிரிப் பெண் வேண்டும் என்றார்.
அதற்கவர்" உட்கார்ந்தால் எழுந்திருக்காத மருமகனும் "
"படுத்தால் எழுந்திரிக்காத மருமகளும்" தேவை என்றார்.
அவரது நண்பர் ஆச்சரியத்துடன் அது என்ன உட்கார்ந்தால் எழுந்திருக்காத மருமகன்? படுத்தால் எழுந்திருக்காத மருமகள்? என்று கேட்டார்.
அதற்கவர் கூறினார்.
நான் அடிக்கடி வெளியே போய் வருவேன். அப்போது என் மருமகன் கட்டிலில் அல்லது நாற்காலியில் அமர்ந்திருந்தால் மரியாதை நிமித்தமாக என்னை பார்த்தவுடன் அடிக்கடி எழுந்திருப்பார்.
இது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும்.
எனவே நான் வராத பகுதியில் சென்று என் மருமகன் அமர்ந்திருந்தால் எனக்கும் சங்கடம் இல்லை அவருக்கும் சிரமம் இல்லை. (அந்தக் காலங்களில் மாமனார் முன் மருமகன் அமரமாட்டார்).
அடுத்து, படுத்தால் எழுந்திருக்காத மருமகள்.
அதாவது வீட்டு மருமகள் தனது வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு படுக்கச் சென்றபின் பின்
கதவு தாள் போட்டாச்சா? பாலுக்கு உறை ஊத்தி ஆச்சா?
என்று அடிக்கடி எழுந்து சென்று பார்க்கக் கூடாது. படுக்கப் போகுமுன் அனைத்து வேலைகளையும் சரிவர செய்து முடித்து விட்டு படுக்க வேண்டும்.
அதனால் தான் படுத்தால் எழுந்திருக்காத மருமகள் வேண்டும் என்றார்.
எப்படி பெரியவரின் எண்ணம்.? நல்லவேளை சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை.