- · 0 friends
நிஜக் கதாநாயகன்
மதுரை தத்தனேரியைச் சேர்ந்த 86 வயது முதியவர் திரு. ராஜேந்திரன் ஐயா.
இவர் ஒரு சாதாரண அப்பள வியாபாரி.
ஆனால், இவர் செய்துள்ள உதவிகள் பல கோடீஸ்வரர்களை வியக்க வைக்கும்...!
இவர் செய்த சேவைகளின் பட்டியல்:
மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டும் இதுவரை ரூ.1.81 கோடி செலவில் வகுப்பறைகள், உணவுக்கூடம் மற்றும் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பின் போது நேரில் சென்று லட்சக்கணக்கில் உதவி செய்துள்ளார்.
அடுத்து மீனாட்சியம்மன் கோயில் அருங்காட்சியகத்திற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.
மனம் நெகிழ வைக்கும் மனிதநேயம்:
தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தான் என்பதைச் செயலில் காட்டியுள்ளார்.
தன்னிடம் பணிபுரியும் 40 தொழிலாளர்களை விமானத்தில் ஹைதராபாத்திற்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற பெருந்தன்மை இவருக்கு உண்டு.
"மதுரைக்கு வரும்போது நான் எதையும் கொண்டு வரவில்லை, இங்கு வந்து சம்பாதித்ததை மதுரை மக்களுக்கே கொடுக்கிறேன்" என்று அவர் கூறுவது நம் கண்களைக் கசிய வைக்கிறது.
ஏன் இவர் உதாரணபுருஷர்.....
இன்றைய காலத்தில் அரசியலையும் அதிகாரத்தையும் எதிர்பார்க்காமல், தனது சொந்த உழைப்பில் கிடைத்த வருமானத்தை வாரி வழங்கும் ஒரு மாமனிதர் இவர். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், மனிதாபிமானத்தில் இவர் ஒரு பல்கலைக்கழகம்....
விளம்பரமின்றிச் சேவை செய்த இவரை அடையாளம் கண்டு பாராட்டிய மாநகராட்சி ஆணையருக்கு நன்றிகள்.
ராஜேந்திரன் ஐயா போன்ற நல்ல உள்ளங்கள் நீடுழி வாழட்டும்...!