·   ·  488 posts
  •  ·  0 friends

நம்மால் முடியாதா..? சிந்தியுங்கள்

ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் இது. ஜப்பான நாட்டில். பெரும்பான்மையான வீடுகள் மரத்தால், இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர். தன் வீட்டை புதுப்பிப்பதற்காக, மரத்தாலான சுவரை பெயர்த்து எடுத்தார். அப்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில். ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கியது என்று ஆராய்ந்தார். வெளிப்பகுதியிலிருந்து ஆணி அடிக்கும்போது. அந்த ஆணி. பல்லியின் ஒரு காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆணி அடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் இருக்கும். எப்படி இந்த பல்லி. மூன்று ஆண்டுகள் உயிருடன் இருந்தது என்ற சந்தேகம் வர, மேற்கொண்டு வேலை செய்யாமல், அந்த பல்லியை கண்காணித்து வந்தார்.

சிறிது நேரம் சென்றதும், இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டார் அந்த பல்லி. தன் வாயிலிருந்து உணவை எடுத்து சுவரில் சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்து ஆச்சரியமடைந்தார் மூன்று ஆண்டுகளாக. சுவரில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்துள்ளது. இன்னொரு பல்லி

சாதாரண பல்லியால் முடியும்போது. நம்மால் முடியாதா? 10 மாதம் சுமந்த தாய்- தந்தைக்கு, அவர்கள் முடியாத காலத்தில் நம்மால் உணவளிக்க முடியாதா..?

  • 632
  • More
Comments (0)
Login or Join to comment.