·   ·  622 posts
  •  ·  0 friends

ஒற்றைத் தலைவலியால அவதிப்படறீங்களா?

ரொம்ப நாளா நாள்பட்ட ஒற்றைத் தலைவலியால அவதிப்படறீங்களா? பார்க்காத வைத்தியமில்ல, ஆனா இந்த தலைவலியை சரிபண்ணவே முடியலையா? இனிமேல் அந்த கவலையை விடுங்க. இந்த ஒரே ஒரு சூப்பர் மூலிகை பானம் மட்டும் போதும். உங்களோட தலைவலி எந்த பக்கம் இருந்துச்சுன்னே தெரியாம போயிடும்.

லைவலியைப் பொருத்தவரைக்கும் பல வகைகள் இருக்கின்றன. அதற்கான காரணங்களும் பல இருக்கின்றன. ஆனால் தலைவலியிலேயே பல வகைகள் உண்டு. அதில் ஒற்றைத் தலைவலி தான் இருப்பதிலேயே சிரமமான ஒன்று. ஏனென்றால் மற்ற தலைவலிகளைப் போல இல்லாமல் இது கொஞ்சம் கொடுமையானதாகவே இருக்கும். மற்ற தலைவலி வந்தால் சில மணி நேரங்களில் சரியாகிவிடும். ஆனால் ஒற்றைத் தலைவலி அப்படியல்ல. நாள்கணக்கில் இருக்கும். எந்த வேலையுமே செய்ய முடியாது.

நெற்றியின் பாதியில் இருந்து ஒருபக்கத்தில் மட்டும் வலிக்கும். அது அப்படியு காதுக்குப் பின்னால் கழுத்தின் பின்பக்கம் வரைக்கும் வலி இருக்கும். வலியைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. நீண்ட நேரம் வரைக்கும் இந்த வலி இருக்கும். சில சமயங்களில் ஒரு நாளைத் தாண்டி இரண்டு நாள் வரைக்கும் கூட வலி இருக்கும். மற்ற தலைவலி என்றால் அந்த பகுதியில் தான் வலி இருக்கும். நெற்றி மட்டும் தலையில் வெடுக் வெடுக்கென்று கரண்ட் ஷாக் அடிப்பது போல இழுக்கும்.

சின்னதாக ஏதாவது சத்தம் கேட்பது போல இருந்தால் கூட எரிச்சல் உணர்வு அதிகமாக இருக்கும். ிலருக்கு ஒற்றைத் தலைவலி வந்து விட்டாலே குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்ட உணவுகளும் இருக்கும். குறைந்தது ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரைக்கும் இந்த வலி இருக்கும். அப்படிப்பட்ட கொடுமையான ஒற்றைத் தலைவலிக்கு தான் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சூப்பர் பானம் ஒன்றை தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருள்கள்

இஞ்சி - 1 இன்ச் அளவு,

மிளகு - 10,

எலுமிச்சை பழம் - 1,

மஞ்சள் - அரை ஸ்பூன்,

தண்ணீர் - 300 மில்லி,

இந்த எளிமையான வீட்டில் இருக்கும் பொருள்களை மட்டும் வைத்தே ஒற்றைத் தலைவலியைக் குறைக்கலாம். தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் ஆரம்பத்தில் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தலாம்.

இந்த எளிமையான பானத்தைத் தயார் செய்து குடிப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலி மட்டுமல்ல, நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இது ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில சேர்க்கப்படும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. மிளகில் உள்ள பைபரின் மற்றும் எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி ஆகியவை கல்லீரல் கழிவுகளைச் சுத்தம் செய்யும்.

மேற்கண்ட இத்தனை நன்மைகள் கொண்ட பானத்தைக் குடித்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஒற்றைத் தலைவலியை சரிசெய்வதோடு நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கும் மிகப்பெரிய அளவில் உதவுகிறது.

  • 84
  • More
Comments (0)
Login or Join to comment.