
தேன் நெல்லிக்காய் நன்மைகள்
இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால், நெல்லிக்கனியை தந்தான் சொல்லுவோம். நெல்லிக்கனியால் மனித சமூகத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.
நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து ஒன்று தினமும் ,சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும்.
- உடலில் தேங்கியுள்ள சளி அனைத்தும் வெளியேறி விடும்; தொண்டைப் புண்ணும் குணமாகும்.
- ரத்த சோகை உள்ளவர்கள், தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாவதோடு, சிவப்பு ரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.
- முடி கொட்டும் பிரச்சினை தடுக்கப்பட்டு, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
- இதயத்தில் உள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய் வருவதைத் தடுக்கிறது.
- முகப் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- கண்களில் ஏற்படும் எரிச்சல், நீர் வடிதல் மற்றும் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
- செரிமானப் பிரச்சினை மற்றும் பசியின்மையை சரி செய்கிறது.
- சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் தடுக்கப்படுவதோடு, முழுவதுமாக குணமாகி விடும்.