·   ·  601 posts
  •  ·  0 friends

கடவுளுக்கு பணம் கேட்டு கடிதம் எழுதிய சிறுவன்

அமெரிக்கச் சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணக்கஷ்டம். அவனுக்கு 50 டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகுநாட்களாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் 'கடவுள், அமெரிக்கா' என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான்.

பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அந்த கடிதத்தை, ஒரு விளையாட்டாக வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அதிபருக்கு ஒரே ஆச்சர்யம். சரி... இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறுபையனுக்கு ஐம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம் என்று அனுப்பி வைத்தார்.

பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினான். ரொம்ப நன்றி கடவுளே... நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க ... நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஆபீஸ் மூலமா பணம் ஆனாலும்.. அனுப்புனதை நான் கவரைப் பார்த்து தெரிஞ்சுக் கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க... நீங்க அனுப்புன காசுல, பாதியை அவங்க திருடிட்டாங்க...

  • 111
  • More
Comments (0)
Login or Join to comment.