·   ·  874 posts
  •  ·  0 friends

விவேகானந்தரின் மனோ பலம்

விவேகானந்தர் இங்கிலாந்தில் இருந்தபோது ஒரு பண்ணையைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது அந்தப் பண்ணையில் இருந்த ஒரு காளை, கட்டை அவிழ்த்துக் கொண்டு ஆவேசமாக ஓடி வந்தது.

அங்கிருந்த அனைவரும் தலை தெறிக்க ஓடினர். ஆனால் விவேகானந்தர் மட்டும் அசையாமல் நின்று காளையையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காளை அவருக்குப் பக்கத்தில் வந்து சிறிது நேரம் அவரை ஏறிட்டுப் பார்த்து விட்டுத் திரும்பிப் போய்விட்டது.

பின்னர் அங்கிருந்த பணியாளர்கள் விவேகானந்தரை “சுவாமி! எந்த தைரியத்தில் நெருங்கி, "சுவாமி! அசையாமல் நின்று கொண்டிருந்தீர்கள்..? என்று கேட்டனர்.

அதற்கு விவேகானந்தர், என்னைத் தூக்கி எறிந்தால் நான் எவ்வளவு உயரம் மேலே போயிருப்பேன் என்று கணக்கிட்டுக்கொண்டு இருந்தேன்..'என்றாராம் அமைதியாக.

விவேகானந்தரின் உடல் பலமும் மனோ பலமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  • 48
  • More
Comments (0)
Login or Join to comment.