மருதாணியின் மருத்துவப் பயன்கள் :
மருதாணி உடலுக்கு குளிர்ச்சி தரும், பெண்கள் கைகளில் அழகுக்காக வைத்துக் கொள்ளும் மருதாணியில் , மருத்துவ பல குணங்கள் நிறைந்துள்ளன .
* மருதாணி இலையுடன் சிறிது வசம்பு , மஞ்சள் , கற்பூரம் சேர்த்து அரைத்து , உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் இடத்தில் பூசினால் , ஒரு வாரத்தில் கட்டி குணமாகும்
* மருதாணி இலையை அரைத்து , கைகளுக்கு வைத்தால் , உடல் வெப்பம் தணியும் * மருதாணி இலை மிகச்சிறந்த கிருமி நாசினி . இது , நம்மிடயே கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது .
நகசுத்தி வராமல் தடுக்கும் இருக்குமருதாணி இலை , பித்தத்தை அதிகமாக்கும் .
கை , கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள் , அழுக்குப்படை , கட்டி . பித்தவெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும் மருந்து !
* மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் , தலைவலி குணமாகும் . அரிப்பு , படை போன்ற தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது , மருதாணி
* மருதாணி இலையை அரைத்து , அம்மைப் புண்களுக்கு பூசினால் , நான்கைந்து நாளில் குணமாகும் .
கட்டிகளுக்கும் அரைத்துப் பூசலாம் இள நரையை அகற்றுவதற்கு பயன்படுகிறது .
இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் , அரை லிட்டர் விட்டு , மருதாணி இலை , 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும் . இலையின் சாறு எண்ணெயில் சேர்ந்து சிவப்பாக மாறிவிடும் . இந்த தைலத்தை தினமும் தலைக்கு தேய்க்க , முடி வளரும் , நரை மறையும் மருதாணி இலையை நன்கு நீர் விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை , கால்களிலும் , உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் , கை , கால் எரிச்சல் உடனே நீங்கும் .