·   ·  1592 posts
  •  ·  0 friends

ஆட்டுகுடல் வற்றல்

குடல்_வற்றல்...ஆட்டுக்குடல்..

என்றும் இன்னும் பலபெயர்களில் அழைக்கப்படும் இத்திண்பண்டம் 1980களில் தமிழகம் முழுதும் பரவியது.இன்றுவரை இதன் சுவை யாவர்க்கும் இனியதே.இதனை உண்பதால் உடல்கேடோ..

நோயோ வந்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.ஆனால் இது ஏனோ தமிழ்நாடு கேரளா ஆந்திரா வைத் தாண்டவே இல்லை..பாழ்படுத்தும் பானிபூரி பலநூறு மைல்கள் கடந்து இங்கு காலூன்றி உள்ளது. பெரும்தொழில்வாய்ப்பை உண்டாக்கித் தந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவர்களில் யாரோ ஒருவர் இத்திண்பண்டத்தின்மீது சற்றே_கவனம் செலுத்தினால் தரமேம்பாடும்,

வணிகநோக்கிலான வடிவ மேம்பாடும், உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாடும், ஏற்றுமதி தரத்திலான குழந்தைகளைக்கவரும் வண்ண வடிவமைப்போடு கூடிய பொட்டல மேம்பாடும் பெற்று உலகளாவிய கவனம் பெறும்.

மற்றப்பொருட்களைவிட உணவுப்பொருட்கள் உலக அளவில் வணிகவாய்ப்பை உடையன.உலகநாடுகளுக்கு

இந்திய உணவுகளின் மீது நம்பிக்கையும் மரியாதையும் உண்டு. அதிலும் தமிழகத்தின் உணவுகளுக்குப் பெரும்மதிப்பே உண்டு..

லேஸ் ,குர்குரே போன்ற நொறுக்குத் தீனிவகைகள் குழந்தைகளை ஆட்டிப்படைக்கின்ற விதத்தை நாமறிவோம்.

ஆட்டுக்குடல் வற்றலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியது.தமிழகத்தின் சிறு குறு தொழில் முனைவோர்கள் யாராவது மாநில அளவிலாவது முயற்சிசெய்யலாமே...

  • 417
  • More
Comments (0)
Login or Join to comment.