·   ·  562 posts
  •  ·  0 friends

கல்லைக் கரைக்கும் டிரிங்க்

தேவையானவை:

வாழைத்தண்டுச் சாறு - 1 டம்ளர்,

மோர் - கால் டம்ளர்,

வெள்ளரி விதைப் பொடி - 1 டீஸ்பூன்,

இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாழைத்தண்டுச் சாறுடன் மோரைக் கலந்து, வெள்ளரி விதைப் பொடி மற்றும் இந்துப்பு கலந்து, வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

குறிப்பு:

சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள், தினமும் சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முறை அருந்துவது போதுமானது.

பலன்கள்:

*சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யும் சிறந்த பானம்.

*இதைத் தொடர்ந்து பருகினால், 5 மி.மீ-க்கும் குறைவாக உள்ள சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

*சிறுநீரகத்தைச் சுத்திகரித்து, உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

*நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

*பித்தப்பையில் உள்ள கற்களைக் கரைக்கவும் இது உதவும்.

*ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும்போது உருவாகும் யூரியா உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றும்.

*வாழைத்தண்டு, முள்ளங்கி, முள்ளங்கி இலை, வெள்ளரிக்காய், நீர் மோர் போன்றவை சிறுநீரகத்தை ஆரோக்கியப்படுத்தும் உணவுகள்.

  • 736
  • More
Comments (0)
Login or Join to comment.