மூலிகைகளின் சிறப்புப் பண்புகள்
- துளசி இலைச் சாறு சாப்பிட்டால், ரத்தத்தில் விஷத் தன்மை வெளியேறும்.
- அருகம்புல் சாப்பிட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்; தோல் வியாதிகளுக்கும் இது அருமருந்தாகும்.
- வாழைத்தண்டு சாறை மருத்துவர் ஆலோசனைப்படி, உரிய இடைவெளியில் சாப்பிட்டால், சிறுநீரகத்தை சுத்தம் செய்யும்.
- கொத்துமல்லிச் சாறு பசியைத் தூண்டும்; வாதம், நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும்.
- புதினாச் சாறு சிறந்த மலமிளக்கி; ஜீரணக் கோளாறை சரிசெய்யும்.
- வல்லாரைச் சாறு, மஞ்சள் காமாலை, நரம்புத்தளர்ச்சி, ஞாபகத்திற்கு அருமருந்தாகும்.
- தூதுவளைச் சாறு நரம்புத்தளர்ச்சியைப் போக்கும்; சளியை விரட்டும்.
- மணத்தக்காளிச் சாறு வாயுத்தொல்லையை தீர்க்கும்.
- தும்பைச் சாறு, இருமல், மார்புச்சளிக்கு அருமருந்தாகும்.
- வெங்காயம், பூண்டு கலந்த சாறு கெட்டக் கொழுப்பைக் குறைக்கும்.
- காய்கறி சாறு சாப்பிட்ட, 20 நிமிடங்களில் ஜீரணமாகி, சக்தியாக மாறும்.
- இஞ்சியை அரைத்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்தால், சுண்ணாம்பு மாதிரி அடியில் தங்கும்.இதை அகற்றி, தெளிந்ததை தேன் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.