·   ·  741 posts
  •  ·  0 friends

துயரங்களை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்?

40 வயதில் மூளையில் கட்டி வந்திருப்பது மருத்துவர்கள் மூலம் ஆங்கில நாவலாசிரியரும் விமர்சகருமான ஆண்டனி பர்ஜஸ் தெரிந்து கொண்டார். அவருக்கு முன்னால் ஒரே ஒரு குளிர் காலம், ஒரே ஒரு வசந்த காலம் ,ஒரே ஒரு கோடை காலம் இருந்தது. இன்னும் மிச்சம் இருக்கும் ஒரு வருடத்தை எப்படி அர்த்தம் உள்ளதாக ஆக்குவது என்று நினைத்தார். இதுவரை

நாவல் எழுதி இருக்காத அவர் நாவல் எழுதத் தொடங்கினார். ஒரே ஆண்டில் அவசரமாக ஐந்து நாவல்கள் எழுதினார். டி எச் லாரன்ஸ் வாழ்நாள் முழுவதும் எழுதியதை ஒரே ஆண்டில் முடித்தார். அவரது மூளையில் இருந்த கட்டி மறையத் தொடங்கியது.

76 ஆண்டுகள் வரை வாழ்ந்த அவர் 70 நாவல்கள் எழுதி முடித்தார்.A clockwise orange உலகப் பிரசித்தி பெற்றது. மிகப்பெரிய விமர்சகராக விளங்கினார் .

இந்த உண்மை சம்பவம் சொல்லும் விஷயம் இதுதான் ..நம் கஷ்டங்களை நினைத்துக் கொண்டு கண்ணீர் விடுவதை காட்டிலும் கஷ்டங்களை மறந்து பிடித்த விஷயத்திலே கவனம் செலுத்துகின்ற போது நம் கஷ்டங்கள் மறைவதோடு நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கையை இறைவன் அருள்வான்..!!

  • 156
  • More
Comments (0)
Login or Join to comment.