
ஆசிரியரின் திறமை
ஒரு கல்லூரியின் வகுப்பில் ஒரு பேராசிரியர் சீரியசாக பாடம் எடுத்து கொண்டு இருந்தார்! அவர் ஒயிட் போர்டில் எழுதி கொண்டு இருக்க ஒரு துடுக்கு மாணவன் விசில் அடித்தான்.
அவர் எழுதுவதை நிறுத்தி விட்டு யார் விசில் அடித்தது என்று கேட்க ! யாரும் உண்மையை சொல்ல வில்லை.
அப்பொழுது பேராசிரியர் இத்துடன் இந்த பாடம் முடிகிறது, ஆனால் இன்னும் வகுப்பு முடிய நேரம் இருப்பதால் உங்களுக்கு என் அனுபவ கதையை சொல்கிறேன் கேளுங்கள் என்றார்.
நேற்று நான் வீட்டில் தூங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருந்த போது தூக்கம் வர வில்லை, சரி காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு வரலாம், நாளை நேரம் இருக்காது என்று நினைத்து பெட்ரோல் போட சென்றேன்.
பெட்ரோல் போட்டு விட்டு மெதுவாக வரும்போது வழியில் ஒரு அழகான பெண் நின்று கொண்டு இருக்க சரி உதவி செய்யலாம் என்று நினைத்து பேச அவர் சொன்னார் சார் நான் வீட்டுக்கு போய் கொண்டு இருக்கேன் ஆட்டோ டாக்ஸி எதுவும் வர வில்லை என்று சொல்ல , நான் சரி உங்களுக்கு உதவுகிறேன் என்று அந்த பெண்ணை அவர்களின் வீட்டில் ட்ராப் செய்தேன்.
வண்டியில் இருவரும் நிறைய பேசினோம். அந்த பெண்ணிற்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. வீடு வந்ததும் அந்த பெண் என்னை நேசிப்பதாக சொல்ல நானும் அவளை நேசிப்பதாக சொல்லி நான் பேராசிரியராக கல்லூரியில் வேலை செய்கிறேன் என்று நம் கல்லூரியின் பெயரை சொன்னேன். இருவரும் எங்கள் ஃபோன் நம்பரை பரி மாறி கொண்டோம்.
அப்பொழுது அவர் சொன்னார் என் தம்பியும் உங்கள் கல்லூரியில் இந்த வகுப்பில் தான் படிக்கிறான் அவனை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்று அன்புடன் சொன்னார். அதற்கு நான் அவன் பெயரை சொல்லு என்று கேட்க! அதற்கு அவர் பெயர் எதற்கு அவன் தான் வகுப்பில் சூப்பரா விசில் அடிப்பான் என்றார்.
அப்பொழுது வகுப்பில் எல்லாருடைய பார்வையும் ஒரே மாணவன் பக்கம் திரும்ப !
அந்த மாணவன் அசடு வழிந்து கொண்டு எழுந்திருக்க!
பேராசிரியர் சொன்னார்!
நான் முனைவர் பட்டம் காசு கொடுத்து வாங்க வில்லை! படித்து வாங்கினேன் ! Human Psychology என்றார்!