
இங்கிலாந்து வரலாற்றில் முதல் முறை பெண்ணுக்கு பேராயர் பதவி
இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
1,400 ஆண்டுகளில் இந்த பதவிக்கு தகுதி பெற்ற முதல் பெண் 63 வயதான பிஷப் சாரா முலாலே (Dame Sarah Mullally) ஆவார்.
பிரிட்டிஷ் மன்னருக்கு முடிசூட்டுவது போன்ற முக்கியமான கடமைகளைச் செய்யும் கேன்டர்பரி பேராயராக ஒரு பெண் நியமிக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படுகிறது. கேன்டர்பரி பேராயர் உலகளாவிய ஆங்கிலிகன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.