
கனடாவில் கோவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில் கோவிட்19 தொற்றாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடா அரசு வெளியிட்ட அண்மைய அறிக்கையின்படி, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனைகளில் நேர்மறை முடிவுகள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த 7-ஆம் திகதியுடன் முடிந்த வாரத்தில், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 9.6% அதிகரிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கிறது. அண்மைய வாரங்களில் பதிவான வைரஸ் பரவல்களில் 99 வீதமானவை கோவிட்-19 சம்பவங்களாகவே உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
“கோவிட்-19 இப்போது ஒரு பருவ கால வைரஸாகவே மாறிவிட்டது.வருடம் முழுவதும் பரவினாலும், கோடைகாலத்தில் குறைவாகி, இப்போது மீண்டும் அதிகரிக்கிறது,” என மருத்துவ நிபுணர் டாக்டர் மார்லா ஷாபிரோ தெரிவித்துள்ளார்.