இலங்கை

  •  ·  Moderator
  • 1 members
  • 1 followers
  • 903 views
இன்னும் சில நாட்களில் திருமணமாக இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கி நிற்கும் கனடா மாப்பிளை ஒருவருக்கு அவரது எதிர்கால மனைவியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காதலன் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டு பின்னர் அது கனடா மாப்பிளையின் வேண்டுகோளுக்கு இணங்க வாபஸ் பெறப்பட்டுள்ளது. மணப்பெண்ணும் குறித்த காதலனும் பாடசாலைக் காலத்தில் காதலித்து வந்துள்ளார்கள். அதன் பின்னர் காதலன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து, குறித்த பெண் அவனை விட்டு பிரிந்துள்ளார். இதனால் பல தடவைகள் பெண்ணின் வீ்ட்டுக்கு காதலன் சென்று வன்முறையில் ஈடுபட்டு ஒரு தடவை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.அதன் பின்னர் கடந்த வருடமும் வெளிநாட்டு திருமணம் ஒன்று குறித்த பெண்ணுக்கு நிச்சயமாகிய நிலையில் இனந்தெரியாதவர்களால் பெண்ணும் காதலனும் உறவு கொள்ளும் வீடியோ அனுப்பப்பட்டு கலியாணம் குழப்பட்டுள்ளது. பின்னர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்ற 43 வயதான விவாகரத்தான மாப்பிளை ஒருவருக்கு குறித்த பெண் நிச்சயம் செய்யபட்டிருந்தார். இந் நிலையில் அடுத்தவாரம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் மாப்பிளையின் வட்சப் இலக்கத்திற்கு இனந்தெரியாத இலக்கத்தில் இருந்து மணமகளுடன் அந்தரங்கமாக ஒருவன் உறவு கொள்ளும் வீடியோக்கள் அனுப்பப்பட்டிருந்தது. ஏற்கனவே குறித்த பெண்ணின் காதல் தொடர்பாக கனடா மாப்பிளைக்கு தெரியப்படுத்தியிருந்துள்ளார்கள். அதனால் குறித்த அந்தரங்க வீடியோ வந்தது தொடர்பாக மணமகளுக்கு மாப்பிளை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து மணமகளின் உறவுகள் பொலிசாரிடம் முறையிட்டதாகத் தெரியவருகின்றது.இருப்பினும் பொலிசாரின் முறைப்பாட்டை மாப்பிளையின் வேண்டுகோளுக்கு இணங்க வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் காதலனின் வீடு தேடிச் சென்ற கனடா மாப்பிளை குறித்த வீடியோ தொடர்பாக அவனிடம் விளக்கம் கோரிய போது, குறித்த வீடியோக்கள் தன்னால் அனுப்பப்படவில்லை என காதலன் கூறியுள்ளான். அத்துடன் காதலியுடன் இருந்த கோபம் காரணமாகவும் தான் சிறைக்கு சென்ற விரக்தி காரணமாகவும் தன்னுடன் காதலி அந்தரங்கமாக இருந்த காட்சிகளை சமூகவலைத்தளத்தில் 2019ம் ஆண்டில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர் அது முடக்கப்பட்டதாகவும் காதலன் கனடா மாப்பிளைக்கு கூறியுள்ளார். அதே நேரம் காதலன் தற்போது திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் உள்ளதை கனடா மாப்பிளை அவதானித்துள்ளார்.கனடா மாப்பிளைக்கு அனுப்பபட்ட வட்சப் இலக்கம் அனுராதபுரத்தைச் சேர்ந்த இறந்து போன சிங்கள வயோதிபர் ஒருவரின் பதிவில் உள்ளதாகத் தெரியவருகின்றது. கனடா மாப்பிளையின் தொலைபேசி இலக்கம் மணப்பெண்ணான யுவதியின் நெருங்கிய உறவுகளுக்கே தெரிந்த நிலையில் குறித்த வீடியோ தனக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் யுவதியின் நெருங்கிய உறவு யாராவது தொடர்புபட்டிருக்கலாம் என மாப்பிளை சந்தேகப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • 826
யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ஐனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு,யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.யாழ் போதனா வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள மருத்துவ பீட கட்டடத்தினை இன்று திறந்து வைத்த வைபவத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.“இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை பல வருடங்களாக இயங்கி வந்த நிலையில் இரண்டாவதாக 5 வருடங்களிற்கு முன்னர் கண்டி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.மூன்றாவதாக அண்மையில் காலி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை யாக தரமுயர்த்தப்பட்டது.இனிவரும் காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவது காலத்தின் தேவை.புதிய கட்டடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்களும், ஒரு சத்திர சிகிச்சைக் கூடமும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவப் பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.இந்தக் கட்டடத் தொகுதி 70 கோடி ரூபா செலவில் கல்வி அமைச்சில் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.பொருட்களின் விலை அதிகரிப்பால் செலவு அதிகரித்து கட்டடத் தொகுதி இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டடத்தை முழுமையாக நிர்மாணித்துப் பூர்த்தி செய்ய இன்னமும் 13 கோடி ரூபா தேவை கணக்கிடப்பட்டுள்ளது” என ஜனாதிபதி கூட்டிக்காட்டியுள்ளார்.
  • 825
பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்க தொலைப்பேசி பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வொன்றை நடத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சமூக நிபுணர் வைத்தியர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதில் பல சிறுவர்கள் இரவில் சரியாகத் தூங்காமல் எப்போதும் சோர்வாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொலைப்பேசி பாவனைக்கு அடிமையான சிறுவர்களுக்குச் சக்கரை நோய் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன் கட்டாய தேவை கருதி தொலைப்பேசி பாவிக்க வேண்டிய தேவை ஏற்படுமாயின் எந்தவொரு சிறுவர்களுக்கும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தொலைப்பேசி பாவிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களை வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
  • 814
கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை-செல்வராஜா கஜேந்திரன்.
  • 745
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
  • 745
மரங்கள் விழும் ஆபத்து இருந்தால் 117 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்கவும் - அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கோரிக்கை.
  • 620
கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலான ITC ரத்னதிப, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. கொழும்பு 01 இல் காலி வீதியில் அமைந்துள்ள ITC ரத்னதிபா ஹோட்டல், தலைநகர் கொழும்பில் அறிமுகமாகும் ITC ஹோட்டல்களின் முதலாவது சர்வதேச ஹோட்டலாகும்.ITC ரத்னதீபா ஹோட்டல் திட்டமானது, புகழ்பெற்ற ITC Ltd இன் முழுச் சொந்தமான துணை நிறுவனமான WelcomHotels Lanka Ltd இன் இலங்கையின் முதல் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
  • 1047
தனது 20 வயது மகனுக்கு பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அவனை அடிமையாக்கி தனது பாலியல் தேவைகளுக்காக அயல் வீட்டு பெண்மணி பயன்படுத்தி வருவதாக வறக்காகொடப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வந்த 46 வயதான திருமணமாகாத சிங்களப் பெண் ஒருவர் மீதே மகனின் தாய் முறைப்பாடு கொடுத்துள்ளார். தனது மகன் க.பொ.த உயர்தரப்பரீட்சை இரண்டாவது தடவையாக எடுக்கவுள்ளார். இந் நிலையில் அயல்வீட்டில் வசிக்கும் பெண் தனது மகனுக்கு ஐ.போன் மற்றும் பல பரிசுப்பொருட்களை கொடுத்து அவனை தனது இச்சைகளுக்க பயன்படுத்தி வருகின்றார். குறித்த பெண்ணுடனான தொடர்பை நிறுத்துமாறு தான் மகனை வற்புறுத்திய போது மகன் தன்னையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு அப் பெண்ணுடனேயே தங்கியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து தனது மகனை தன்னிடம் மீட்டுத் தரும்மாறு குறித்த தாய் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாக சிங்கள சமூகவலைத்தளம் செய்தி வெளியியிட்டுள்ளது.
  • 852
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக இணையத்தளமொன்றில் ஊடாக பேருந்தை முன்பதிவு செய்தவர் பணத்தை இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,தெல்லிப்பழையை சேர்ந்த நபரொருவர் கொழும்பில் நடைபெறும் போட்டிப் பரீட்சையொன்றுக்கு செல்வதற்காக பேருந்து முற்பதிவு செய்யும் இணையத்தளமொன்றின் ஊடாக இரு ஆசனங்களுக்காக 4600 ரூபாய் பணத்தை வங்கி அட்டை ஊடாக செலுத்தி ஆசனங்களை முற்பதிவு செய்துள்ளார்.முற்பதிவு செய்தவருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் ஊடாக பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் செய்தி அனுப்பபட்டுள்ளது.இதனை நம்பி கொழும்பு செல்வதற்காக நேற்று ( 21) இரவு குறித்த நபர் தெல்லிப்பழை சந்தியில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் பேருந்து வராத நிலையில் இணையத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.இந்நிலையில் தனியார் பேருந்துகள் தரித்து நிற்கும் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு சென்று பார்த்த போதும் முற்பதிவு செய்த பேருந்தை காணவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குறித்த நபர் வேறொரு பேருந்து மூலம் கொழும்புக்கான பயணத்தை தொடர்ந்தார்.இதன்போது குறித்த பேருந்து நடத்துனரிடம் விசாரித்தபோதே தான் முற்பதிவு செய்த பெயரில் பேருந்தே சேவையில் ஈடுபடுவதில்லை என்பதை அறிந்து தான் ஏமாறியதை உணர்ந்துள்ளார்.இணையத்தளம் ஊடாக வங்கி அட்டைகளை பயன்படுத்தி பல வகையில் மோசடி இடம்பெறும் நிலையில் சேவையில் ஈடுபடாத பேருந்துக்கு கட்டணம் அறிவிடும் மோசடியும் அரங்கேறுகிறது.
  • 774
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது வீட்டில் தனது 7 அகவை மகனிற்கு புத்தக பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது மகனை கொடூரமாக தாக்கிய காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த தாயாரை கைது செய்துள்ளார்கள்.பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்டமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.25 அகவையுடைய இளம் தாயார் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து 5 மாத கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றார், அவரின் முதலாவது கணவனுக்கு பிறந்த 7 அகவையுடைய பாடசாலை சிறுவனுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் போது தடியால் தாக்கியுள்ளார்.குறித்த காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு போலீசாரால் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார், தாயை 22.03.2024 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
  • 767
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது.குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • 733
  • 364
  • 365
களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபரை இன்று(26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 632
அதே பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த வீட்டில் குறித்த நபர் தனியாக வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.உயிரிழந்த நபரின் மகள் நேற்று தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொலிஸில் மகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இறந்தவரின் கைகள் கட்டப்பட்டு வாயை மூடும் வகையில் துணி கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.தற்போதைய விசாரணைகளின்படி இந்த கொலைச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  • 621