இலங்கை

  •  ·  Administrator
  • 1 members
  • 615 views
Added a news  
தனது 20 வயது மகனுக்கு பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அவனை அடிமையாக்கி தனது பாலியல் தேவைகளுக்காக அயல் வீட்டு பெண்மணி பயன்படுத்தி வருவதாக வறக்காகொடப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வந்த 46 வயதான திருமணமாகாத சிங்களப் பெண் ஒருவர் மீதே மகனின் தாய் முறைப்பாடு கொடுத்துள்ளார். தனது மகன் க.பொ.த உயர்தரப்பரீட்சை இரண்டாவது தடவையாக எடுக்கவுள்ளார். இந் நிலையில் அயல்வீட்டில் வசிக்கும் பெண் தனது மகனுக்கு ஐ.போன் மற்றும் பல பரிசுப்பொருட்களை கொடுத்து அவனை தனது இச்சைகளுக்க பயன்படுத்தி வருகின்றார். குறித்த பெண்ணுடனான தொடர்பை நிறுத்துமாறு தான் மகனை வற்புறுத்திய போது மகன் தன்னையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு அப் பெண்ணுடனேயே தங்கியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து தனது மகனை தன்னிடம் மீட்டுத் தரும்மாறு குறித்த தாய் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாக சிங்கள சமூகவலைத்தளம் செய்தி வெளியியிட்டுள்ளது.
  • 596
Added a news  
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக இணையத்தளமொன்றில் ஊடாக பேருந்தை முன்பதிவு செய்தவர் பணத்தை இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,தெல்லிப்பழையை சேர்ந்த நபரொருவர் கொழும்பில் நடைபெறும் போட்டிப் பரீட்சையொன்றுக்கு செல்வதற்காக பேருந்து முற்பதிவு செய்யும் இணையத்தளமொன்றின் ஊடாக இரு ஆசனங்களுக்காக 4600 ரூபாய் பணத்தை வங்கி அட்டை ஊடாக செலுத்தி ஆசனங்களை முற்பதிவு செய்துள்ளார்.முற்பதிவு செய்தவருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் ஊடாக பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் செய்தி அனுப்பபட்டுள்ளது.இதனை நம்பி கொழும்பு செல்வதற்காக நேற்று ( 21) இரவு குறித்த நபர் தெல்லிப்பழை சந்தியில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் பேருந்து வராத நிலையில் இணையத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.இந்நிலையில் தனியார் பேருந்துகள் தரித்து நிற்கும் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு சென்று பார்த்த போதும் முற்பதிவு செய்த பேருந்தை காணவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குறித்த நபர் வேறொரு பேருந்து மூலம் கொழும்புக்கான பயணத்தை தொடர்ந்தார்.இதன்போது குறித்த பேருந்து நடத்துனரிடம் விசாரித்தபோதே தான் முற்பதிவு செய்த பெயரில் பேருந்தே சேவையில் ஈடுபடுவதில்லை என்பதை அறிந்து தான் ஏமாறியதை உணர்ந்துள்ளார்.இணையத்தளம் ஊடாக வங்கி அட்டைகளை பயன்படுத்தி பல வகையில் மோசடி இடம்பெறும் நிலையில் சேவையில் ஈடுபடாத பேருந்துக்கு கட்டணம் அறிவிடும் மோசடியும் அரங்கேறுகிறது.
  • 519
Added a news  
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது வீட்டில் தனது 7 அகவை மகனிற்கு புத்தக பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது மகனை கொடூரமாக தாக்கிய காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த தாயாரை கைது செய்துள்ளார்கள்.பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்டமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.25 அகவையுடைய இளம் தாயார் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து 5 மாத கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றார், அவரின் முதலாவது கணவனுக்கு பிறந்த 7 அகவையுடைய பாடசாலை சிறுவனுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் போது தடியால் தாக்கியுள்ளார்.குறித்த காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு போலீசாரால் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார், தாயை 22.03.2024 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
  • 516
Added a news  
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது.குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • 475
  • 166
  • 168
Added a news  
களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபரை இன்று(26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 394
Added a news  
அதே பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த வீட்டில் குறித்த நபர் தனியாக வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.உயிரிழந்த நபரின் மகள் நேற்று தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொலிஸில் மகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இறந்தவரின் கைகள் கட்டப்பட்டு வாயை மூடும் வகையில் துணி கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.தற்போதைய விசாரணைகளின்படி இந்த கொலைச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  • 379
Added a news  
இதனால் நாளை மறுதினம் முதல்  வழமையான முறையில்  இரத்த சுத்திகரிப்பு நடைபெற மாட்டாது என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.நாளைய தினம் வழமையான முறையில் இரத்த சுத்திகரிப்பு நடைபெறும். எனவே எமது கையிருப்பிலுள்ள டயலைசர் எண்ணிக்கைக்கு ஏற்ப 5நாட்களுக்கு 1முறை இரத்த சுத்திகரிப்பு நடைபெறும்.தாங்கள் வெளியில் வாங்கி கொண்டு வரும் பட்சத்தில் வழமையான நாட்கள் செய்யப்படும்.த.ரதீசன்0770678753 NIC-Base Hospital- tellipalai
  • 390
Added a news  
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பானிய டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளுக்கான முனைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்ததோடு, டிஜிட்டல் முறைமைக்கு மாறுவதற்கான வேலைத் திட்டங்களின் போது இரு நாடுகளினதும் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
  • 370
Added a news  
கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இரவு மழை பெய்தாலும் வெப்பம் 'எச்சரிக்கை' மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை)மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் அவதானமான நிலை வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மனித உடலில் 'எச்சரிக்கை' அளவில் இருக்கும் வெப்பநிலை சோர்வு மற்றும் வெப்ப பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.எனவே முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், முதியவர்கள்,நோயாளிகள், குழந்தைகளை வெளிப்புறங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.அத்துடன் பொதுமக்கள் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • 314
Added a news  
யாழ்ப்பாணம் பருதித்துறை பிரதான வீதியின் அச்சுவேலி தெற்கு நாவல் காட்டுப் பகுதியில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓட்டுனர் உட்பட ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வீதியின் அருகில் இருந்து பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட ஹயஸ் வாகனத்துடன் மோதி இவர்கள் விபத்துக்குள்ளாகுள்ளனர்.அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். குறித்த நபர்கள் விபத்தினை தடுக்க முடியாத அளவுக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துடன் தொடர்புபட்ட வாகனத்தின் சாரதி அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சாரதி ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
  • 289
Added a news  
புங்குடுதீவு 12 வட்டார பகுதியில் சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட 20 கிலோ மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல் துறை பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் 57 வயதுடைய நபர் என பொலிசார் தெரிவித்தனர்.கைப்பெறப்பட்ட குறித்த மாட்டு இறைச்சி, உணவுக்கு உகந்தது இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • 273
Added a news  
அச்சுவேலி போலீசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த பொழுது, சந்தே நபர் எதிராளி சாட்சி அளித்துவிட்டு வரும்பொழுது கன்னத்தில் அறைந்து உள்ளார்.நீதவான் முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.உடனடியாக அச்சுவேலி பொலிசாருக்கு உத்தரவிட்ட நீதவான் குறித்த நபருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு கட்டளை இட்டார்.அத்துடன் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபருக்கு இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குறித்தநபருக்கு எதிராக நாலைந்து வழக்குகள் நீதிமன்றத்தில் இடம் பெற்று வருவதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
  • 265
Added a news  
கோப்பாய் டச்சு வீதி பகுதியச் சேர்ந்த துசியந்தன் டிலோசன் வயது(6), என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவனின் தந்தை வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மகனை அக்குபஞ்சர் வைத்தியத்துக்கு உள்ளாக்குவதற்காக பின்னர் அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறதுகுறித்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவர்கள் உரும்பிராய் பகுதியில் உள்ள அக்குபஞ்சர் வைத்தியரிடம் அக்குபஞ்சர் வைத்தியம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
  • 272