அமரர் லக்கு இராசரத்தினம்

  • 1 members
  • 1 followers
  • 2452 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
  • 35
  • 34
Added a post 
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான,” சில நேரங்களில் நோயாளிகளின் உணவுக்காக வழங்கப்படும் மரக்கறிகள் அழுகிய நிலையில் இருப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேநீரைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பால்மா மற்றும் சீனியும் காலாவதியானவை எனவும், சில நேரங்களில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களின் உணவுக்கு தகுதியற்ற மீன்களைக் கொண்டு உணவு சமைப்பதாகவும், இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு பல தடவை கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திய போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.000 
  • 58
Added a post 
அனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 130 புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்அதன்படி 2019 மற்றும் 2023 க்கு இடையில், அனுராதபுரம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட இருபதாயிரம் சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், அந்த காலகட்டத்தில், சுமார் நான்காயிரம் சிறுநீரக நோயாளிகள் இந்த நோயினால் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்மேலும், கடந்த வருடம் 1,200 புதிய சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் ஆண்கள் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.மேலும் அந்த பகுதிகளில் கிடைக்கும் நீரின் பயன்பாடு, வறட்சியான காலநிலையால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மரபியல் பரவல் போன்றவையும் சிறுநீரக நோய்க்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.000 
  • 56
  • 54
  • 53
Added a post 
உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet Pineapple இலங்கையில் பயிரிடுவதற்கான பரிந்துரைகளை விவசாயத் திணைக்களம் வழங்க உள்ளது.உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழம் இலங்கையில் இருந்து பதிவாகியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார், எனவே, இலங்கையில் பயிரிடப்படும் அன்னாசிப்பழங்களுக்கு உலக சந்தையில் அதிக தேவை உள்ளது.இந்நிலையில், MD 2 அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி நிலவுகின்ற போதிலும், இந்த அன்னாசி வகையை இந்த நாட்டில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அத்தோடு, இனிப்புச் சுவை மற்றும் குறைந்த அமிலத்தன்மை கொண்ட இந்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட நடத்தப்பட்ட ஆராய்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது.அதன்படி, பயிர் வெளியீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், இலங்கையில் சாகுபடிக்கு இந்த MD 2 அன்னாசி வகையை பரிந்துரைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அமைச்சர் விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.மேலும், விவசாயத் துறை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையில் இந்த MD 2 அன்னாசிப்பழத்தின் பயிர்ச்செய்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெற்றியடைந்துள்ளதுடன், விவசாயிகளும் இந்த அன்னாசி வகையை பயிரிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.000
  • 54
Added a post 
200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் .இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை..இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது000
  • 56
Added a post 
பதற்றத்தை தணிப்பதற்கான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளபோதும் ஈரானின் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.சாத்தியமான பதில் நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இஸ்ரேலிய போர் அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) கூடியபோதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மையவாத இஸ்ரேலிய அமைச்சரான பென்னி கான்ட், ‘சரியான நேரத்தில் ஈரானுக்கு சரியான விலை கொடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.சிரியாவில் உள்ள துணைத் தூதரகத்தின் மீது ஏப்ரல் 1 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் 300 க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியது.இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகளால் இலக்குகளை அடைவதற்கு முன் அந்த ஆயுதங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.இந்தத் தாக்குதல்களில் தெற்கு இஸ்ரேலில் இருக்கும் இராணுவத் தளம் ஒன்றில் சிறு சேதம் ஏற்பட்டதாகவும் ஏழு வயது இஸ்ரேலிய சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய இஸ்ரேலிய போர் அமைச்சரவை பதில் நடவடிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை பெற்றிருந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அதற்கான காலம் மற்றும் அளவு பற்றி அமைச்சரவையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் ஈரானுக்கு எதிரான பதில் தாக்குதல் ஒன்றில் அமெரிக்கா பங்கேற்காது என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் குறிப்பிட்டுள்ளார்.ஈரான் இராணுவ தளபதி மேஜர் ஜெனர் மொஹமது பகெரி விடுத்த எச்சரிக்கையில், ‘ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுத்தால் எமது பதில் தாக்குதல் இன்றைய நடவடிக்கையை விடவும் மிகப் பெரியதாக இருக்கும்’ என்றார். இஸ்ரேலிய பதில் தாக்குதலுக்கு உதவினால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் என்று அவர் அமெரிக்காவையும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 56
Added a post 
விராட் கோலி அணியின் வெற்றிக்காக தனது 200 வீதத்தை வழங்கி வரும் நிலையில் அதற்கான பிரதிபலன்கள் எதுவும் கிடைக்காமையே இவ்வாறான விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) படுதோல்வியைச் சந்தித்தது.அதன்படி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.நேற்றைய போட்டியில் SRHக்கு எதிராக, RCB பந்துவீச்சாளர்கள் தடுமாற்றத்தை சந்தித்தனர்.சன்ரைசஸ் ஹைதராபாத் (SRH) அணி 3 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்களை குவித்தது. டிராவிஸ் ஹெட் IPLஇல் நான்காவது அதிவேக சதம் அடித்து RCBயை வீழ்த்தினார்.RCB அணிக்காக தினேஷ் கார்த்திக் 237.14 ஸ்டிரைக் ரேட்டில் 83 ஓட்டங்களை எடுத்தார்,எனினும் RCB 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடரில் பெங்களூரு அணியின் உரிமையாளர்களை மாற்ற வேண்டும் என்று டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதி பிசிசிஐக்கு வலியுறுத்தியுள்ளார்.RCB அணி 2024 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 6 தோல்விகளுக்குப் பிறகு புள்ளிஅட்டவணையின் அடிமட்டத்தில் பின்தங்கியுள்ளது.2008ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை விஜய் மல்லையா அணி உரிமையாளராக பணியாற்றிய பிறகு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் RCB இன் தற்போதைய உரிமையாளர்களாக உள்ளனர்.இந்நிலையில் RCB அணியின் உரிமையை மாற்றுவதன் அவசியம் குறித்து மகேஷ் பூபதி தனது ‘x ' தளத்தில் பதிவிட்டுள்ளார்.இதேவேளை, SRHக்கு எதிரான நேற்றைய போட்டியில் M சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB அணியின் தோல்வியைக் கண்டு வேதனையடைந்ததாக முன்னாள் இந்திய அணி தலைவர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.   
  • 56
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 3 ஆம் தேதி மேஷம் -ராசி: நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பங்குதாரர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்பு விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்ரிஷபம் ராசி: மனதளவில் தைரியம் பிறக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வு கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் மேன்மை உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் தேடல்கள் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மைமிதுனம் -ராசி: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம் -ராசி: சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திடம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்சிம்மம் -ராசி:எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நட்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை கன்னி -ராசி: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சிக்கல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்புதுலாம் -ராசி: அனுபவப் பூர்வமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தைரியம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு விருச்சிகம்- ராசி: கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். செலவு விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசு -ராசி: பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். உயர் அதிகாரிகளை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வேலையாட்களால் சிறு அலைச்சல் உண்டாகும். சொத்து பிரச்சனைகளில் பொறுமையை கையாளுவது நல்லது. அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்மகரம் -ராசி:கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். மனதளவில் திருப்தி ஏற்படும். கவலை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதாகும்பம் –ராசி:எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உழைப்புக்குண்டான மதிப்பு கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம் -ராசி: வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 131
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.4.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 05.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று காலை 07.13 வரை புனர்பூசம். பின்னர் பூசம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகைசெவ்வாய் மதியம் 3 to 4:30 PM காலை 9 to 10:30 AM மதியம் 12:00 to 1:30 PM
  • 154
  • 150
எல்லா கணவன்மார்களின் நிலை இதுதானே?சொல்லுங்க...
  • 150
Good Morning...
  • 151
  • 150
  • 160
  • 161
விபத்தில் சிக்கிய வடக்கின ஆளுநர் !
  • 236
Added a photo 
  • 220
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 2 ஆம் தேதி மேஷம் -ராசி: வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புரிஷபம் ராசி: தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் மனதளவில் தடுமாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் பொறுமையை கையாளவும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மிதுனம் -ராசி: மனதில் இனம்புரியாத ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அக்கம்-பக்கத்தில் இருப்பவர்களால் திருப்தியான சூழல் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பப் பெரியவர்களிடம் பொறுமையை கையாளவும். வியாபாரம் மத்தியமாக நடைபெறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கடகம் -ராசி: உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான முதலீடு மேம்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்புசிம்மம் -ராசி:குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலைப்பொருட்களால் லாபம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதுநிலை கல்வியில் இருந்துவந்த தாமதம் விலகும். நாவல் மற்றும் இலக்கியங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் கன்னி -ராசி: உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். நறுமண பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். தொழில் நிமிர்த்தமான நட்பு வட்டம் விரிவடையும். அரசு சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். கவலை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்துலாம் -ராசி: புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழியில் ஆதாயம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்விருச்சிகம்- ராசி: பிள்ளைகளின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைவரின் வழியில் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் தனுசு -ராசி: சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமகரம் -ராசி:நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு ஏற்படும். கடன் சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத பொருட்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பரிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்கும்பம் –ராசி:கலைத்துறைகளில் புதிய வாய்ப்பு ஏற்படும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம் -ராசி: தொழில் சார்ந்த அலைச்சல் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். மனை விற்பனையில் எதிர்பார்ப்பு நிறைவேறும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தாமதம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 349
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 15.04.2024 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 05.01 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று அதிகாலை 05.55 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.  கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை திங்கள் காலை 7:30 to 9 AM காலை 10:30 AM to 12 மதியம் 1:30 to 3 PM
  • 359
Added a post 
இரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது..அந்த நதியில் பாலம்எதுவும் கட்டப்படவில்லை.நீந்திக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை.நதியும் குறுகலாகத்தான் இருந்தது. எனவே இருவரும் தைரியமாக நீந்திக் கடக்க முடிவு செய்தனர்.இருவரில் ஒருவருக்குத்தான்நீச்சல் நன்றாக வரும்.அடுத்தவர் அரைகுறை தான்.இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள்..சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நன்றாக நீந்தக் கூடியவன் ஒரு சுழலில் மாட்டிக் கொண்டு திணறினான்.அனுபவம் அதிகம் இல்லாதவனோ விறுவிறுவென்று நீந்தி சென்று மறு கரையை அடைந்தான்..திரும்பிப் பார்த்தபோது தன உடன் வந்தவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.உடனே மீண்டும் நீரில் குதித்து நீந்தி,அவனைக் காப்பாற்றி கரை கொண்டு வந்து சேர்த்தான். .மெதுவாக தன்னிலை அடைந்த முதல்வன், தன்னைக் காப்பாற்றியதற்கு அடுத்தவனுக்கு நன்றி சொன்னான்.பின் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டான்,''உனக்கு நீச்சலில் அதிக அனுபவம் இல்லைஎன்று சொன்னாயே! பின் எப்படி சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக நதியைக் கடந்தாய்?''.இரண்டாமவன் தனது இடுப்பிலிருந்தஒரு பையைத் தொட்டுக் காண்பித்தவாறு சொன்னான்,''இந்தப் பையில் நான் உழைத்து சம்பாதித்த தங்கக் காசுகள் உள்ளன.என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு வருடமாகப் போராடி உழைத்து சேர்த்த சேமிப்பு இது.இதன் கனம் தான் என்னை நதியை கடந்து வர உதவியது..நான் நீந்தும்போது என் மனைவியும் என் குழந்தைகளும் என் தோளில் அமர்ந்தவாறு எனக்கு வழி காட்டினார்கள்.'' என்றான்.
  • 367
Good Morning...
  • 346
Added a news 
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும், புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும், புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன. இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும்.தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன.புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமானது என நம்புகிறேன். புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுக்கூறுவதோடு அனைவருக்கும் புத்தாண்டுப் பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
  • 441
Added article 
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் படம் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று தமிழ் புத்தாண்டில் ‘கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார். விசில் போடு என்ற இந்த பாடலின் தொடக்கத்தில் ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா.. Campaign தான் தொறக்கட்டுமா.. மைக்கை பிடிக்கட்டுமா?” என தனது அரசியல் வருகையை உணர்த்தும் விதமான வரிகளை பாடியுள்ளார் நடிகர் விஜய்.இந்த பாட்டு தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரிடையே வைரலாகி வருகிறது. பாட்டை போலவே படத்திலும் அரசியல் காட்சிகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த பாடலில் விஜய் – பிரபுதேவா காம்போ டான்ஸ் சிறப்பாக அமைந்துள்ளதால் முழு பாடலையும் காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
  • 458
Added article 
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கிறார் சூர்யா.சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார்.தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர் உறுதி செய்துள்ளது.
  • 441
Added article 
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். மேலும் அவர் தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது திடீரென நடிகர் விஷாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.நடிகர் விஷால் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழக முழுவதும் போட்டியிடப் போகிறாரா? அல்லது ஏதேனும் ஒரு கட்சியில் இணைய போகிறாரா? அல்லது அவர் மட்டும் தனியாக போட்டியிடப் போகிறாரா என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும் 2026 ஆம் ஆண்டு விஷால் அரசியலில் குதிப்பது மட்டும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகள் 2026 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில் புதிதாக விஜய்யும் களத்தில் இறங்கி உள்ளார். தற்போது விஷாலும் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 443