Feed Item
Added a post 

நியூயார்க்கில் மாநகரில், ஒரு தமிழரும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.

அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து தமிழனிடம் காட்டி

“நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?”என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், “உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?” என்று சவால் வேறு விட்டார் . தமிழனிடம் .

விடுவாரா நம்ம தமிழன் “உள்ள வா… உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னனு காட்டுறேன்னு”, சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற தமிழன் கேட்டார், ஒரு மேஜிக் காட்டுறேன் பார்க்கிறியா?..

கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார்.

அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார்.

பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்தவர், ” எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?.”

தமிழன் அமைதியாக பதில் அளித்தார், ”என்.ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு… நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்…’

  • 474