Feed Item
Added a post 

யாழ் - கரவெட்டி, வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பரானது.

1901 – புளோரிடாவின் ஜாக்சன்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர்.

1913 – இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.

1920 – சியார்சியாவில் போல்செவிக் இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.

1921 – வட அயர்லாந்து, தெற்கு அயர்லாந்து என அயர்லாந்து இரண்டாகப் பிரிந்தது.

1928 – சீனா, சினானில் 12 சப்பானியப் பொது மக்கள் சீனப் படைகளினால் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக அடுத்தடுத்த நாட்களில் 2,000 வரையான சீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[2]

1939 – சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியை ஆரம்பித்தார்.

1941 – பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் துளகி தீவைக் கைப்பற்றினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான் படை கேப் அர்கோனா, தீல்பெக், இடாய்ச்சுலாந்து ஆகிய சிறைக்கப்பல்களை தாக்கி மூழ்கடித்தது.

1962 – டோக்கியோவில் பயணிகள் தொடருந்துகள் சரக்கு தொடருந்துடன் மோதியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

1973 – சிக்காகோவின் 1,51 அடி உயர 108-மாடி சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கட்டடமாக அறிவிக்கப்பட்டது.

1978 – முதலாவது எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அமெர்க்காவில் அனுப்பப்பட்டது.

1986 – கொழும்பு விமான நிலையத்தில் எயர்லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர்.

1999 – ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லகோமா நகரை பெரும் சூறாவளி தாக்கியதில் 45 பேர் கொல்லப்பட்டும் 665 பேர் காயமும் அடைந்தனர்.

2001 – 1947 ஆண்டில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய அமெரிக்கா ஆணையத்தில் உறுப்புரிமையை இழந்தது.

2002 – இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜலந்தரில் இந்திய வான்படையின் மிக்-21 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்து, 17 பேர் காயமடைந்தனர்.

2006 – ஆர்மீனியாவின் பயணிகள் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

2016 – கனடா, ஆல்பர்ட்டாவில் மெக்மரி கோட்டையில் தீ பரவியதில் 88,000 பேர் இடம்பெயர்ந்தனர். 2,400 வீடுகள் அழிந்தன.

  • 396