Feed Item
Added a post 

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபடியாக, ஃபில் சால்ட் 75 ஓட்டங்களையும், சுனில் நரைன் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணி சார்பில் அதிகபடியாக,ஜோனி பேர்ஸ்டோ 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இருபதுக்கு20 போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்கள் அடிக்கப்பட்ட போட்டியாக குறித்த  போட்டி பதிவானது. அத்துடன் இந்த போட்டியில் மொத்தமாக 42 ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

000

  • 255