Feed Item
Added a post 

ஒரு நகைச்சுவை பேச்சாளர் ஒரு கிராமத்தில் நகைச்சுவை சொற்பொழிவு நடத்த பேசியிருந்தனர்!

தன் குழுவுடன் கிராமம் சென்றடைந்தார்! அவரை கூட்டி போக ஒருவன் வந்திருந்தான். மாலை நேரம் , கிராமத்திற்கு செல்லும் ஒரே பஸ் பழுது அடைந்து விட்டதாகதெரிவித்தான். கருவேல முள் காட்டு வழியே நடந்தால் அரை மையில் தூரம் என்று சொல்ல அவனை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர்! இருட்ட தொடங்கியது! பேச்சாளர் அவனிடம் ஏனப்பா இந்த காட்டில் பூச்சி பட்டை எதேனும் உள்ளதா! என்று கேட்க! அவனோ சிரித்து கொண்டே! பாம்புகள் இருக்கும் காட்டில் பூச்சி பட்டை எப்படியா இருக்கும் என்று சொல்ல கூட வந்த ஒருவன் பின்னோக்கி ஓட ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்தனர். பேச்சாளர் மெதுவாக எதுக்கப்பா தலை மேலே குச்சியை தூக்கி கொண்டு நடக்கிறாய் என்று கேட்க அவனோ சாமி மரத்துல இருந்து பாம்பு விழும் அதை தட்டி விட தான் என்று சொல்ல கூட வந்திருந்த மீதி இருவர் ஓட்டம் பிடித்தனர். ஒருவழியாக பேச்சாளர் தனியாக கிராமம் வந்து மேடை ஏறினார். பேச்சாளர் தன் திறைமை எல்லாம் தன் நகைச்சுவை பேச்சு மூலம் அள்ளி தெளிக்க! கிரமத்தார்கள் அனைவரும் சத்தமாக சிரிக்க!

சட்டென்று ஒரு வயதான பாட்டி எழுந்து........

தன் ஊர் மக்களை பார்த்து. எதுக்குடா சிரிக்கிறீங்க அந்த மனுஷன் எம்புட்டு தூரம் இருந்து வந்து பேசுறாரு!

எல்லாம் சிரிக்கிறாங்க.மூச் ! ஒரு சத்தம் வர கூடாது என்று கத்தினாள்!

பேச்சாளருக்கு லேசாக தலை சுற்றியது! அதோடு நிற்காமல்......

பேச்சாளரை பார்த்து சாமி நீங்க பேசுங்க நான் முன்னாடியே நிற்கிறேன்! எவன் சிரிக்கிறான் என்று பார்க்கிறேன்! என்று சொன்னதும் பேச்சாளர் மயங்கி விழுந்தார்!

  • 360