·   ·  20 posts
  •  ·  0 friends

மது அருந்துபவர்களை மீட்கும் கோவில்

  • திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள விராலிப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை கருப்பு சுவாமி கோவில்.
  • இந்த கோவிலில் வத்தலகுண்டு சுற்று வட்டார பகுதி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் வருகை தந்து வழிபடுவதுடன் எண்ணற்ற வேண்டுதல்களையும் வைத்து செல்கின்றனர்
  • அந்த வகையில் இந்த கோட்டை கருப்புசாமி கோவிலில் மது அருந்தும் நபர்கள் ஒரு முறை வந்து சாமியிடம் மது அருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்து கோவில் பூசாரியிடம் கயிறு கட்டி சென்றால் அத்துடன் மது அருந்துவதை விட்டுவிடுவார்கள் என கூறப்படுகிறது.
  • இதனால் குடும்ப பெண்கள் தங்களது வீட்டில் உள்ள ஆண்கள் மது அருந்துவதை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையின்போது இந்த கோட்டை கருப்பசாமி கோவிலுக்கு அழைத்து வந்து சத்தியம் செய்ய வைத்து கயிறு கட்டி விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
  • மேலும் இக்கோவிலில் மது அருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்து கயிறு கட்டிய பிறகு, மது அருந்தினால் அவர்களது வாழ்க்கையில் கோட்டை கருப்புசாமி தெய்வம் பல்வேறு இன்னல்களை சந்திக்க வைக்கும் என்று ஐதீகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
  • மேலும், இந்த கோவிலில் முக்கியமான திருவிழா என்றால் ஆடி மாதம் அமாவாசை முடிந்த முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் திருவிழா தான் என கூறுகின்றனர்.
  • ஆடி மாதம் துவங்கும்போதே இக்கோவிலில் வேண்டுதல்கள் வைத்த ஏராளமான பக்தர்கள் சார்பாக ஆட்டு கிடா பலி கொடுப்பதற்காக ஆட்டுக்குட்டிகளை விராலிபட்டியில் அமைந்துள்ள கோட்டை கருப்புசாமி கோவிலில் வந்து விட்டு விடுவார்கள்.
  • ஏனென்றால் ஆடி மாத திருவிழாவில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் பலி கொடுத்து படையல் போடுவது வழக்கம்.
  • அதிலும் தனித்துவமான அம்சம் என்னவென்றால் இந்த ஆடி மாச திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று கிடா பலியிட்டு படையல் இட்டு உண்பார்கள்.
  • படையல் என்றால் அரிசி சோறு, குழம்பு, என்று இல்லாமல், இந்த கோவிலில் ஆட்டுக்கறியை மட்டுமே படையலாக போட்டு உண்பார்கள்.
  • மேலும் இந்த ஆடி மாத திருவிழாவில் பங்கேற்கும் 5000க்கும் மேற்பட்ட ஆண்களில் ஒருவர் கூட மது குடித்துவிட்டு கோவிலுக்கு வர மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.
  • இப்படிப்பட்ட திருவிழாவில் தப்பித்தவறி எவரேனும் ஒருவர் மது அருந்திவிட்டு கோவில் எல்லைக்குள் வந்து விட்டால் மீண்டும் வீடு திரும்பும்போது உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்றும் அல்லது கை, கால் என உடலில் உள்ள ஏதாவது ஒரு பாகங்களை சேதம் ஆக்கிக் கொண்டு செல்வார்கள் என்றும் ஐதீகம் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
  • இந்த கோட்டை கருப்புசாமி கோவிலில் குழந்தை வரம் கேட்டு வருபவர்களுக்கு விரைவில் குழந்தை வரமும். மேலும் அரசு வேலை கேட்டு வருபவர்களுக்கு அரசு வேலை கிடைக்குமாறு இந்த கருப்புசாமி வழிவகை செய்வார் என சொல்லப்படுகிறது.
  • இப்படி கேட்டவர்களுக்கு கேட்ட வரும் தரும் கோட்டை கருப்புசாமி, இப்பகுதி மக்களையும் வாழவைத்து, தன்னையே தஞ்சம் என்று நாடிவரும் பக்தர்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்து தருவார்.
  • 11
  • More
Comments (0)
Login or Join to comment.