- · 1 friends
-

வியக்க வைக்கும் மனிதர்
வியந்து பார்க்கும் மனிதர்களில் இவர் ஒருவர். பிரதாப் சி ரெட்டி. பெயர் சொன்னாலே போதும். அப்பல்லோ குழுமத்தின் சேர்மன்.
92 வயது நம்ப முடிகிறதா? இன்றும் பத்து மணிக்கு அலுவலகம் வருகிறார் 5 மணி வரை பணி செய்கிறார் வாரத்தில் ஆறு நாட்களும் இப்படி வேலை பார்க்கிறார்!
அப்பல்லோ மருத்துவமனையை துவக்கியவர் இவரே. நாடெங்கிலும் 71 மருத்துவமனைகள் இவருக்கு சொந்தம். 5000க்கும் அதிகமான ஃபார்மசிகள் இவருக்கு இருக்கின்றன. இவரது பேத்தி உபாசனா காமினேனியை தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ராம்சரண் தேஜா மணம்முடித்திருக்கிறார்.
சர்வதேச தரத்தை அகில உலக அளவில் மதிப்பிடுகையில் குறைந்த விலையில் நல்ல விதமான சேவையை அப்பல்லோ நிறுவனம் தந்திருக்கிறது. இன்றும் தந்து கொண்டிருக்கிறது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து அமெரிக்கா சென்று மேலும் படித்து ஒரு சிறந்த கார்டியாலஜிஸ்ட் ஆக தன்னை நிறுவினார். அன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் காம்ப்ளக்ஸ் ஆக இருந்த கேஸ்களை எல்லாம் அமெரிக்காவிற்கு ரெஃபர் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் பாரதத்தில் நல்ல மருத்துவ கட்டமைப்பு அன்று இல்லை.
அப்படி ஒரு இதய நோயாளியை அவர் US போவதற்கு சொல்லும் பொழுது அந்த நோயாளியால் ஏழ்மை காரணமாக அங்கு சென்று சிகிச்சை பெற முடியாமல் போயிற்று. அந்த முடிவு இவருக்கு மனதில் கேள்விகளை எழுப்பிற்று. விளைவு அமெரிக்க தரத்தில் இங்கே மருத்துவமனை உருவாக அடிகோலியது.
நமக்கும் இப்படித்தான் சவால்கள் வருகின்றன நாம் எரிச்சல் அடையாமல், மனம் வருத்தப்படாமல், தடையாக அவைகளை நினைக்காமல், வெல்வது எப்படி என்று பிரதாப் சி ரெட்டியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்....