- · 1 friends
-

கெட்ட நேரத்தை விரட்டி அடிக்க, நாம் செய்ய வேண்டிய ஒரே வழிபாடு
நம்முடைய கெட்ட நேரத்தை விரட்டி அடிக்க, நாம் செய்ய வேண்டிய ஒரே வழிபாடு அதர்வண பெண் தெய்வ வழிபாடு. உடனே பயந்து விட வேண்டாம். அதர்வணம் என்றால் கெட்டது கிடையாது. உக்கிரமான அம்மன் வழிபாட்டை தான் அதர்வண தெய்வ வழிபாடு என்று சொல்லுவார்கள். நம் வீட்டு அருகில் பத்திரகாளி கோவில், பிரத்தியங்கிரா தேவி கோவில், வாராகி அம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி, இப்படி எந்த கோவில் இருந்தாலும் சரி அந்த கோவிலில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
ஒரு வெள்ளிக்கிழமையோ, செவ்வாய்க்கிழமையோ, எலுமிச்சம் பழம் மாலையை உங்கள் கையாலேயே கோர்த்து அதர்வண தெய்வத்திற்கு மாலை போட வேண்டும். அந்த உக்கிரமான அம்மன் கோவிலுக்கு சென்று, குடும்பத்தோடு வழிபாடு செய்து, இந்த மாலையை அம்மனுக்கு சாத்திவிட்டு குருக்களிடம் சொல்லிவிட்டு வாருங்கள். இந்த மாலையை மறுநாள் நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று.
மறுநாள் சென்று அம்மனுக்கு சாத்திய அந்த எலுமிச்சை மாலையை நீங்கள் வாங்கி வீட்டிற்கு வர வேண்டும். வீட்டிற்கு வந்து இந்த எலுமிச்சம் பழம் மாலையை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை வேண்டி மனதார பிரார்த்தனை செய்து, அந்த மாலையை எடுத்து நிலை வாசல் கட்டி விட வேண்டும். இவ்வளவுதான் வழிபாடு. அந்த எலுமிச்சம் பழம் மாலை போக போக காயத் தொடங்கும்.
எலுமிச்சம்பழம் நன்றாக காய்ந்த பிறகு எலுமிச்சம் பழமாலையை எடுத்து கால் படாத இடத்தில், ஒதுக்கு புறமாக போட்டு விடுங்கள். ஏழு நாட்கள் வரை அந்த மாலை நிலை வாசல் படியிலேயே இருக்கலாம். ஒருவேளை போட்ட உடனே எலுமிச்சம் பழங்கள், அழுகத் தொடங்கி விட்டால், அந்த மாலையை உடனடியாக கழட்டி வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும்.
நிலை வாசலில் கட்டிய அம்மன் கழுத்தில் போட்ட எலுமிச்சம்பழம் அழுகி விட்டால், ஏதேனும் பாதிப்பு என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை, இந்த எலுமிச்சம் பழம் தன்னகத்தை ஈர்த்துக் கொண்டது என்று தான் அர்த்தம். அதற்காக பயப்பட வேண்டாம். எலுமிச்சம் பழமாலையை அப்புறப்படுத்தி விட்டால் போதும். மற்றபடி எலுமிச்சம்பழம் காயும் போது பெருசாக உங்களுடைய வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்..