- · 1 friends
-

அழகர்கோவில் நூபுர கங்கை - ராக்காயி அம்மன்
- அழகர் கோவிலில் இருக்கும் நூபுர கங்கை தீர்த்தம் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது.
- பல ஆராய்ச்சிகள் மேற்க்கொண்டும் இதுவரை இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் எதுவென்று யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
- சிலம்பு என்பது கணுக்காலை குறிக்கும். திருமாலின் கணுக்காலை தொட்டு பூமியில் விழுந்த தீர்த்தம் என்பதால்தான் இதற்கு நூபுர கங்கை என்ற பெயரும் வந்தது.
- நூபுர கங்கை தீர்த்தக்கரையில் உள்ள பெண் காவல் தெய்வம் ராக்காயி. இந்த அம்மனை அமாவாசையில் வழிபடுவது நன்மையளிக்கும்.
- இத்தீர்த்தத்தில் அமாவாசையன்று நீராடி ராக்காயி அம்மனை வழிபட்டால் முன்னோர் சாபம் நீங்கும் என்கின்றனர்.
- மல்லிகை கொடிகள் சூழ்ந்திருப்பதால் ராக்காயி அம்மன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு ‘மாதவி மண்டபம்’ என்ற பெயர் வந்தது.
- அழகர்கோவிலுக்கு சற்றே வடக்கே போனால் உத்திரநாராயணவாபி என்கிற தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தத்தை கொண்டுதான் அழகர் கோவில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
- அழகருடைய திருமஞ்சனத்திற்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் தூரத்திலிருந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டுவரப் படுகிறது.
- அழகருடைய திருமஞ்சனத்திற்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் தூரத்திலிருந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டுவரப் படுகிறது.
- வேறு நீரில் அழகரை நீராட்டினால் அவருடைய உருவம் கருத்துவிடும். அதனாலேயே நுபுரகங்கையால் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
- ஏனெனில் அழகரின் திருமேனி அவரஞ்சி என்ற அரிய வகை தங்கத்தால் ஆனது.