·   ·  318 posts
  •  ·  1 friends
  • 1 followers

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்

1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE

கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும்.

இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும்.

2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE

அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும்.

3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE

அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும்.

அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும்.

4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE

இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும்

பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வலி குறையும்.

பூ – 30 கிராம் எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து 1 வாரம் உண்ண தாய்ப்பால் பெருகும்.

5. அரசு – Ficus religlosa – MORACEAE

அரசந்துளிர் இலைகளை அரைத்துப் பற்றிடபுண்கள் ஆறும்

அரசு விதைத் தூளை உண்டு வர உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டை நீக்கும்.

அரச மரத்து புல்லுருவியை பால் விட்டு அரைத்து உண்டுவர பெண் மலடு நீங்கும்.

6.அரிவாள்மனைப் பூண்டு – Sida acuta – MALVACEAE

இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும். காயம் வெகு சீக்கரத்தில் ஆறும்.

இலையுடன் சமஅளவு குப்பைமேனி இலை, பூண்டுப்பல் – 2, மிளகு – 3 சேர்த்து அரைத்து புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுக்க நஞ்சு முறியும்.

7.அறுகம்புல் – Cynodon dactylon – POACEAE

அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண்புகைத்தல் தீரும்.

30 கிராம் புல்லை அரைத்து பாலில் கலந்து பருக இரத்த மூலம் குணமடையும்.

30 கிராம் புல்லை நன்றாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20 - 40 நாட்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.

8.ஆடாதோடை – Adathonavasica – ACANTHACEAE

ஆடாதோடை மணப்பாகு 1 தேக்கரண்டி கலந்து சாப்பிட மார்ச்சளி, இருமல், காசம் ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.

ஆடாதோடை இலை – பங்குக்கு எட்டு பங்கு நீர் சேர்த்து எட்டில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டிய குடிநீரை சீலையில் தோய்த்து ஒற்றடமிட வீக்கம் கீல்பிடிப்பு இவை தணியும்.

9.ஆடுதீண்டாப்பாளை – Aristolochia bracteolate – ARISTOLOCHIACEAE

உலர்ந்த இலை – 10 கிராம் அளவு எடுத்து ¼ படி வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 15 மி.லி. – 30 மி.லி. வீதம் உள்ளுக்குக் கொடுக்க நுண்புழுக்கள் சாகும்.

வேரை அரைத்து 4 கிராம் அளவுக்கு உள்ளுக்கு கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்.

இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்து பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்கு பூச குணமாகும்.

10.ஆமணக்கு – Ricinus communnis – EUPHORBIACEAE

இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகுதியாகும்.

கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் ஒரிரு துளி விளக்கெண்ணெய் கண்ணில் விட வலி நீங்கும்.

ஆமணக்குத் துளிர் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்ட மாதவிடாய் வயிற்று வலி தீரும்.

11.ஆல் – Ficus benghalensis – MORACEAE

ஆலம்பழுப்பு இலைகளை சுட்டுச் சாம்பலாக்கி நல்லெண்ணெய்யில் கலந்து கரப்பானுக்குப் பூச குணமாகும்.

ஆலம்பட்டையை இடித்து 10 மடங்கு நீர்விட்டு குடிநீராக்கி வாய் கொப்புளித்து வர வாய்ப்புண், ஈற்றுப்புண் இவை போகும்.

12.ஆவாரை – Cassia auriculata – CAESALPINIACEAE

பூவின் சூரணத்தையோ அல்லது பூவைக் குடிநீராக்கி பாலில் கலந்து தினமும் குடிக்க மேகவெட்டை, உடல்சூடு இவைநீங்கும்.

ஆவாரை இலை பூ, காய், பட்டை, வேர் என இவ்வைந்தின் குடிநீரைக் குடிக்கச் செய்ய நீரிழிவு தீரும்.

13.ஆனை நெருஞ்சில் – Pedalium murex – PEDALIACEAE

இலயை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.

இதன் இலையை நீரில் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும். இதனை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர வெள்ளை, நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் இவை தீரும்.

14.இலந்தை – Ziziphus mauritiana – RAMNACEAE

இலை – 1பிடி, மிளகு – 6, பூண்டு – 4 எடுத்து அரத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கி பெண் மலடு நீங்கும்.

பச்சை இலையை அரைத்து சிறுஎலுமிச்சாங்காயளவு புளித்த மோரில் கொடுக்க எருவாய்க் கடுப்பு குணமாகும்.

15.இலவு – Ceiba pentandra – BOMBACACEAE

இலையை அரைத்து பசும்பாலில் கலக்கி கொடுக்க சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

பூவை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. காலை மாலை குடிக்கச் செய்ய மலச்சிக்கல், நீர்க்கட்டு நீங்கும்.

16.இலுப்பை – Madhuca longifolia – SAPOTACEAE

இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.

இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி செந்நீர் ஒற்றடம் கொடுக்க இடுப்பு வலி தீரும்.

10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும்.

17.இம்பூறல் – Oldenlandia umbellate – RUBIACEAE

இலைச்சாற்றைத் தடவி வர சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீரும்.

வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதனுடன் சிறிதளவு அரிசி மாவு கலந்து அடை செய்து காலை, மாலை சாப்பிட அனைத்து கப நோய்களும் தீரும்.

18.உசில் – Albizia amara – MMOSACEAE

உசிலம் இலையைப் பொடி செய்து எண்ணெய் முழுக்கின் போது தேய்த்துக் குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.

இதன் வேர்ப்பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து நீரிலிட்டு காய்ச்சி குடிநீராக்கி வேளைக்கு 1-2 தேக்கரண்டி 3 வேளை கொடுக்க குழந்தைகளின் அள்ளு மாந்தம் குணமாகும்.

19.ஒதியன் – Lannaea coromandelica – ANACARDIACEAE

ஒதியன் மரப்பட்டைக் குடிநீரால் புண், புரையோடிய புண்கள் இவற்றைக் கழுவலாம்.

ஒதிய மரத்தின் பிசினைப் பொடி செய்து 400 மி.கி. அளவு கொடுக்க இருமல் நோய் குணமாகும்.

20.உப்பிலாங்கொடி – Pentatropis capensis – ASCLEPIADACEAE

இலையை வதக்கிப் பிழிந்த சாறு – 10 மி.லியை 10 மி.லி தாய்ப்பாலுடன் காலை, மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் மாந்தம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும்.

மாந்தத்தினால் வயிறு உப்பிகாணின் குழந்தைகளின் அரையில் இக்கொடியை கட்ட தீரும்.

21.ஊசித்தகரை – Cassia tora – CAESALPINIACEAE

இலையை நீரிலிட்டுக் காய்ச்சி 10 மி.லி வீதம் காலை, மாலை கொடுக்க குழந்தைகள் பல் முளைக்குங்கால் ஏற்படும் காய்ச்சல் தணியும்.

விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவ படை, சிரங்கு, ஆறாப்புண் ஆகியவை குணமாகும்.

22.எருக்கு – Calotropis gigantean – ASCLEPIADACEAE

இலையை வதக்கி கட்டிகளுக்குக் கட்ட அவை பழுத்து உடையும்

பூ – 1 பங்கு; மிளகு – 1 பங்கு, கிராம்பு – ½ பங்கு சேர்த்து மிளகளவு உருட்டிக் கொடுக்க கடின இரைப்பு உடனே தணியும்.

23.எழுத்தாணிப் பூண்டு – Launaea sarmentosa – COMPOSITAE

இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி உடம்பில் தடவ சொறி, சிரங்கு இவை குணமாகும்.

வேர் – 5 கிராம் பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும்.

24.ஓமவல்லி / கற்பூரவல்லி – Coleus aromaticus – LABIATAE

இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல். தொண்டைச் சதை வளர்ச்சி குணமாகும்.

இலைச்சாறுடன், சர்க்கரை, நல்லெண்ணெய் இவற்றை நன்கு கலந்து நெற்றியில் பற்றிட தலைவலி நீங்கும்.

இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்குப் பூச குணமாகும்.

25.ஓரிதழ் தாமரை – lonidum suffruticosum – VIOLACEAE

இலையை நாள்தோறும் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர 40 நாளில் தாது இழப்பு, வெட்டைச்சூடு, பலவீனம் ஆகியவை தீரும்.

இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இவை மூன்றையும் 1 பிடி அளவு எடுத்து அரைத்து எருமைத் தயிரில் கலந்து 10 நாட்கள் சாப்பிட நீர்த்தாரை புண், வெள்ளை ஒழுக்கு ஆகியவை தீரும்.

26.கண்டங்கத்திரி – Solanum xanthocarpum – SOLONACEAE

இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும்.

கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும்.

27.கரிசாலை / கரிசலாங்கண்ணி – Eclipta prostrate – ASTERACEAE

கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை, ஆகியவற்றின் சூரணம் சமன் கலந்து நாள்தோறும் காலை, மாலை ½ தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இளவயதில் தோன்றும் நரை மாறும்.

மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்து உண்ண உடல் பொன்நிறம் பெறும். அறிவு தெளிவு பெறும்.

28.ஊமத்தை – Datura metel – SOLANACEAE

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் ஆகியவை தீரும்.

இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் காதில் விட சீதளத்தால் வந்த காதுவலி தீரும்.

இலையை நீர் விடாது நல்லெண்ணெயில் வதக்கி நாய்க்கடிப் புண்ணில் கட்ட ஆறும்.

29.கருணை – Typhonium trilobatum – ARACEAE

கருணைக்கிழங்கைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி உலர்த்தி தயிரில் 3 நாள் ஊற வைத்து, எலுமிச்சம்பழச்சாற்றால் அரைத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பக்குவமாக பிசைந்து நெல்லி அளவு காலை, மாலை 6 மாதம் சாப்பிட மூலம் தீரும்.

30.கருவேல் – Acacia nilotica – MIMOSOIDEAE

கருவேலம்பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.

இலையை அரைத்துப் புண்கள் மீது கட்ட விரைந்து ஆறும்.

31.கல்யாண முருங்கை – Erythrina indica – CAESALPINIACEAE

இலைச்சாறு 30 மி.லி. 10 நாட்கள் மட்டும் கொடுக்க மாதவிடாய்க்கு முன், பின் காணும் வயிற்றுவலி தீரும்.

இலைச்சாறு – 10 துளி, 10 துளி – வெந்நீர் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தியாகி வயிற்றுப் புளிப்பு, கபக் கட்டு, கோழை நீங்கி பசியும் செரிப்புத் தன்மையும் அதிகப்படும்.

32.கழற்சி – Caesalpinia crista – CAESALPINIACEAE

கொழுந்துஇலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர விரைவீக்கம், விரையழற்சி குணப்படும்.

கழற்சி விதையும், மிளகும் சமஅளவு பொடித்துக் கலந்து 4 கிராம் அளவாக காலை மாலை சாப்பிட காய்ச்சல், குடல்வலி ஆகியவை தீரும்.

33.களா – Carissa spinarum – APOCYNACEAE

களாப் பழத்தை உணவு உண்ட பின்பு சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.

தூய்மையான களாப்பூவை நல்லெண்ணெயிலிட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள்தோறும் கண்களில் விட்டு வர கண்ணிலுள்ள படலங்கள் மாறும்.

34.கறிவேம்பு – Murraya koenigii – RUTACEAE

கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரை கலந்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர்க்கோவை, சூதக வாய்வு தீரும்.

இலை சிறிதளவு, மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் பிடி சோற்றில் நெய் விட்டு பிசைந்து உண்ண குமட்டல், வாந்தி, அசீரணபேதி போன்ற வயிற்றுக் கோளாறு ஆகியவை தீரும்.

35.அவுரி / நீலி – Indigofera tinctoria – PAPILINODEAE

அவுரி இலை, வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு சமன் சேர்த்து சுண்டை அளவு மாத்திரை செய்து 1 நாளைக்கு 3 வேளை கொடுக்க நரம்பு சிலந்தி, கீல்வாதம் தீரும்.

அவுரி இலையைக் கொட்டைப் பாக்களவு அரைத்து 250 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலை 3 நாள் கொடுக்க மஞ்சள்காமாலை தீரும்.

36.கானாவாழை – Commelina benghalensis – COMMELINACEAE

இலையைக் கசக்கி முகப்பருவிற்கு போட விரைவில் அது குணமடையும்.

இலையை அரைத்துக் கட்ட படுக்கைப் புண், மார்புக் காம்பைச் சுற்றி வரும் புண்ணாறும்.

இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்குப் பூச குணமாகும்.

37.கிணற்றுப்பாசான் / வெட்டுக்காயப்பூண்டு – Tridax procumbens –COMPOSITAE

இலையை நீர் விடாது அரைத்து வெட்டுக்காயம் சிராய்ப்பு ஆகியவற்றில் பற்றிட சீழ்ப்பிடிக்காமல் விரைந்து ஆறும்.

38.கிரந்தி நாயகம் – Dipteracanthus patulus – ACANTHACEAE

இலையை அரைத்து நகச்சுற்றுக்குப் பூச அவை குணமாகும்.

இலையை மென்றுத் தின்ன தேள், பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும். கடிவாயில் இலையை அரைத்துப் பூசலாம்.

39.கீழாநெல்லி – Phyllanthus amarus – EUPHORBIACEAE

இலையை உப்பு சேர்த்து அரைத்து தடவிக் குளிக்க சொறி, சிரங்கு நமைச்சல் நீங்கும்.

கீழாநெல்லியுடன் சமன் கரிசலாங்கண்ணி சேர்த்து அரைத்துப் பசும்பாலுடன் 45 நாள் சாப்பிட கல்லீரல் பழுது பாண்டு, சோகை தீரும்.

இலைச்சாறு, பொன்னாங்கண்ணி இலைச்சாறு சமன் கலந்து நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி தலைமுழுக பார்வைக் கோளாறுகள் தீரும்.

40.குப்பைமேனி – Acalypha indica – EUPHORBIACEAE

குப்பைமேனி சமூலச் சூரணத்துடன் நெய் கலந்து காலை, மாலை 40 நாட்கள் கொடுக்க பவுத்திர நோய் தீரும்.

இலையுடன் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சற்று நேரம் கழித்துக் குளிக்க தோல் நோய்கள் தீரும்.

41.குமரி / சோற்றுக் கற்றாழை – Aloe vera – LILIACEAE

பெண்ணின் கருப்பைக் குற்றங்கள்

அனைத்திற்கும் இது நன்மருந்தாகும்.

சோற்றை 10 முறை நீரில் அலசி காலையில் சாப்பிட வயிற்றுப்புண், உடல்சூடு, மூலம் தணியும்.

கற்றாழை சோறு – 100 கிராம், பனைவெல்லம் – 100 கிராம், வெள்ளைப்பூண்டு – 25கிராம் எடுத்து இதில் பனைவெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி அதனுடன் கற்றாழை சோறு சேர்த்து அடுப்பேற்றி நன்றாகக் கிளறிப் பாகு பதத்தில் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கிளறிப் பத்திரப்படுத்தவும். காலை, மாலை 5 கிராம் உண்டு வர உடல்சூடு தணிந்து வெள்ளை வெட்டை நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். வயிற்றுப்புண், மூலம் குணமாகும்.

42.கொட்டைக்கரந்தை – Sphaeranthus indicus – COMPOSITAE

கொட்டைக் கரந்தை சூரணத்துடன் கரிசலாங்கண்ணி சூரணம் சமன் கலந்து தேனில் குழைத்து சாப்பித இளநரை தீரும்.

கொட்டைக் கரந்தைப் பொடி – 5 கிராம் சிறிது கற்கண்டு பொடி கலந்து சாப்பிட வெள்ளை தீரும். நீண்ட நாள் சாப்பிட மூளை, இருதயம், நரம்பு ஆஆகியவை பலப்படும். கரப்பான் குணமாகும்.

43.கோவை – Coccina grandis – CUCURBITACEAE

1 பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லியாகக் காய்ச்சி காலை, மாலை குடித்து வர உடல்சூடு, கண்ணெரிச்சல் ஆகியவை தீரும்.

2 பச்சைக் காயை தினமும் சாப்பிட்டு வர மது மேக நோயைத் தடுக்கலாம்.

44.கோபுரந்தாங்கி – Indoneesiela echioides – ACANTHACEAE

இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமுறக் காய்ச்சி தலை முழுகி வர தலைமயிர் உதிர்தல் நிற்கும்.

வேரை உலர்த்திப் பொடி செய்து சமன் கற்கண்டு பொடி கலந்து காலை, மாலை ½ தேக்கரண்டி நெய்யில் சாப்பிட்டு வர எலும்பு, நரம்பு, தசை ஆகியவை வலுப்படும்.

45.சத்திச்சாரனை – Trianthema decandra – AIZOACEAE

இலைச்சாற்றை தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மைபோல் தீட்டி வர கண்ணோய் அனைத்தும் தீரும்.

இலையை நெய்விட்டு வதக்கிக் கீரையாகப் பக்குவப்படுத்தி உண்டு வர பசியின்மை, வயிற்றுளைச்சல், வயிற்றுவலி ஆகியவைத் தீரும்.

46.சரக்கொன்றை – Cassia fistula – CAESALPINIACEAE

பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கலும் அகலும்.

சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவு பாகங்களில் பயன்படுத்த மலச்சிக்கல் தீரும்.

47.சிற்றாமுட்டி – Pavonia zeylaica – MALVACEAE

தாதுக்களின் எரிச்சலைத் தணிக்கும் அருமருந்து.

வேர் – 10 கிராமை 100 மி.லி நீரிலிட்டு 25 மி.லியாகக் காய்ச்சி 2 சிட்டிகை திரிகடுகு சூரணம் சேர்த்து காலை, மாலை 3 நாள் கொள்ள சுரம் தீரும்.

48.சிவனார்வேம்பு – Indigofera aspalathoides – PAPILIONOIDEAE

இலையை அரைத்துப் பற்றிட கட்டிகள் உடையும் அல்லது அமுங்கி விடும்.

செடியை சுட்டு சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர சொறி, சிரங்கு ஆகியவை தீரும்.

49.சிறுநெருஞ்சில் – Tribulus terrestris – ZYGOPHYLLACEAE

30 மி.லி சமூலசாற்றுடன் மோர் (அ) பால் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமாகும்.

நெருஞ்சில் விதையைப் பாலில் வேக வைத்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு காலை, மாலை கொடுத்து வர தாது கட்டும், இளநீரில் சாப்பிட்டு வர கல்லடைப்பு, நீர்க்கட்டு குணமாகும்.

50.சிறுகண்பீளை – Aerva lanata – AMARANTHACEAE

சமூலத்தை நீரிலிட்டுக் குடிநீராக்கி காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் கரையும்.

சிறுபீளைச்சாறு – 50 மி.லி காலை, மாலை குடித்து வர சூதகவலி தீரும்.

51.சீந்தில் – Tinospora cordifolia – MENISPRMACEAE

முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால், அசதி, மிகு தாகம், உடல் மெலிவு ஆகியவை தீரும்.

52.சீமை அகத்தி – Cassia alata – CAESALPINIACEAE

இலையை எலுமிச்சம் பழச்சாறு கலந்து அரைத்துப் பற்று போட கரப்பான், புண், புரைகள் குணமாகும்.

இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மதியம், இரவு என சாப்பிட வண்டுக்கடி, அரிப்பு ஆகியவை தீரும்.

53.சுண்டை – Solanum torvum – SOLANACEAE

சுண்டை வற்றலைக் குழம்பாக்கி உண்ண, ஏப்பம் வயிறு ஊதுதல், வயிற்றுவலி முதலியன போகும்.

காயை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் இவைகளை சிறிது கூட்டி வறுத்துப் பொடித்து உணவுடன் கொள்ள மூலம், செரியாமை தீரும்.

54.செம்பரத்தை – Hibiscus esculentes – MALVACEAE

பூவை நீரில் ஊற வைத்து வேளைக்கு 30 மி.லி. கொடுக்க சிறுநீர் நோய்கள் தீரும், உடற்கு குளிர்ச்சி தரும்.

அதிகுருதி அழுத்த நோயுள்ளவர்கள் இதன் இதழ்களை தினமும் தின்று வர குருதி சுற்றோட்டம் சீராக அமையும்.

55.தண்ணீர்விட்டான் கிழங்கு – Asparagus racemosa – LILIACEAE

இலைச்சாறுடன் சம அளவு பால் கலந்து பருகி வர உடல் வெப்பம் தணியும்.

கிழங்கைப் பொடித்து தேனில் அல்லது பாலில் இருவேளை சாப்பிட உடல் உரமாகும்.

56.தழுதாழை – Clerodendrum phlomoides – VERBENACEAE

இலையை நீரில் கொதிக்க வைத்துக் குளிக்க வாதவலி அனைத்தும் நீங்கும்.

இலைச்சாற்றை மூக்கால் உறிஞ்ச மண்டைக் குடைச்சல், மூக்கு நீர் பாய்தல் குறையும்.

 57.திருநீற்றுப்பச்சிலை – Ocimum basilicum – LAMIACEAE

இலையை அரைத்துப் பூச கட்டி மறையும்

இலையை முகர்வதால் தலைவலி, தூக்கமின்மை ஆகியவை தணியும்

58.துத்தி – Abutilon indicum – MALVACEAE

இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர இரத்த மூலம், சீழ்மூலம் ஆகியவை தீரும்.

பூவின் சூரணத்துடன் சமன் சர்க்கரை கலந்து ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை பாலில் கொள்ள காசம், நுரையீரல் கபம் ஆகியவை தீரும்.

59.தும்பை – Leucas aspera – LABIATAE

தும்பைப் பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முழுக தலைப்பாரம், நீரேற்றம் தீரும்.

இலையை அரைத்துத் தடவி குளிக்க நமைச்சல், சொறி, சிரங்கு தீரும்.

60.துளசி – Ocimum sanctum – LABIATAE

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்த சாறு 5 மி.லி காலை, மாலை சாப்பிட்டு வர பசி அதிகரிக்கும்.

துளசி – 50 கிராம், மிளகு – 20 கிராம், இவற்றை மையாய் அரைத்து பயறளவு மாத்திரையாக்கி காலை, மாலை வெந்நீரில் இழைத்துக் கொடுக்க சகலவித காய்ச்சலும் தீரும்.

61.தூதுவளை – Solanum trilobatum – SOLANACEAEI

இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மார்புச் சளி நீங்கும்.

10 கிராம் பூவை தினமும் காய்ச்சி பால், சர்க்கரை கூட்டி 40 நாட்கள் பருக உடல் பலம் பெறும்.

62.தொட்டால்சுருங்கி – Mimosa pudica – MIMOSACEAE

இலையை அரைத்து பற்றுப் போட விரைவீக்கம், மூட்டு வலி, வீக்கம் ஆகியவை தீரும்.

இலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து ½ மணி நேரம் கழித்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர சிறுநீரகக் கற்கள் கரையும்.

63.தேள்கொடுக்கு – Heliotropium indium – BORAGINACEAE

இலையைக் கசக்கி தேள் கொட்டின இடத்தில் தேய்க்க நஞ்சு இறங்கி, கடுப்பு தணியும்.

இலைச்சாறு நல்லெண்ணெய் சமன் கலந்து பதமுறக்காய்ச்சி வடித்து காதுகளில் விட்டுவர காதடைப்பு தீரும்.

64.நஞ்சறுப்பான் – Tylophora indica – ASCLEPIADACEAE

இலையை உலர்த்திப் பொடித்து 1,2 கிராம் வெந்நீரில் 3 வேளையாக சாப்பிட்டு வர வியர்வை பெருகும்.

இலையை நன்கு அரைத்து எலுமிச்சங்காயளவு உள்ளுக்குக் கொடுத்து கடிவாயினும் வைத்துக் கட்ட வாந்தியாகி எல்லாவித நஞ்சும் முறியும்.

65.நத்தைச்சூரி – Hispida spermacoce – RUBIACEAE

10 கிராம் வேரைப் பசும்பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டி காலை, மாலை கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.

20 கிராம் வேரைச் சிதைத்து குடிநீராக்கி 200 மி.லியாக நாளொன்றுக்கு 3 வேளை கொடுக்க உடம்பைப் பற்றிய எவ்வித நோயும் படிப்படியாகக் குறையும்.

66.நந்தியாவட்டை – Tabernaemontana divaricata – APOCYNACEAE

கண் வலியுடையோர் இதன் பூக்களை கண்ணில் வைத்து ஒரு துணியால் இலகுவாகக் கட்டி உறங்கி வர கண் வலி, கண் எரிச்சல், கண் சிவப்பு மாறும்.

பூவால் ஒற்றடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கும்.

வேரை மென்று துப்ப பல்வலி நீங்கும்.

67.நல்வேளை / தைவேளை – Cleome gynandra – CAPPARACEAE

இலைச்சாறு 1 துளி காதில் விட சீழ் வருதல் நிற்கும்.

இலையை அரைத்து பற்றுப் போட சீழ்பிடித்த கட்டிகள் உடைந்து ஆறும்.

இலைகளை அரைத்துச் சாறு பிழிந்து, சக்கையை தலையில் வைத்துக் கட்டி வர தலைபாரம் குணமாகும்.

68.நன்னாரி – Hemidesmus indicus – ASCLEPIADACEAE

பச்சை நன்னாரிவேர் – 5 கிராமை நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், நீர்ச்சுருக்கு ஆகியவைத் தீரும்.

20 கிராம் வேரை ½ லிட்டர் நீரிலிட்டு 200 மி.லியாகக் காய்ச்சி காலை, மாலை சாப்பிட நாட்பட்ட வாதம், பாரிச வாதம் ஆகியவை தீரும்.

நன்னாரி மணப்பாகு கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான பானம்.

69.நாகமல்லி – Rhinacanthus nasuta – ACANTHACEAE

இலை அல்லது வேரை மென்று தின்ன பாம்புக்கடி நஞ்சு அகலும்.

இலை அல்லது வேரை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து பற்றுப் போட சொறி, கரப்பான் ஆகியவை தீரும்.

70.நாயுருவி – Achyranthes aspera – AMARANTHACEAE

துத்திக் கீரையை வதக்கி, நாயுருவி விதை சூரணம் – 20 கிராமுடன் கலந்து உணவில் சேர்த்து உண்ண மூலம் அனைத்தும் தீரும்.

நாயுருவி வேரால் பல்துலக்கப் பல் தூய்மையாகும்.

71.நாய்த்துளசி – Ocimum canum – LABIATAE

இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு தயிரில் கலந்து காலை, மாலை கொடுக்க மூலச்சூடு கணச்சூடு ஆகியவை தீரும்.

இலையை அரைத்துத் தடவிக் குளிக்க சொறி, சிரங்கு ஆகியவை தீரும்.

72.நாய்வேளை – Cleome viscosa – CAPPARACEAE

இலைச்சாற்றை சமஅளவு நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடித்துக் காதில் விட்டு வரச் சீழ்வடிதல் தீரும்.

நாய்வேளை இலையைப் பிற கீரைகளுடன் சமைத்து சாப்பிட வயிற்று வாயுவு அகலும், பசி மிகும்.

73.நித்தியகல்யாணி – Catharanthus roseus – APOCYNACEAE

6 பூவை அரைலிட்டர் நீரில் போட்டு காய்ச்சி கால் லிட்டராக வற்ற வைத்து 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதி மூத்திரம், மிகுபசி, உடல் பலவீனம் தீரும்.

இலைகளை தேங்காய் எண்ணெயிலிட்டு வெயிலில் காய வைத்து கை, கால் வலிகளுக்கு பயன்படுத்தலாம்.

74.நிலப்பனை – Coruligo orchoides – HYPOZYDACEAE

கிழங்கின் தோல், நரம்பு ஆகியவற்றை நீக்கி, உலர்த்திப் பொடி செய்து 5 கிராம் அளவுக்கு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர இடுப்புவலி தீரும்.

½ தேக்கரண்டி நிலப்பனைக் கிழங்குப் பொடியை 200 மி.லி பாலில் சேர்த்துச் சர்க்கரை கூட்டி 2 வேளை பருக வெள்ளை, வெட்டை தீரும்.

75.நிலவேம்பு – Andrographis paniculata – ACANTHACEAE

இது காய்ச்சலை அகற்றி நல்ல பசியைக் கொடுக்கும்.

கடைகளில் விற்கும் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிநீராக்கி குடிக்க சகல சுரங்களும் தீரும்.

76.நிலாவாரை – Cassia senna – CAESALPINIACEAE

நிலாவாரை இலைக்குடிநீரை சொறி, சிரங்கு, படை மீது தடவ அவை ஆறும்.

நிலாவாரை இலையைத் துவையலாய் அரைத்து இரவில் உண்ண மலசிக்கல் தீரும்.

77.நீர்பிரமி – Bacopa monnieri – SCHROPHULARIACEAE

இலையை வேக வைத்து அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும்.

இலையை அரைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.

இலைச் சாறுடன் நெய் சேர்த்து பதமாகக் காய்ச்சி 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை கொடுக்க சித்தபிரமை தீரும்.

78.நீர்முள்ளி – Hygrophilla auriculata – ACANTHACEAE

நீர்முள்ளி சமூலத்தை இடித்து 200 கிராம் அளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு ½ லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் தினம் 4 வேளை கொடுக்க ஊதிப்பெருத்த உடல் மெலியும்.

நீர்முள்ளி குடிநீரை குடித்து வர அனைத்து சிறுநீரக நோய்களும் குணமாகும்.

79.நுணா – Morninda tinctoria / cictrifolia – RUBIACEAE

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் தீர நுணாச்சாறு – 1 பங்கும், நொச்சி, பொடுதலை, உத்தாமணி ஆகிய மூன்றின் சாறு – 1 பங்கும் கலந்து 3, 4 வேளை 50 துளிக் கணக்கில் 6 மாத குழந்தைக்கு கொடுக்கவும். 1 வயதுக்கும் மேல் 10 - 30 மி.லி. வரையும் கொடுக்கலாம்.

இலையை அரைத்துப் பற்றிட இடுப்புவ்லி தீரும்.

80.நெல்லி – Phyllanthus emblica – EUPHORBIACEAE

10 கிராம் நெல்லிக்காயை இடித்து ½ லிட்டர் நீரிலிட்டு 100 மி.லியாகக் காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து, 40 மி.லி குடிநீரை 3 வேளை சாப்பிட பித்தம் தணியும்.

இலையை நீரிலிட்டுக் காய்ச்சி வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் தீரும்.

81.நேத்திரப்பூண்டு – Blepharis maderaspatensis – ACANTHACEAE

200 கிராம் சமூலம் ஒரு துணியில் முடிந்து 400 மி.லி. நல்லெண்ணெயில் போட்டு வேடு கட்டி 15 நாள் வெயிலில் புடம் வைத்து வடிகட்டி காலை, மாலை 2 துளி கண்ணில் விட பார்வைமங்கல், கண்ணெரிச்சல், கண்சிவப்பு, பீளை கட்டல், பார்வைக் குறைவால் வரும் ஒற்றை தலைவலி தீரும்.

82.நொச்சி – Vitex negundo – VERBENACEAE

இலையை தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து, நரம்பு வலி தீரும்.

நொச்சி இலை – 2, 4 மிளகு, 1 இலவங்கம், 4 பூண்டுப்பல் வாயில் போட்டு மென்று சுவைத்துச் சாற்றை மெதுவாக விழுங்கினால் மூச்சுத்திணறல் தீரும்.

83.பிரண்டை – Cissus quadrangularis – VITACEAE

பிரண்டைத் துவையல் செரியாமையை நீக்கி பசியைத் தூண்டும்.

ஓரிரு துளி பிரண்டை சாற்றை காதில் விட்டுவர சீழ்ப்பிடித்தல் தீரும்.

84.பிரம்மதண்டு – Argemone Mexicana – PAPAVARACEAE

இலையை அரைத்துக்கட்டி வர கரப்பான், சொறி, சிரங்கு தீரும்.

பிரம்மத்தண்டு சாம்பலால் பல் தேய்த்து வர பல்லட்டம், பல்சொத்தை, பல் கரைதல் ஆகியவைத் தீரும்.

85.சங்கங் குப்பி – Clerodendrum inerme – VERBENACEAE

இலைச்சாறு விளக்கெண்ணெயில் காய்ச்சி தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட சொறி, சிரங்கு, கருமேகம் தீரும்.

வேர்ச்சாறு – 5-6 துளி, தாய்ப்பாலில் கலந்து காலை, மாலை கொடுக்க பிறந்த குழந்தைகளுக்கு காணும் செவ்வாப்பு நோய் தீரும்.

86.புரசு – Butea monosperma – PAPILIONOIDEAE

இலையை வதக்கி அடிவயிற்றில் ஒற்றடம் கொடுக்க சிறுநீர்த்தேக்கம் விலகும்.

புரசம் விதைப் பொடி – 300 மி.கிராம், மூன்று வேளையாக, மூன்று நாட்களுக்குக் கொடுத்து நான்காம் நாள் விளக்கெண்ணெய் பேதிக்கு கொடுக்க குடல் புழுக்கல் வெளியேறும்.

87.புங்கு – Pongamia pinnata – PAPILIONOIDEAE

பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து, 1 சிட்டிகை காலை, மாலை தேனில் கொள்ள மதுமேகம் தீரும்.

புங்கன் எண்ணெய் எவ்வித புண்களையும் ஆற்றும்.

88.புன்னை – Calophyllum inophyllum – CLUSIACEAE

பட்டைக் குடிநீரால் புண்களைக் கழுவலாம்.

புன்னை விதையை அரைத்து கொதிக்க வைத்து பற்று போட முடக்குவாதம், வாதவலிகள் தீரும்.

மிக அழகிய மலர்களை உடைய மரம்.

89.பூவரசு – Tnespesia populnea – MALVACEAE

பழுப்பை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போடச் சொறி, சிரங்கு கரப்பான் குணப்படும்.

இலையை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.

90.பொடுதலை – Phylla nodiflora – VERBENACEAE

இலையை உளுத்தம் பருப்புடன் நெய்யில் வதக்கி துவையலாக்கி பகல் உணவில் கொள்ள உள்மூலம், இரத்தமூலம் தீரும்.

சமூலச் சாற்றில் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலை முழுகி வர கொடுகு தீரும்.

91.வெற்றிலை – Piper betal – PIPERACEAE

5 மி.லி. வெற்றிலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு காணும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

வெற்றிலையை மார்பகத்தில் ஒட்டி வைக்க பால்சுரப்பைத் தடுக்கும்.

92.வெள்ளறுகு – Enicostemma axillare – GENTIANACEAE

சமூலத்தை அரைத்து வெந்நீரில் குழைத்து உடம்பில் பூசி 1 மணி நேரம் கழித்துக் குளிக்க சொறி, சிரங்கு தீரும்.

மாதவிடாயின் முதல் 3 நாட்கள் சமூலத்தை அரைத்து எலுமிச்சங்காயளவு குடிக்க கர்ப்பப்பை புழு, மாதவிடாய் கோளாறு தீரும்.

93.விஷ்ணுகிரந்தி – Evolvulus alsinoides – CONVOLVULACEAE

சமூல விழுது 10 கிராம் தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதபேதி தீரும்.

சுரத்துக்கான குடிநீரில் சேரும்.

94.மாவிலங்கம் – Cretaeva magna – CAPPARACEAE

இலையை அரைத்துப் பற்று போட அனைத்து வீக்கங்களும் கரையும்.

பட்டை – 1 பங்கு, பூண்டு – ½ பங்கு; மிளகு – ¼ பங்கு அரைத்துக் கொட்டை பாக்களவு காலை வெறும் வயிற்றில் கொடுத்து வர முடக்கு வாதம் நீங்கும்.

95.மூக்கிரட்டை – Boerhavia diffusa – NYCTAGINACEAE

இலையை பொரியல் துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டு வர காமாலை, சோகை, வாய் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

இலையை தொடர்ந்து பயன்படுத்தி வர பொலிவும், இளமையும், வசீகரமும் உண்டாகும்.

96.மருதம் – Terminalia arjuna – COMBRETACEAE

மருத இலையை அரைத்து எலுமிச்சங்காயளவு காலை மட்டும் சாப்பிட்டு வர பித்த வெடிப்பு ஆகியவை தீரும்.

பட்டைத் தூளுடன் ஆடாதோடைச்சாறு – 1 தேக்கரண்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கொள்ள நுரையீரல் புண் தரும்.

பட்டைக் குடிநீர் இதய நோய்களை குணமாக்கும்.

97.மகிழ் – Mimusops elengi – SAPOTACEAE

பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய்க்கொப்பளிக்க வாய்ப் புண்ணாறும்.

காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்பப் பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப்படும்.

98.மலைவேம்பு – Melia azadirachta – MELIACEAE

10 மி.லி இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கான 3 ஆம் நாள் அதிகாலையில் கொடுத்து வரக் கருப்பைக் குற்றங்கள் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும்.

இலையையும், பூவையும் அரைத்துப் பற்று போட கடும் தலைவலி தீரும்.

மலைவேம்பாதித் தைலம் கடைகளில் கிடைக்கும்.

99.முடக்கறுத்தான் – Cardiospermum halicacabum – SAPINDACEAE

இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடல்வலி தீரும்.

இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர கீல்களில் உள்ள வாதபிடிப்பு தீரும்.

100.வல்லாரை – Centella asiatica – APIACEAE

இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்ட நாள் கட்டி வர யானைக்கால் நோய் தீரும்.

வல்லாரை, கீழாநெல்லி சமன் அரைத்து 5 கிராம் காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை இலைப்பொடி 13 பங்குடன் வசம்பு 1 பங்கு கலந்து உண்டுவர நினைவாற்றல் பெருகும்.

101.பொன்னாங்காணி – Alternanthera sessillis – AMARANTHACEAE

ஒரு பிடி பொன்னாங்காணி இலையை அதிகாலையில் மென்று தின்று பால் அருந்தி வர உடல் குளிர்ச்சியுற்று கண் நோய் பலவும் நீங்கும்.

இலைகளைக் கீரையாகப் பாகபடுத்து உணவுடன் நீண்ட நாள் சாப்பிட்டு வர உடற்சூடு, மூலம் முதலியவை குணமாகி உடல் வனப்பும் கண்ணொளியும் மிகும்.

102.மணத்தக்காளி – Solanum nigrum – SOLANACEAE

இலையை அரைத்துப் பற்று போட அழுகும் புண்கள், அடிவயிற்றுவலி, புரையோடிய புண்கள், தீப்புண், அக்கி, மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவை தீரும்.

இலையை வதக்கிக் கட்ட விரைவீக்கம்வலி ஆகியவை குணமாகும்.

103.மருதோன்றி – Lowsonia inermis – LYTHRACEAE

இலையை அரைத்து நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கச் சிறுகாயம், சிராய்ப்பு, அடி, வாய்ப்புண் ஆகியவை தீரும்.

இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலக்கிப் பச்சைநிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர முடி செழித்து வளரும்.

104.வில்வம் – Aegle marmelos – RUTACEAE

இலை விழுது 10 கிராம் கொடுத்து குளிர் நீரில் முழுகி வர பெரும்பாடு தீரும்.

ஒரு பிடி இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி ஆகக் காய்ச்சிக் கொடுக்க எவ்விதக் காய்ச்சலும் தீரும்.

105.வாத நாராயணன் – Delonix elata – CASEALPINIOIDEAE

இலையைப் போட்டு கொதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.

இலையை உலர்த்திப் பொடித்து 3 கிராம் நாள்தோறும் 1 முறை வெந்நீரில் சாப்பிட மேகம், வாயு தீரும்.

106.வேலிப்பருத்தி – Pergularia daemia – ASCLEPIADACEAE

காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இலைச்சாறு தடவலாம்.

இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும்.

வேலிபருத்திச்சாறு 30 மி.லி உள்ளுக்கு குடிக்க எல்லா வித வர்மப் பிடிப்புகளும் நீங்கும்.

107.மாதுளை – Punica granatum – PUNICACEAE

பழச்சாறு 15 மி.லி. கற்கண்டு அளவுடன் கலந்து காலை, மாலை பருக வாந்தி, மயக்கம், வெப்பம், மூலக்கடுப்பு, அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி, இரத்த

மூலம் தீரும்.

மாதுளம் பிஞ்சை அரைத்து நெல்லிக் காயளவு சாப்பிடப் பேதி தீரும்.

கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் மசக்கைக்கு மாதுளங்கா இரசாயணம் சிறந்தது.

108.முசுமுசுக்கை – Mukia maderaspatana – CUCURBITACEAE

சாற்றுடன் சம நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் ஒருமுறை தலை முழுக இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி தீர்வதுடன் கண் எரிச்சல், உடம்பு எரிச்சல் தீரும்.

20 கிராம் வேருடன் 10 கிராம் முட்காவேளை வேரை சிதைத்து 150 மி.லி. பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை பருகி வர மிகையான சளி, தொண்டைக் கம்மல் ஆகியவை குணமாகும்.

  • 703
  • More
Comments (0)
Login or Join to comment.