·   ·  116 posts
  •  ·  1 friends
  • 1 followers

இப்படியும் ஒரு வில்லத்தனம்

மரணப் படுக்கையில் இருந்த மிகப்பெரிய பணக்காரர் ஒருவருக்கு தன்னுடைய சொத்துக்கள் மீது உயில் எழுத வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது.

உடனே அவருடைய வழக்கறிஞரை அழைத்தார். வழக்கறிஞரும் அவருடைய இடத்திற்கு விரைந்து வந்தார்.

வழக்கறிஞரிடம் அந்த பணக்காரர் சொன்னார்,

'சார்..! மனித காயம் அநித்யமானதுன்னு உணர்றேன். வாழ்ந்தபோது கெட்டவழிகள்ல நிறைய பணம் சம்பாதிச்சு இருக்கேன். அதுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேட விரும்புறேன். அதனால நான் சொல்றபடி உயில் எழுதுங்க சார்'

வழக்கறிஞர் எழுத தயாரானார். அந்த பணக்காரர் சொன்னார்,

'என்னுடைய சொத்தில் 25 சதவீதம் பக்கத்து ஊரில் இருக்கும் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு செல்ல வேண்டும்'

அந்த பணக்காரரின் தயாள குணத்தை பாராட்டிக் கொண்டே வழக்கறிஞர் உயில் எழுதினார்.

'அடுத்த 25 சதவீதத்தை என் மகன்கள் இருவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்'

வழக்கறிஞர் கவனமுடன் எழுதிக் கொண்டிருந்தார். பெரியவர் தொடர்ந்தார்,

'மீதமுள்ள 50 சதவீதம் எனது மனைவிக்கு சேரும். ஆனால் அவள் அதை அனுபவிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மறுமணம் செய்து கொள்ள வேண்டும்'

வழக்கறிஞருக்கு குழப்பம் வந்தது. இதற்கு எந்த வினோத கண்டிஷன்?

தான் இறந்த பிறகு தனிமையில் மனைவி வாடிவிடக்கூடாது என்பதற்கான அன்பினால் இவ்வாறு சொல்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?

எந்த முடிவுக்கும் வர முடியாமல் தடுமாறி தவித்து முடிவாக அந்த முடிவு ஏன் என்பதை பணக்காரரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்கிற முடிவோடு பணக்காரரிடம் கேட்டார் வழக்கறிஞர்,

'உங்கள் மனைவி மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என நீங்கள் நினைப்பதை பார்த்தால் நீங்கள் ஒரு புரட்சிவாதி போல் தெரிகிறது.

உங்கள் மனைவி மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என் நீங்கள் முடிவெடுத்திருப்பது புரட்சியின் வெளிப்பாடா? அல்லது உங்கள் மனைவி மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடா?'

நீண்ட பெருமூச்சு விட்டு அந்த பணக்காரர் பதில் சொன்னார்,

'நான் ரொம்ப கொடுமைக்காரனா வாழ்ந்ததினால் நான் இறந்த பிறகு யாரும் என்னை நினைக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு நான் கொடுத்த நன்கொடையை பாராட்டி அவர்கள் என்னை நினைப்பார்கள். ஆனாலும் என்னைவிட பெரிய பணக்காரன் இதைவிட அதிக தொகை கொடுத்தால் என்னை மறந்து விட்டு அவனை நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் என் எண்ணம் நிறைவேற வழியில்லை.

என் மகன்கள் நான் வாழும் பொழுதே என்னை நினைக்கவில்லை. இறந்த பிறகு என் நினைப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு சத்தியமாக கிடையாது.

அதனால் தான் என் மனைவி நான் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என ஒரு கண்டிஷனை உயிலில் போட்டு வைத்தேன்'

வழக்கறிஞருக்கு புரிந்து போனது. கணவன் இறந்த பிறகும் மனைவி கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என ஒரு வாழ்க்கை துணையை தேட கணவன் அனுமதி கொடுத்திருக்கின்றான் என்றால் அந்த கணவனை அவள் அனுதினமும் நினைத்துப் பார்ப்பாள். இதுதான் அந்த பணக்காரரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

'ச்சே..! இந்த கலிகாலத்திலும் எப்பேர்பட்ட மனுஷன்

வியந்து போன வழக்கறிஞரின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டது போல அந்த பணக்காரர் பேசினார்,

'நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது சார். ஆனா அதுக்காக நான் அவளுக்கு கல்யாணம் பண்ணச் சொல்லி கண்டிஷன் வைக்கலை.

பிறகு ஏன் அப்படி ஒரு கண்டிஷன்னு கேட்குறீங்களா?

துட்டுக்கு ஆசைப்பட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிறவன்,

கல்யாணம் பண்ணின பிறகு...

'செத்தவன் செவனேன்னு செத்து தொலைக்காமல் இப்படி ஒரு கிரகத்தை தலையில் கட்டி வச்சிட்டு செத்துட்டானேன்னு...

அனுதினமும் என்னை நினைத்துப் பார்க்க ஒரு ஜீவன் வேண்டும் என்பதினால் தான் அப்படி எழுதினேன்'

  • 179
  • More
Comments (0)
Login or Join to comment.