·   ·  216 posts
  •  ·  1 friends
  • 1 followers

சுடுநீரில் சிறிது கிராம்பு சேர்த்து குடித்தால்....

கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் மற்றும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்களை பார்ப்போம்.

நன்மைகள்:

▪ கிராம்பு டீயில் விட்டமின், சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

▪ காலையில் ஒரு கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாகும்.

▪ தலைவலி, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் குறைபாடு, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகளைத் தடுத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

▪ இரத்த ஓட்டத்தை சீராக்கி பல் வலி போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே பல் வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீ குடிக்கலாம்.

செய்முறை:

ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் ஐந்து கிராம்பை சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால் ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.

  • 626
  • More
Comments (0)
Login or Join to comment.