·   ·  59 posts
  •  ·  0 friends

விமான நிறுவனங்கள் தாடியை ஏன் அனுமதிக்கவில்லை?

ஒற்றை வார்த்தையில் கூற வேண்டுமானால் பாதுகாப்பு கருதி இவற்றிற்கு விமான நிறுவனங்கள் தடை விதித்து வருகின்றன. விமானங்கள் குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே பறக்கும்போது ஆக்சிஜன் மாஸ்க் அணிய வேண்டியிருக்கும். இந்த காரணத்திற்காகவே விமானிகளை தாடி வளர்க்க விமான நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.

12,500 அடிக்கு மேல் விமானங்கள் பறக்கும்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காற்றழுத்தம் குறையலாம். அந்த நேரத்தில் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டால் பெரும் ஆபத்து ஏற்படும். மேலும், தடையின்றி அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் தாடிகள் ஆக்சிஜன் வழங்குவதை தடைச் செய்யக்கூடாது என்ற ஒற்றை காரணமே எந்தவொரு விமான நிறுவனமும் அதிகளவில் தாடி வளர்க்க அனுமதிப்பதில்லை.

குறிப்பாக, தாடி அதிகம் இருந்தால், விமானிகளின் முகத்தில் மாஸ்க் இறுக்கமாக பொருந்தாது. இதனால் விமானிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் வீணாகும் நிலை உருவாகும். இந்த வாதத்தை முன் வைத்தே பல நிறுவனங்கள் தாடி வளர்க்க விமானிகளை அனுமதிப்பதில்லை.

இந்த விஷயத்தில் அறிவியல் என்ன சொல்கிறது?

சமீபத்தில், கனடாவில் உள்ள சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம், தாடி வைத்திருக்கும்போது ஆக்ஸிஜன் முகமூடியைப் பயன்படுத்தினால் எத்தகைய விளைவுகள் உருவாகின்றன என்பதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. இதற்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.

குழுவில் ஒருவருக்கு முக முடி அணிவிக்கப்படவில்லை. ஒருவருக்கு லேசான முக முடி இருந்தது. கடைசியாக ஒருவருக்கு தாடி போன்ற முக முடி அணிவிக்கப்பட்டது. ஆக்ஸிஜன் முகமூடியைப் பயன்படுத்தினால், ஆக்சிஜன் அளவு எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு சோதித்தனர்.

முகமூடிக்கும், தாடிக்கும் இடையில் வேறு ஏதேனும் எரிச்சலூட்டும் அனுபவம் ஏற்படுகின்றதா என்பது பற்றிய ஆய்வையும் அவர்கள் மேற்கொண்டனர். முடிவு, இல்லை என்றே தெரிய வந்தது. ஆமாங்க, தாடி வைத்திருப்பவர், தாடி இல்லாதவர் அனைவரும் ஒரே மாதிரியான அனுபவங்களை அனுபவித்திருக்கின்றனர்.

இருப்பினும், இந்த ஆய்வைக் கொண்டு அவ்வளவு எளிதில் பழங்காலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் விதிகளை மாற்றிவிட முடியாது என விமானத்துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த விதிகளை மாற்றுவதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னர் கூடுதல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். ஏனெனில் பாதுகாப்பு அவர்களின் (விமானிகளின்) முதன்மை அக்கறை என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தாடியை அனுமதிக்கும் விமான நிறுவனங்கள் இருக்கின்றதா?

விமானிகளை தாடி வைக்க உலகின் பல முன்னணி விமான நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. அதில் சில அமெரிக்க அல்லாத விமான நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே ஏர் கனடா. சில விமான நிறுவனங்கள் பிற நிறுவனங்களைச் சில தனித்துவமான விதிமுறைகள நடை வைத்திருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.

எந்த விமான நிறுவனங்கள் தாடியை அனுமதிக்கவில்லை?

அமெரிக்கா, தென்மேற்கு நாடுகள் மற்றும் யுனைடெட் போன்ற பெரிய நாடுகளில் எல்லாம் விமானிகள் தாடியை வைக்க அனுமதிப்பதில்லை.

எதிர்காலத்தில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணம் ஏர் கனடா. இந்த நிறுவனத்தை போல் இன்னும் பல நிறுவனங்கள் தங்களின் விமானிகளை தாடியை வளர்க்க அனுமதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பைலட்டுகள் தாரளமாக மீசையை வளர்க்கலாம் என்ற பல நிறுவனங்கள் கூறி வருகின்றன. இருப்பினும், பல விமானிகள் தங்களின் தாடியுடன் சேர்த்து மீசையையும் சரித்துவிடுகின்றனர். இருப்பினும், ஒரு சில விமானிகள் மீசை வைத்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

  • 14
  • More
Comments (0)
Login or Join to comment.