- · 1 friends
-

சிந்திப்போமா?
எடுக்காத போன்கால்கள் சில வாழ்வுகளை முடித்துவிடும்..
சொல்லாத பாராட்டுக்கள் சிலர் துயருக்குள் கொண்டு விடும்.
நடக்காத சந்திப்புகள் நட்புகளையே பிரித்துவிடும்..
நடிகர் சுஷாந்த் இறக்குமுன் ப்ரியப்பட்ட யாருக்கோ போன் செய்திருக்கிறார். நண்பனோ அல்லது காதலியோ...அந்த போனை எடுத்து பேசி இருந்தால் ஒரு வேளை சுஷாந்த் இன்று உயிருடன் இருந்திருக்கலாம்...
சில்க் ஸ்மிதா நடிகையாக வளர்ந்த காலத்தில் அவருக்கு போட்டியாக இறங்கியவர் அனுராதா. அனுராதாவுக்கும், சில்க்குக்கும் ஆகவே கூடாதென கங்கணம் கட்டி பரப்பப்பட்ட வதந்திகளால் சில்க் அனுராதாவோடு பேசுவதேயில்லை.
ஒரு காலகட்டத்தில் சில்க்கின் சொந்தப்படத்தில் அனுராதா நடிக்க சென்றபோது இருவரும் நட்பாகி தோழிகளாகினர். வாடி போடி என அழைக்கும் நட்பாகி மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தனர்.
ஒரு நாள் இரவு சில்க் அனுராதாவை போனில் அழைத்து உடனே சந்திக்க வேண்டும் என சொல்ல அனுராதாவோ இப்போது தான் ஊரிலிருந்து வந்திருக்கிறேன். நாளை காலை சந்திப்போம் என சொல்ல..மறு நாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பிறகு சில்க்கை சந்திக்க முடிவெடுத்து பிள்ளைகளை தயார் படுத்தும் போது டிவியில் சில்க் தற்கொலை செய்தி...
ஒரு வேளை அனுராதா பேசி இருந்தால் அது நிகழாமல் இருந்திருக்கலாமோ?
எந்த அழைப்பையும் எடுங்கள். எவரையும் புறக்கணிக்காதீர்கள்...புறக்கணிப்பு ஒரு பெரிய கொடுமை. அதை பல விதத்தில் பெற்ற அனுபவம் பலருக்கும் இருக்கும்...
நான் வெளிநாட்டிலிருந்து யாருக்கும் போன் செய்வதில்லை. பேசினால் எல்லோரும் ஏதோ அவசரவேலை இருப்பது போல்..அப்படியா..சௌக்கியமா...வச்சிடவா என உடனே வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அதோடு போன் அழைப்பையே விட்டு விட்டேன்....
நடைபெறாத சந்திப்புகள் துயரங்களை தந்து விடலாம்...புறக்கணிப்புகள் ஏக்கங்களை தந்துவிடலாம்.....