- · 1 friends
-

மனம் என்னும் அற்புதம்
மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும், வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.
நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.
ஒரே நீரைத் தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோஅதைப் பொறுத்துத்தான் நம்முடைய தன்மை வெளிப்படும்.
நாம் எதை சேர்க்கிறோம் அற்பமானதையா? இல்லை அற்புதத்தையா ?
அற்பமானது என்னும் ஆறு குணங்கள்
1. பேராசை
2. சினம்
3. கடும்பற்று
4. முறையற்ற பால்கவர்ச்சி
5. உயர்வு தாழ்வு மனப்பான்மை
6.வஞ்சம்
அற்புதம் என்னும் ஆறு குணங்கள்
1. நிறை மனம்
2. பொறுமை
3. ஈகை
4. கற்பு நெறி
5. சம நோக்கு
6. மன்னிப்பு
இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பையும் கருணையையும், அறிவாய் விளங்கும் பேராற்றலையும்
உள்ளுணர்வாய் உணர்ந்தால்
அற்பமான தேவையற்ற குணங்கள்
நம்முள் எட்டிப் பார்காது.
அற்புதமான நற்குணங்கள்
நம்மோடு இணைந்து வழிநடத்துமே.
இறையே குருவே சரணம்.
கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவது எப்படி ?
கெட்ட நேரம் தீய எண்ணத்தால் வரும்.
நல்ல நேரமாக மாற்ற எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றுங்கள்.
கெட்ட நேரம் தானாக ஓடி விடும்.
எமகண்டம், ராகு, குளிகை என்று பயமுறுத்துகிறார்களே ?எப்படி தப்பிப்பது ?
நாலு பேருக்கு உன்னால் முடிந்த உதவியை மனப்பூர்வமாக செய்தால் போதும். அவைகள் உன்னிடமிருந்து தப்பி ஓடிவிடும்.
தீதும் நன்றும் பிறர் தர வரா.