·   ·  21 news
  •  ·  1 friends
  • 1 followers

கனமழை எச்சரிக்கை

 கனடாவின் சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மற்றும் க்யூபெக் மாகாணங்களில் வியாழக்கிழமை முழுவதும் கனமழை எச்சரிக்கை தொடருகிறது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

டொரண்டோவின் வடபகுதி மற்றும் ஓட்டாவா புறநகர் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மழை எச்சரிக்கை அமலிலுள்ளது. பேரி சவுண்ட் (Parry Sound), ரோஸோ (Rosseau), கில்பியர் மாகாண பூங்கா (Killbear Provincial Park) ஆகிய பகுதிகளில் 40 முதல் 60 மில்லிமீட்டர் வரையான மழை பெய்யக்கூடும் என்றும், இது மதியம் வரை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நேரத்தில் வாகனங்களை அவதானமாக செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

  • 756
  • More
Comments (0)
Login or Join to comment.