GomathiSiva

  •  ·  Premium
  • 5 friends
  • I

    9 followers
  • 4055 views
  • 28
Added a post  
புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா...புருஷனோட contact லிஸ்ட் ல...Super womenSweet heartDream girlPrincessLovely ladyஇந்த பேர் எல்லாம் பார்த்து வெறி ஆகிட்டா...இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு...ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா...முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட அம்மா அட்டெண்ட் பண்ணாங்க...ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவன் தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (மனைவி) அவளோட நம்பரு...நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது மகளோட நம்பரு...கடைசி நம்பருக்கு கால் பண்ணா மாமியார் நம்பரு....மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டிஅப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5000 டாலர் பணத்தையும் கொடுத்து போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்...இந்த வாரம் போய்ட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சா...வெளிய வந்த நம்மாளு Mechanic ன்னு save பண்ணி வச்சிருந்த அவன் ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...
  • 35
Added a post  
அச்சம் ,,,,,ஒரு மடத்தில் துறவி ஒருவர் இருந்தார். நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்று வந்தனர். சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், “எல்லாத்தீமைகளுக்கும் அச்சம் தான் அடிப்படைக் காரணம்;அச்சத்தால் வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம் எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது,'' என்றார். குறுக்கிட்ட சீடர் ஒருவர்,“ஐயா! அச்சத்தால் பேராசை உண்டாகும் என்கிறீர்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,'' என்றார். அதற்கு அவர் பதில் ஏதும் சொல்ல வில்லை. அன்றிரவுவழக்கம் போலத் துறவியும், சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர். அப்போது துறவியிடம் வந்த சமையல்காரர், “மடத்தில் அரிசி தீர்ந்துவிட்டதை நான் கவனிக்கவில்லை. இருந்த அரிசியை வைத்து இரவு சமையலை முடித்து விட்டேன். நாளை நகரத்திற்குச் சென்று அரிசி வாங்கி வந்தால் தான்,சமையல் செய்ய முடியும். நண்பகலில் தான்உணவு தயாராகும். காலை உணவு சமைக்க வழி இல்லை,'' என்றார். பிறகு அவர் எல்லாருக்கும் உணவு பரிமாறினார். துறவியும், சீடர்களும் உண்டு முடித்தனர். சீடர்களைப் பார்த்து துறவி,“இன்று நீங்கள் அனைவரும் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டு உள்ளீர்கள் ஏன்'' என்று கேட்டார். “நாளை காலையில் உணவு கிடையாது என்று சமையல்காரர் சொன்னார். காலையில் பட்டினிகிடக்க வேண்டி இருக்கும். அதனால், இப்போதுஅதிகமாகச் சாப்பிட்டுவிட்டோம்,''என்றார் சீடர்களில் ஒருவன்.“நாளை காலையில் உணவு கிடைக்காது என்று அச்சம் கொண்டீர்கள். அதனால் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டீர்கள். அச்சத்தால் பேராசை வரும், என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா'' என்றார் துறவி.அச்சத்தால் பேராசை வரும் என்பதை ஒப்புக்கொண்டனர் சீடர்கள்.அனுபவம் என்பது எதை எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. எதை எப்போது செய்யக் கூடாது என்று தெளிவாக இருப்பதாகும்.எல்லாமே தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம் தவறில்லை.ஆனால்அடுத்தவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடக்கூடாது. அது தவறு துணிவு உங்களை உழைப்பில் உயர வைக்கும் ...பணிவு உங்களை பிறர் மனதில் உயர வைக்கும் .
  • 91
Added a post  
கடைசியாக எப்போது கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்?இதுவரையில்லையென்றால்முதலில்தரையில் 15 நிமிடம் உட்காருங்கள். இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது. லேசாக முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார முயலுங்கள், இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாதுமுதுகுநேராகத் தான்இருக்கும்.இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு கிடைக்கும்.நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான்.  நாற்காலி சோபாவில் அமர்வதன் தீமைகள்.இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது.மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது. இது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான். இதனால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர நிற்கப்போவது கிடையாது.ஜெரென்டாலஜி, எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள். ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டு மெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது. கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு. தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்.*ஜெரென்டாலஜி துறை, ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து, எழ வைத்து ஆய்வு செய்தார்கள். கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு.ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு.இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு. இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆன்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விசயம் பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்.கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள். செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்.கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம்.சோபா, சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு. அடுத்து பின்புற வலி. காரணம் சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள். காரணம் அவர்கள் வாழ்வதே தரையில் தான். கீழே படுத்து, உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும், எலும்புகளும் அத்தனை வலுவாகி விடுகின்றன. ஆனால் சோபா, மெத்தையில் படுத்து பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு வயதானபின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவதுதான்.ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன என சொல்லுகின்றன ஆய்வுகள். சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி, முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத் தண்டையும், மூட்டையும் வலுவாக்குகின்றன.அதனால் இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில் இனி உட்கார்ந்து பழங்குங்கள். அப்படி உட்கார்கையில் முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள். இது காலின் அடக்டர் (Adductor Muscle) தசைகளை பிளெக்சிபிள்(Flexible) ஆக்கி போஸ்ச்ரசை (Posture) சரி செய்யும்.சுகாசனம் செய்வோம் .. சுகமாக இருப்போம்.
  • 91
  • 99
Good Morning...
  • 105
  • 116
Added article  
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த, ஷங்கர் இயக்கிய 2.o படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, சூர்யா தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், இறுதிச் சுற்று படத்தில் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். அதேபோல் பேட் மியான் சோட்டே மியான் என்ற படத்தில் நடித்திருக்கும் அக்‌ஷய்குமார், மும்பையில் இப்பட ஆடியோ ரிலீஸ் விழாவில் பங்கேற்றார். அவருக்கு அருகில் இந்தி நடிகை ஆல்யா நின்றிருந்தார். அவர் அணிந்திருந்த நீளமான ஆடை தரையில் சரிந்து கிடந்தது. அந்த அடையை கவனிக்காமல் அக்‌ஷய்குமார் மிதித்தபடி நின்றிருந்தார். இதனால் ஆல்யாவால் சில நிமிடங்கள் நகரமுடியவில்லை. ஆனால், அக்‌ஷய்குமார் அந்த ஆடையில் நின்றபடி மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது விமர்சனம் குவிந்து வருகிறது.
  • 309
Added article  
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’தலைவர் 171’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்தது.இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்னால் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் ஏப்ரல் 2 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் ஸ்டைலிஷ் ஆக கையில் விலங்குடன் இருப்பதை பார்க்கும் போது இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக லோகேஷ் கனகராஜ் கூற வருகிறார் என்பது மட்டும் புரிய வருகிறது.
  • 313
Added article  
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் முதல் பாகத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். சினிமாவில் நடிப்பதை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய ஊர்மிளா கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.  அதன்பின்னர், 2020 ஆம் ஆண்டு சிவசேனா கட்சியில் இணைந்தார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் நடிகை கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத், என்னைப் பற்றி ஊர்மிளா பேசியதைப் பார்த்தேன். தேர்தலில் போட்டியிடுவது அவ்வளவு சிரமமில்லை. ஊர்மிளா ஒரு வகையில் ஆபாச நடிகை தான். அவரது நடிப்பு திறனுக்காக அவர் அறியப்படவில்லை. அவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும்போது எனக்குக் கிடைக்காதா? என்று தெரிவித்தார். சமீபத்தில் கங்கனா ரணாவத் பாஜக சார்பில் இமாச்சர பிரதேசத்தின் மண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  சமீபத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாலர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் தன் வலைதள பக்கத்தில் கங்கனா ரணாவத் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையானது. இதற்கு கங்கனா கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் கங்கனா ரனாவத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஊர்மிளா பற்றி பேசிய வீடியோவும் பரவி வருகிறது.  இதற்கு கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆபாச நட்சத்திரம், ஆபாச நடிகை என்பது இழிவான சொல்லா. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஆபாச நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் மரியாதை பற்றி சன்னிலியோனிடம் கேளுங்கள். நான் எதையும் நியாயப்படுத்தவில்லை, கவர்ச்சி பெண் ஷூலா கி ஜவானி போன்ற வார்தைகளால் நடிகைகளுக்கு ஏற்புடையதாக இருந்தால் இதை ஏன் இழிவாக பார்க்க வேண்டும்? எந்த தனிப்பட்ட விதத்திலும் ஊர்மிளா மடோன்கரை நான் அவமதிக்க வேண்டும் என்று எண்ணவில்லை என்றார்.
  • 297
Added a news  
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி ஆனந்த் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் நான்காம் தேதி நீட்டித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். இதன்மூலம் 30 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 297
Added a news  
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.  அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இதில் குளறுபடி இருப்பதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவையில் அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:   Indian Non Judical பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்காக India Court Free பத்திரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.ஐ.எம்-ல் படித்ததாக கூறும் அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை. மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 
  • 312
Added a news  
உலகின் முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டெல் நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு 6650 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா வைரஸ் காலகட்டத்தில் கூகுள், மைக்ரோசாப்ட் உட்பட பல பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என்பதும் சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட பணி நீக்க நடவடிக்கையை எடுத்தது .ஆனால் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி விட்டதை அடுத்து ஒரு சில நிறுவனங்கள் அதிகமான ஊழியர்களை பணியில் அமர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை பெரிய நிறுவனங்கள் எடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சமீபத்தில் கூட பேபால் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது டெல் நிறுவனம் உலகம் முழுவதும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வருவதாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
  • 332
Good Morning...
  • 557
Added a news  
போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை மீறல் என சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர்.இருந்தபோதும் , அந்த நடவடிக்கையை அன்று எடுக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பியிருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கடினமான மற்றும் விரும்பத்தகாத யுகத்தின் பின்னர் ஒரு நாடாக முன்னோக்கி செல்லும் பயணத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, ஒவ்வொரு துறையிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.நாட்டின் தற்போதைய பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடும் நோக்குடன் முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.பரீட்சை சுமையை குறைத்து பாடசாலை கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழக கட்டமைப்பில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றத்தின் கீழ் அந்த வேலைத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
  • 682