GomathiSiva

Added article 
இந்தியாவில் Music Entrepreneurship என்ற பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஒரே நபர் நான் தான் என நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
  • 103
Added a news 
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு 9 மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் 68 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் கொரோனா வைரஸ் தொற்று மட்டுமின்றி புதிய வைரஸ் காய்ச்சலும் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பெங்களூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • 103
Added a news 
சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்னால் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்ததை அடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகிவிட்டார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவர் இருதய பாதிப்புக்காக தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 91
Added article 
1972 ஆம் ஆண்டு,பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் ஜேசுதாஸ் மற்றும் ஜேக்கப்புடன்,எம்ஜிஆர் தனது நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியை முடித்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம்.
  • 87
Added article 
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், மோகன்லால், சுனில், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், சிவ் ராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதால் 'ஜெயிலர்' படத்தை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • 87