Added a post
இரவு நேரக் காவலன் அவன்.பளபளவென்று விடிந்தபோது பரபரப்பானான்.ஓடிப்போய் முதலாளியின் அறையைத் தட்டினான்; எழுப்பினான்;திறந்து நின்றவரிடம் சொன்னான்:ஐயா.. ...நீங்கள் இன்றைக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யப் போகிறீர்களா?'ஆமாம்,பக்கத்து டவுனுக்குப் போக வேண்டும்.ஏன் கேட்கிறாய்?'ஐயா...தயவுசெய்து போகாதீர்கள், அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிப் போவது போல. கெட்ட கனவு கண்டேன். அதிலே நீங்களும் இருந்தீர்கள், ஆகவே போகாதீர்கள்!'சரி, எதுக்கு வம்பு?'என்று அவரும் போகவில்லை.அவன் சொன்னது போலவே... அன்றே அந்த ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து பயணம் செய்த எல்லோருமே பலியாகிப் போனார்கள்.தன்னைக் காப்பாற்றிய காவலனை உடனே அழைத்தார் முதலாளி. கை நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தார்.கரம் கூப்பி நன்றி கூறினார்.அதோடுஓர் ஆணையும் இட்டார்:நாளை முதல்நீ வேலைக்கு வரவேண்டாம்! உன்னை வேலையிலிருந்து தூக்குகிறேன்!'அதிர்ச்சியோடு நின்ற காவலனிடம் சொன்னார் முதலாளி: 'அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிப் போவது போல் கனவு கண்டதாகச் சொன்னாய்! இரவு நேரக் காவலன் நீ எப்படித் தூங்கலாம்? இப்படிக் கனவு காணும் அளவுக்கு நீ தூங்கினால், என் உடைமைகளுக்கு ஏது பாதுகாப்பு?'கறாராய்ச் சொல்லிவிட்டார்.
Added a post
தன்னுடைய பெயரை பயன்படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜர் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க வைத்தார். ஒருமுறை காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் , காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :" அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ? வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன் " என்றார்
Added a post
தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம்.பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள்.இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது.இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று.பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;திரிஜன்ம பாப சம்ஹாரம்ஏக பில்வம் சிவார்ப்பணம்.என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம்.வில்வத்தின் விஞ்ஞான குணம்:வில்வத்துக்கு ஆங்கில பெயர் Bael, Aegle marmelos.ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம்
Added a post
ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தேறியது. ராமன் அரியணை ஏறி அமர்ந்தான். உடனே அனுமன் கொஞ்சமும் அலுங்காமல், நலுங்காமல் அந்த சிம்மாசனத்தைத் தூக்கித் தாங்கிக்கொண்டான். அங்கதன் உடைவாளைத் தன் கையில் பற்றிக்கொண்டு ஒரு பாதுகாவலனாக நின்றிருந்தான்.பரதன் சிம்மாதனத்துக்கு மேலாக வெண் கொற்றக் குடையைப் பிடித்திருந்தான். லட்சுமணனும், சத்ருக்னனும் இருபுறமும் நின்றபடி வெண் சாமரம் வீசினார்கள்.அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் நிறைவேறின. விருந்தினர் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு விஞ்சியும் பொன்னும், பொருளும் வாரி வாரி வழங்கினான் ராமன்.விபீஷணனின் முறை வந்தது. ‘‘உனக்கென்று நான் தருவதற்கு என்ன இருக்கிறது விபீஷணா? என் சீதை என்னிடம் வந்து சேருவதற்குப் பெரும் பொறுப்பை மேற்கொண்டவனல்லவா நீ?உனக்கு எங்கள் குலத்தார் வழிபடும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் விக்ரகத்தை அளிக்கிறேன். அதோடு நீ என்றென்றும் சிரஞ்ஜீவியாக, வாழ வரமும் அளிக்கிறேன்.…’’விபீஷணன் மிகுந்த அடக்கத்துடன், அந்தப் பெருமையை ஏற்றுக்கொண்டான். ஆனால் உடனிருந்த சீதை திடுக்கிட்டாள். அவளைப் பார்த்து சந்தேகமாய் வியந்தான் ராமன். ‘‘என்ன சீதா…?’’ என்று அன்பு பொங்க கேட்டான்.‘‘வந்து… அசோகவனத்தில் உயிர் பிரித்துக் கொள்ளும் துக்கத்தில் ஆழ்ந்திருந்த என்னை ‘ராம், ராம்’ என்று தங்கள் நாமம் சொல்லி உயிர்ப்பித்தவன் நம் அனுமன். தங்களை மீண்டும் சந்தித்துவிட முடியும் என்று அவன் கொடுத்த நம்பிக்கை ஆனந்தத்தில், அவனை நான் ‘சிரஞ்ஜீவியாக வாழ்க’ என்று வாழ்த்தினேன்…’’ தயங்கியபடி சொன்னாள் சீதை.‘‘சரி, இதில் தயங்குவதற்கு என்ன இருக்கிறது?’’‘‘இப்போது நீங்கள் விபீஷணனை ‘சிரஞ்ஜீவி’ என்று வாழ்த்தினீர்கள். ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட அதே பட்டத்தை இப்போது விபீஷணனும் பெறுவானானால், அது தன் முக்கியத்துவத்தைக் குறைத்ததுபோல ஆகும் என்று அனுமன் வருந்த மாட்டானா?’’ராமன் புரிந்துகொண்டான். உடனே பரவசத்தில் கண்மூடி ஆனந்தித்திருந்த அனுமனருகே சென்று அவனை மெல்லத் தொட்டான். ‘‘ஆஞ்சநேயா…’’ என்று பாசத்துடன் அழைத்தான். பளிச்சென்று கண் மலர்ந்தான் அனுமன்.‘‘வந்து… இப்போது நான் விபீஷணனை ‘சிரஞ்ஜீவி’யாக வாழ வாழ்த்தினேன்…’’‘‘மிகுந்த சந்தோஷத்துடன் அதை கவனித்தேன் ஐயனே..’‘‘சந்தோஷமா! அசோகவனத்தில் சீதை உன்னை ‘சிரஞ்ஜீவி’ என்று ஆசிர்வதித்தாள். இப்போது நான் விபீஷணனை அவ்வாறே ஆசிர்வதித்தேன். இதனால் உனக்கு வருத்தம் இல்லையா, விபீஷணன் மீது பொறாமையில்லையா?’’‘‘இல்லை ஐயனே…’’ கண்களில் நீர் பனிக்கச் சொன்னான் அனுமன். ‘‘அன்னையோ, நீங்களோ இருவரில் யார் ஆசிர்வதித்தாலும், அதற்குச் சமமான பலன் உண்டு என்பதை நான் அறிவேன்.‘சிரஞ்ஜீவி’ பட்டம் பெறுபவன் நிரந்தரமானவன், அழிவதில்லை. இந்த வகையில் விபீஷணனும் சிரஞ்ஜீவி, நானும் சிரஞ்ஜீவி.‘‘நான் என்றென்றும் ராமநாம ஜபத்திலேயே ஆழ்ந்துபோகிறவன். அதைவிட யாரேனும் ராமநாமம் சொன்னல், அதைக் காது குளிரக் கேட்டு இன்புறவே மிகவும் விரும்புகிறேன். எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உலகம் முற்றிலுமாக அழிந்து போகக்கூடும். யாருமே உயிர் பிழைத்திருக்க முடியாத சூழ்நிலைகூட உருவாகும். ஆனாலும், அப்போதும் விபீஷணனும், நானும் சிரஞ்ஜீவிகளாக இருப்போம் இல்லையா…?’’ராமன் அதிசயமாக அனுமனைப் பார்த்தான். சீதையோ பிரமித்து நின்றாள்‘‘ஐயனே, நீங்கள் வைகுந்தம் ஏகிவிடுவீர்கள். ஆனால் அதற்குப் பிறகும் இந்த பிரபஞ்சமே ராமநாம பலத்தால்தான் வாழ்ந்தாக வேண்டும். இந்த உலகமே முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில், நான் மட்டுமே தனித்து விடப்படுவேனானால் என் காது குளிர, அகம் மகிழ, ராமநாமம் சொல்லிக் கேட்பதற்கு யாருமே இல்லாமல் போய்விடுவார்களே!ஆனால், விபீஷணனும் சிரஞ்ஜீவி என்பதால், அவன் சொல்லச் சொல்ல நான் மெய்மறந்து ராமநாமத்தைக் கேட்டுக் கொண்டிருப்பேனே! இதைவிட பேறு எனக்கு வேறு என்ன வேண்டும்?என் ஐயனே, இத்தகைய எதிர்காலத் தவிப்பிலிருந்து என்னை இப்போதே காத்து விட்டீர்கள். இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!’’ கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகப் பெருக்கியபடியே சொன்னான் அனுமன்.அவனை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டான் ராமன்.
Added a post
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும்,அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.பாண்டவர்களும் அவர்களது தந்நதை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா?வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது.விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.அதுமற்றவர்கள்கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது.கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும் விறகை சுமந்து வந்தார்கள். அவர்கள் களைப்பாவது நியாயம்.உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்? என்று கேட்கிறான்.உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க ,சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது என்று சகாதேவனிடம் சத்தியத்தை கிருஷ்ணர் வாங்கிக் கொள்கிறார்தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகிவிட்டது.துரியோதனன்,பாண்டவர்களை அழிப்பதற்கு ,போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க , சகாதேவனும் நாளைக் குறித்துக்கொடுக்கிறான்.அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான்,கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது. இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ளமுடியவில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான்.18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான்.அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்.. ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன்.இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு .....அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு?இந்த பதிலைகேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே..... தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும். மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே! இந்த ரகசியமானது காஞ்சிமகா பெரியவரிடம் இருந்து உதிர்ந்தது.
Added a post
மகாபாரதத்தில் சக்கர வியூகம் மிக முக்கியதுவம் வாய்ந்தது. சிலர் இந்த வியூகத்தை பற்றி அறிந்திருந்தாலும் அர்ஜுனன் மட்டுமே இந்த வியூகத்தை உடைத்து வெற்றிகண்டதாக மகாபாரத்தில் கூறப்பட்டிருக்கும். அப்படி என்ன இந்த வியூகம் சிறப்பு வாய்ந்தது. பெயருக்கேற்றாற்போல் சக்கர வடிவத்தில் இருக்கும் வியூகத்தில் ஏழு அடுக்குகள் இருக்கும், ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும். வியூகத்தின் மையத்தில்தான் படைத்தலைவர் இருப்பார். ஒருவேளை வியூகத்திற்குள் நுழைந்து விட்டால் வீரர்களை கொல்ல கொல்ல அந்த இடத்திற்கு மற்றொரு வீரர் வந்து சுழன்றுகொண்டிருப்பர். இதனால் உள்ளே நுழைபவர் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்று குழம்பி உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவர். மேலும் சக்கரவியூகத்தை முறியடிக்கும் கணக்கு தெரிந்தால் மட்டுமே அதை விட்டு வெளியே வர முடியும். அது தெரியாததால்தான் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி உயிரிழந்தான். சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்ற பெயரும் உள்ளது.அபிமன்யுபதிமூன்றாம் நாள் போரில் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி கொல்லப்பட்டான். ஏனென்றால் அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்திற்குள் செல்ல தெரியுமே தவிர வெளியே வர தெரியாது. அபிமன்யு சக்கர வியூகத்தை உடைக்க தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கற்றுக்கொண்டுவிட்டான். ஆனால் அதனை விட்டு வெளியே வருவதை ஸ்ரீகிருஷ்ணர் கூறுவதற்குள் சுபத்திரை தூங்கிவிட்டதால் அபிமன்யுவால் வெளியே வரும் வித்தையை கற்றுக்கொள்ள இயலவில்லை. போரில் தர்மனை பாதுகாப்பதற்காக சக்கர வியூகத்திற்குள் நுழைந்த அபிமன்யு ஏழு மாவீரர்களால் கொலைசெய்யப்பட்டான். அந்த பாலகனை கொல்ல ஏழு மாவீரர்கள் தேவைப்பட்டபோதே புரிந்துகொள்ளுங்கள் அபிமன்யுவின் வீரத்தை.துரியோதனின் சதிபீஷ்மரின் வீழ்ச்சிக்கு பிறகு துரோணாச்சாரியார் கௌரவ படைகளுக்கு தலைமை வகித்தார். சகுனியின் ஆலோசனைப்படி போரில் தர்மனை சிறைபிடித்து தருமாறு துரியோதனன் துரோணரிடம் கோரிக்கை வைத்தான். ஏனெனில் தர்மனை சிறைபிடித்தால் மற்ற பாண்டவர்களும் சரணடைந்துவிடுவார்கள் அவர்களை மீண்டும் சூதாட்டத்திற்கு அழைத்து தோற்கடித்து வனவாசம் அனுப்பிவிடலாம் என்பது சகுனியின் சதியாக இருந்தது. துரோணரும் தர்மனை கொல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் இதற்கு ஒப்புக்கொண்டார்.ஜயத்ரதன்சிந்து ராஜன் ஜயத்ரதன் வனவாசத்தில் இருந்தபோது திரௌபதியை கவர்ந்து செல்ல முயன்றதால் பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்டான். அதற்கு பழிவாங்க சிவபெருமானிடம் இருந்து ஒருநாள் மட்டும் தன்னை யாரும் தோற்கடிக்காதபடி வரம் ஒன்றை வாங்கினான். அந்த வரத்தை போரின் பதிமூன்றாம் நாள் பயன்படுத்த எண்ணினான். அர்ஜுனனை மேற்கு நோக்கி போர் புரிய அனுப்பிவிட்டு இங்கே தர்மனை சிறைபிடிக்க திட்டமிட்டனர். அதன்படி சக்கர வியூகம் அமைக்கப்பட்டது.அபிமன்யுவின் முடிவுபாண்டவர்கள் தரப்பில் துருபதன் மற்றும் அர்ஜுனனுக்கு மட்டுமே சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்லவும், வெளியே வரவும் தெரியும். ஏனெனில் துரோணரும், துருபதனும் ஒரே குருகுலத்தில் சக்கர வியூகத்தை பற்றி படித்தவர்கள். ஆனால் ஜயத்ரதன் துருபதனை மூர்ச்சையாக்கி விட, சக்கர வியூகம் தங்கள் படையை நாசமாக்குவதை கண்ட அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல முடிவெடுத்தான். அவனை தொடர்ந்து பீமனும், தர்மனும் உள்ளே சென்று அவனை பாதுக்கப்பதாக முடிவெடுத்தார்கள்.சக்கர வியூகத்தில் அபிமன்யுதான் கர்ப்பத்தில் இருந்தபோது கற்ற வித்தையை பயன்படுத்தி சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே சென்றான் அபிமன்யு. மற்றவர்கள் அவனை தொடர்வதற்குள் ஜயத்ரதன் வந்து அவர்களை தடுத்தான். சிவபெருமானின் வரத்தால் அவனை எவராலும் வெல்ல இயலவில்லை, அதேசமயம் சக்கர வியூகமும் மூடிக்கொண்டது. வியூகத்தின் உள்ளே சென்ற அபிமன்யு வழியில் இருந்த அனைத்து வீரர்களையும் கொன்றுகொண்டே முன்னேறினான், அதில் துரியோதனின் மகனும் ஒருவன். இதனால் ஆத்திரமடைந்த துரியோதனன் துரோணர், கர்ணன், துச்சாதனன் அனைவர்க்கும் அபிமன்யுவை கொல்ல உத்தரவிட்டான். இறுதியில் கர்ணன் அபிமன்யுவின் உயிரை எடுத்தான்.சக்கர வியூகத்தின் இரகசியம்சக்கர வியூகத்தில் மிகப்பெரிய கணிதம் ஒன்று ஒளிந்துள்ளது, அதனை அறிந்தால்தான் அதனை முறியடிக்க முடியும். அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த போரில் சிறப்பாய் செய்திருப்பார். அதவாது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும் போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும். இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும். இதுதான் தந்திரம் ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்த சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும், இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும், அப்பொழுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும். இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சூழல் உடையும். 0.142857142857142857*2 = 0.2857142285714285714, 0.142857142857142857*3 = 0.42857142857144285714 இப்படிய நீண்டு கொண்டே இருக்கும், இந்த எண்ணை 7-ஆல் பெருக்கும்போது மட்டும்தான் இந்த சூழல் எண் மாறும். 0.142857142857142857*7 = 0.99999999999999 இப்படித்தான் சக்கர வியூகத்தை உடைக்க முடியும். இதனை அறிந்துதான் போரில் துருபதனை அர்ஜுனன் வீழ்த்தியிருப்பார். ஆன்மீகமும், அறிவியலும் இரட்டை குழந்தைகள் போல என்பதை நிரூபிப்பதற்கான உதாரணம்தான் இந்த சக்கர வியூகம்.
Added a post
துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்!எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம் இருந்த குதிரைகளை விலை பேசினார்களாம் இவரின் சகோதரர்கள். ஆனால் அவனோ ‘குதிரைகளுக்கு விலையாகப் பொன்-பொருள் எதுவும் வேண்டாம். எனது கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். அதே நேரம்… சரியான பதிலைச் சொல்லாவிட்டால், நான் போடும் வட்டங்களுக்குள் நீங்கள் அடைபட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தானாம்!இதற்கு ஒப்புக் கொண்ட தருமரின் சகோதரர்கள் நால்வரும் சரியான பதில் சொல்லத் தெரியாமல், அவனிடம் சிக்கிக் கொண்டனராம்!சேவகன் ஒருவன் மூலம் தகவல் அறிந்த தருமர் பதைபதைத்து போனார்; சகோதரர்களை மீட்பதற்கு விரைந்தார்! அரண்மனை வாயிலில், நிபந்தனை வட்டங்களுக்குள் பரிதாபமாக நிற்கும் சகோதரர்களைக் கண்டு மனம் கலங்கினார் தருமர். தன் சகோதரர்களை விடுவிக்குமாறு குதிரைக்காரனிடம் வேண்டினார்.அவனோ, ”எனது நான்கு கேள்விகளுக்கு பதில் கூறினால், தங்களது சகோதரர்களை விடுவிக்கிறேன்!” என்றான். தருமரும் ஒப்புக் கொண்டார்.குதிரைக்காரன் முதல் கேள்வியைக் கேட்டான்: ”இந்தக் குதிரையை ஓட்டி வரும் வழியில், பெரிய கிணறு ஒன்றைக் கண்டேன். அதன் விளிம்பில் காசு ஒன்று தொங்கியது. அந்த காசைப் பற்றியபடி மிகப் பெரிய குன்று (மலை) ஒன்று தொங்கியது. என்ன அதிசயம்… இத்தனை பளுவிலும் காசு கிணற்றுக்குள் விழவில்லை. எப்படி?”உடனே தருமர், ”கலிகாலம் வந்து விட்டதன் அடையாளம் இது. மக்கள் அறநெறிகளில் இருந்து விலகுவார்கள். சிறிய காசு அளவுக்கே தர்மம் செய்வர். பெரிய மலையளவு பாவச் செயல்கள் புரிவர். காலப்போக்கில் அவர்கள் சிறிதளவே செய்த தர்மத்தின் பலனும் நசிந்து போகும். அப்போது, மலையளவு பாவச் சுமையை சுமந்தபடி நரகில் விழுந்து உழல்வர்!” என்றார்.”மிகச் சரியான பதில்!” என்ற குதிரைக்காரனின் முகத்தில் பிரகாசம். பீமனை விடுவித்தவன், 2-வது கேள்வியைக் கேட்டான்: ”வழியில் ஐந்து கிணறுகளைப் பார்த்தேன். நடுவில் ஒன்றும் அதைச் சுற்றி நான்குமாக அமைந்திருந்த அந்தக் கிணறுகளில் நீர் பொங்கி வழிந்தது. மற்ற நான்கு கிணறுகளில் நீர் குறைந்தால், நடுவில் இருக்கும் கிணறு தன்னிடம் உள்ள நீரால் அந்தக் கிணறுகளை நிரப்பும். ஆனால் நடுவில் இருக்கும் கிணற்றில் நீர் குறைந்தால், மற்றக் கிணறுகள் நீர் கொடுக்காது. இதன் பொருள் என்ன?”சற்று யோசித்த தருமர், ”இதுவும் கலியின் கோலமே! நடுவில் உள்ள கிணறு தந்தை. சுற்றி இருக்கும் கிணறுகள் மகன்களைக் குறிக்கும். மகன்களைப் பாடுபட்டுக் காப்பாற்றுவார் தந்தை. ஆனால், தந்தை தளர்வுற்ற பிறகு, மகன்கள் அவரை புறக்கணிப்பர். இதையே, அந்த ஐந்து கிணறுகளும் உணர்த்துகின்றன!” என்றார்.இந்த பதிலும் குதிரைக்காரனுக்குத் திருப்தி யளித்தது. எனவே, இப்போது அர்ஜுனனை விடுவித்தான். அடுத்து 3-வது கேள்வியைக் கேட்டான். ”ஓரிடத்தில் குதிரையை அவிழ்த்து வைத்து விட்டு இளைப்பாறினேன். அப்போது… பசுமாடு, கன்றிடம் பால் குடிக்கும் அதிசயத்தைக் கண்டேன். இதன் கருத்து?”இதைக் கேட்டதும் தருமரின் கண்களில் நீர் வழிந்தது. வருத்தத்துடன் அவர் கூறினார்: ”கலி யுகத்தில் பெற்றோர் செய் யும் இழிச் செயல் இது! ஒரு குழந்தை பிறந்தால்… அதைக் காரணம் கூறி, உற்றார்- உறவினர்களிடம் பணம் பறிப்பர். இன்னும் சிலர், காசுக்காக குழந்தையைத் தகாதவர்களிடம் விற்பார்கள். நீ கண்ட காட்சி, இந்த அவலத்தையே உணர்த்துகிறது!””அருமையான விளக்கம்!” என்றபடி நகுலனை விடுவித்த குதிரைக்காரன், ”வழியில் மற்றோர் இடத்தில் சற்று கண்ணயர்ந்தேன்.திடீரென ஏதோ சத்தம். விழித்துப் பார்த்தால், எதிரே விசித்திரமான ஒரு மிருகம்! கேட்க சகிக்காத இழிச் சொற் களைக் கூறிக் கொண்டிருந்த அந்த மிருகம், மலத் துவாரம் வழியே உணவு உட்கொண்டது! இந்த விபரீதம் உணர்த்துவது என்ன?” என்று தனது கடைசிக் கேள்வியையும் கேட்டான்.இதைக் கேட்டதும் குதிரைக்காரனாக வந்திருப் பது கலி புருஷனே என்பதை உணர்ந்து கொண் டார் தருமர்.”குதிரைக்காரனாக வந்திருக்கும் கலிபுருஷனே! மகா பாவியான உன் கண்ணில் இதுபோன்ற விபரீத காட்சிகள் தென்பட்டதில் வியப்பு இல்லை. இனி இந்த உலகில் உனது ஆட்சிதான்! தர்மத்தின் வேர் அறுபடும். இலக்கியவாதிகள் அறநெறியைப் புறக்கணிப்பர்; புரட்சி, முற்போக்குச் சிந்தனை என்று பேசி மக்களது நல்வாழ்வை நாசமாக்குவர். பொய், களவு, வஞ்ச கம், கொலை… என்று பாதகங்கள் பெருகும்.பேராசையும், பொறாமையும், போர் வெறியும் தலை விரித்தாடும்! வேதியர்களும் ஒழுக்க நெறி யில் இருந்து விலகி நிற்பர். ஆசிரம தர்மங்கள் சீர் குலையும். மழை பொய்க்கும். பஞ்சமும் வறுமையும் பெருகும். கொடிய நோய்கள் பரவும். அரசர்கள், வேத வல்லுநர்களை இகழ்ந்து பேசுவர்” என்று வேதனையுடன் தழுதழுத்த தருமர், ”ஐயோ போதும் இந்த வாழ்க்கை” என்று கண்ணீர் விட்டார்.அவரை வணங்கிய கலிபுருஷன், ”தர்மாத்மாவே! உங்கள் ஆட்சி நடைபெறும் வரை நான் இங்கு வர மாட்டேன். ஆனால், தங்களது ஆட்சி முடிவுற்றதும் நான் வந்தே தீரவேண்டும். வேறு வழியில்லை” என்றவன் சகாதேவனையும் விடுவித்தான். பிறகு, மீண்டும் தருமரை வணங்கி விட்டு, அங்கிருந்து மறைந்தான்!
Added a news
சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த தெருவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இனிமேல், நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் மெயின் ரோடு, அதிகாரப்பூர்வமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று அழைக்கப்படும். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இசை பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற திறப்பு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Added a post
25 வருடங்கள் முன்னர் எங்கள் ஊரில் ஒத்தக்கை தேவர் என்று ஒருவர் இருந்தார் பெண்ணொன்று , பையன்ஒன்றுஇரண்டு பேரையும் அவ்வளவு அருமையாக வளர்த்தார் பையன் குதிரை பூட்டிய வண்டி ஓட்டி வரும் பொழுது ஊரே வேடிக்கை பார்க்கும்அதற்கு இணையாக அந்தப் பெண் சைக்கிள் ஓட்டுவதும் ,இருசக்கர வாகனம் ஓட்டுவதும் ,குதிரை வண்டி ஓட்டுவதும், சிலம்பு சுற்றுவது என பார்ப்பவர்களை கவரும் வண்ணம் ஆக படிப்பும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வளர்த்தார் .அந்த பெண் பருவமடைந்த பின் அவர்கள் சொந்தத்திலேயே பையன் ஒருவன் ஒருவனுடன் காதல் உண்டாயிற்று .அவர்கள் இருவரும் சாரட்டு வண்டியில் செல்லும் பொழுதும் ,இருசக்கர வாகனத்தில் அந்த காலத்தில் அந்தப் பெண் ஒட்டி அந்த பையன் பின்னால் அமர்ந்து செல்வதும் வேடிக்கை பார்க்காதவர் பாக்கி இல்லை18 வயதைத் தாண்டியதும் முறைப்படியே ஊரறிய 20 ஆடுகளுக்கு மேல் வெட்டி ,சமையல் செய்து பெரிய அளவில் திருமணம் நடந்ததுஐந்து நாட்கள் கழித்து அவர்கள் மணமகன் ஊருக்குப் போகும்போது வருத்தப்படாத ஜனம் இல்லை . அந்த பெண் அனைவரிடம் சிரித்தவாறு தெரிந்தவர், தெரியாதவர் அனைவருக்கும் டாட்டா காண்பித்து சென்றது இன்றும் கண்களில் இருக்கிறதுஅங்கே சென்று இரண்டாம் நாள் இருவரும் கிணற்றுக்கு குளிக்க சென்றிருக்கிறார்கள்.பெண் மேலே இருக்க அந்த பையன் கிணற்றில் விழுந்து குளித்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டார்அந்த பெண் செய்வதறியாமல் துடித்து, கத்தி பின்னர் மின்சாரத்தை துண்டித்து அவனை வெளியே கொண்டு வருவதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டதுஅன்று ஊரே அந்த பெண்ணுக்கு அழுதது .அந்த பெண்ணின் அழகு ,அவ்வளவு சந்தோசங்கள் அழகு எல்லாமே பட்டுபோய் விட்டதுஒரு மாதம் முன்னர் தெரிந்த ஒருவருக்கு பஸ்ஸ்டாண்ட் அருகில் வெள்ளரிப்பிஞ்சு வாங்கிக் கொடுப்பதற்காக வாகனத்தை நிறுத்தினேன் .அப்போது ஒரு பெண் அண்ணா !இங்க வாங்க ,அண்ணா! இங்க வாங்க, 50 ரூபாய்க்கு மொத்தமாக தரேன் என்று செம்பட்டை முடியும், தோளில் துண்டும் ,வியர்த்த முகமாக அழைத்தார்.சரி ,என்று ஐம்பது ரூபாய் கொடுக்கும் போது மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல் .முகத்தை மறுபடியும் ஒருமுறை பார்த்து பொறி தட்டியது போல, நீங்கள்ஒத்தக்கை தேவர் மகள் தானே ?என்றதும் , ஆமாம் அண்ணா ,சரியாச் சொன்னே. இத்தனை வருஷத்துல கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டே, என்று சிரித்தவாறு இன்னும் இரண்டு மூன்றுபிஞ்சுகள் சேர்த்து போட்டாள்நான் கேட்க வந்த கேள்வியும், அந்த பெண் இருந்த நிலையும் ,முன்னொருகாலத்தில் பட்டாம்பூச்சி போன்று சிறகடித்த அவளின் அழகும் ,சிரிப்பும் ,பளீரென அவளின் சிரிப்பும், சிலம்பம் சுற்றும் கண்ணுக்குள் மின்னல் அடிக்க நல்லா இருக்கியாமா ?என்று உதட்டளவில் கேட்டுவிட்டு மனதளவில் மிகவும் வருத்தப்பட்டு வந்துவிட்டேன்அண்ணா !பிஞ்சு வெள்ளரிக்கண்ணா ,ரொம்ப பிஞ்சுங்கண்ணா , வாங்க அண்ணா என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததுவாழ்க்கை சில பேருக்கு அழகாக இல்லை. பல பேருக்கும் கூட
Added a post
மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீக சொத்துகளை கையகப்படுத்துவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய மனக்கவலையை மாற்றுவீர்கள். உறவினர்களை விருந்துக்கு அழைத்து மரியாதை செய்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.அதிர்ஷ்ட எண்: 9 7 6 1ரிஷபம் எதிர்பார்த்த வங்கிக் கடன்களை தடையின்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் உருவாக்குவீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிக்கு வைத்தியம் பார்ப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6 1 2 9மிதுனம் சகோதர உறவுகளால் மன சஞ்சலம் அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் பயனடைய மாட்டீர்கள். வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருந்து மாத்திரை சாப்பிடுவீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். கால்நடை வளர்ப்பிலும் கோழிப்பண்ணையிலும் மிகச் சிறந்த லாபம் பார்ப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5 9 4 3கடகம் உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழிலை பக்குவமாக செய்வீர்கள். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவீர்கள். தொழிற்சாலையில் பொருள் உற்பத்தியை பெருக்கி முன்னேற்றம் அடைவீர்கள். கடல் கடந்து தொழில் செய்வதில் உள்ள இடையூறுகளை விலக்குவீர்கள். புதிய தொழில் தொடங்க ஆயத்தமாவீர்கள். பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2 3 8 5சிம்மம் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இழப்பை எதிர்கொள்வீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்குவீர்கள். கடனை அடைக்காமல் சிரமப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1 7 6கன்னி நம்பியவர்கள் கைவிட்டதால் ஏமாற்றம் அடைவீர்கள். பணியிடங்களில் வீண் பழியை சுமப்பீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையால் தடுமாற்றம் அடைவீர்கள். ரியல் எஸ்டேட்டில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். பங்கு சந்தையில் பக்குவமாக முதலீடு செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5 1 2 9துலாம் தாறுமாறாக பணப்புழக்கம் அதிகரித்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள். அரசு, தனியார்துறை பணியாளர்கள் சிரமமின்றி வேலை பார்ப்பீர்கள். காதலியின் உதவியால் முக்கிய கடனை அடைப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை. அதிர்ஷ்ட எண்: 6 9 4 3விருச்சிகம் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு பிரகாசமாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். குடும்ப நலனுக்காக பெண்களின் சேமிப்பை பெறுவீர்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபத்தை காண்பீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயர்ந்து நல்ல விலைக்கு விற்பீர்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்: 9 3 8 5தனுசு அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டிய கட்டாய நிலைக்க ஆளாவீர்கள். மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த நீங்கள் சேமிப்பில் நாட்டம் கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். வேலையாட்களின் உதவி யால் வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். சந்திராஷ்டமம். எதிலும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிஷ்ட எண்: 3 7 6 1மகரம் உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவதால் மன உளைச்சல் அடைவீர்கள். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியில் இறங்கும் உறவினர்களை தவிர்க்க முடியாமல் தடுமாறுவீர்கள். ஐந்தாம் படையினரை அடையாளம் கண்டு வெற்றி பெறுவீர்கள். வாங்கிய கடனை மிகவும் சிரமப்பட்டு திருப்பிச் செலுத்துவீர்கள். சந்திராஷ்டம நாள். சங்கடங்களைச் சந்திக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8 1 2 9கும்பம் உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். உங்களைத் தேடி வரும் அரசாங்க பதவியில் உட்காருவீர்கள். கட்டுமான தொழிலில் புதிய முத்திரை பதிப்பீர்கள். நகைகள் வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 8 9 4 3மீனம் நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வதால் மனக்கவலை அடைவீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையாமல் கைக்காசை செலவழிப்பீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3 8 5
Added a post
கிருஷ்ணரின் இறுதி காலம் வரை அவருடனேயே பயணித்தவர், உத்தவர். கிருஷ்ணருடன் அதீத நட்புடன் பழகியவர்கள் இருவர். ஒருவர் வசுதேவரின் சகோதரி குந்தியின் மகனான அர்ச்சுனன். மற்றொருவர் வசுதேவரின் சகோதரர் தேவபகாரின் மகனான உத்தவர். மகாபாரத போரின் போது கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு செய்த உபதேசம் ‘பகவத்கீதை’ என்று அழைக்கப்படுவது போல, தன்னுடைய இறுதி காலத்தில் உத்தவருக்கு கிருஷ்ணர் செய்த உபதேசம் ‘உத்தவ கீதை’ என்று புகழப்படுகிறது.ஒரு முறை கிருஷ்ணரிடம் சில சந்தேகங்களைக் கேட்டறிந்தார், உத்தவர். அதில் ஒரு சந்தேகத்திற்கான பதிலை இங்கே பார்க்கலாம்.“கண்ணா.. குருசேத்திரப் போருக்கு முன்பாக, பாண்டவர்களுக்காக நீங்கள் அஸ்தினாபுரம் சென்று கவுரவர்களிடம் தூது போனீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் தங்குவதற்காக தனது பிரமாண்ட அரண்மனையில் மிகப் பெரிய அறை ஒன்றை துரியோதனன் ஏற்பாடு செய்திருந்தான். பல வகை உணவுகளோடு பிரம்மாண்டமான விருந்தும் தயார் செய்து வைத்திருந்தான். அனைவரும் பிதாமகர் என்று அழைக்கும் பீஷ்மரும் கூட உங்களை அங்கு வந்து தங்கும்படி அழைத்தார்.ஆனால் நீங்களோ, துரியோதனனின் அரண்மனையையும், விருந்து உபசாரத்தையும் உதறித் தள்ளிவிட்டு, விதுரரின் குடிசையில் போய் தங்கினீர்கள். அதோடு அவர் மனைவி தயார் செய்து வைத்திருந்த மோரை மட்டுமே அருந்தி பசியாறினீர்கள். துவாரகைக்கு மன்னராக இருக்கும் தாங்கள், அரண்மனையில் தங்காமல், விதுரரின் குடிசையை மனம் உவந்து ஏற்றுக்கொண்டதன் காரணம் என்ன?” என்று கேட்டார், உத்தவர்.அதற்கு பதிலளித்த கிருஷ்ணர், “என் மனதிற்கு நெருக்கமான உத்தவரே.. தடபுடலான விருந்து, தங்குவதற்கு பிரமாண்ட அறை இருந்தும், விதுரரின் குடியில் இருந்த ஒன்று... துரியோதனனின் அரண்மனையில் இல்லையே” என்றார்.அதைக் கேட்ட உத்தவர், “கிருஷ்ணா.. விதுரரின் குடிசையில் அப்படி என்னதான் இருந்தது? அது ஏன் துரியோதனனின் அரண்மனையில் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.“உத்தவரே.. விதுரரின் குடிசையில் இருந்ததும், துரியோதனனின் அரண்மனையில் இல்லாததும் ‘பக்தி’தான். துரியோதனன் எனக்காக நிறைய ஏற்பாடுகளை செய்ததோடு, நல்ல விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தாலும், ‘இதோ பார்.. நான் உனக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறேன்’ என்று நினைக்கும் ஆணவம் அவனிடம் மிகுந்திருக்கிறது. அதுவே பக்தியை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு எனக்காக, விதுரரும், அவர் மனைவியும் அளித்த மோர், என் மனதை குளுமைபடுத்துவதாகவும், என் பசியை போக்குவதாகவும் இருந்தது. எப்போதும் உண்மையான பக்தியிடம்தான் நான் திருப்தி அடைகிறேன்” என்று கூறினார், ஸ்ரீகிருஷ்ணர்.