GomathiSiva

Added article 
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற பேச்சு இணைய பக்கங்களில் பேசப்படுகிறது. அது உண்மையா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த நடிகை ஓவியா துரதிஷ்டவசமாக நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. இதுவரை இயற்கைக்கு நேரான உடலுறவு தான் நான் வைத்திருக்கிறேன். ஓரினச்சேர்க்கை என்பது எனக்கு இதுவரை தோன்றியது கிடையாது. அதை பற்றி சிந்தித்து கூட நான் பார்த்தது கிடையாது எனக் கூறியிருக்கிறார் நடிகை ஓவியா.இங்கே விஷயம் என்னவென்றால் நடிகை ஓவியாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனாலும், நான் இயற்கைக்கு நேரான முறையில் உறவு கொண்டு வந்திருக்கிறேன் என கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.இதற்கு முன்பாக பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ஓவியா மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் எனவும் பணக்கார இளைஞர்களுடன் அடிக்கடி நைட் பார்ட்டி மற்றும் தவறான வேலைகளில் ஈடுபட்டு கர்ப்பமாகி விட்டார் எனவும் கருவை கலைக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் தான் கடுமையான உடல் எடை குறைந்து விகாரமான தோட்டத்திற்கு மாறிவிட்டார் என்றும் கூறியிருந்தார்.அதனை நிரூபிக்கும் விதமாக மதுபான விடுதியில் மது அருந்தியப்படியே பேட்டியில் பேசியிருக்கிறார் நடிகை ஓவியா அதே சமயம் நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது என்றும் இயற்கை நேரான முறையில் தான் உடலுறவு கொள்கிறேன் என்று பேசி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
  • 61
Added article 
பொழுதுபோக்கு துறையில் ஒரு முக்கிய நபரான ரேகா நாயர், சமீபத்தில் ஒரு சமூக ஊடக நேர்காணலின் போது ஆடை கட்டுப்பாடுகள் குறித்து தனது கருத்துகளால் சர்ச்சையை கிளப்பினார். பிறகு கொஞ்சம் ஒரு படி மேல் சென்று தனக்கு எப்போது முதல் இரவு நடந்தது என்பதை பற்றியும் கூறியுள்ளார் ரேகா.ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக இருக்க வேண்டும் என்று அவர் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்தார். இருப்பினும், அவரது கருத்துகள் சமூக ஊடகங்களில் ஒரு விவாதத்தைத் தூண்டியது, பலர் அத்தகைய அறிக்கையின் நியாயம் மற்றும் தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.இக்கட்டுரை நாயரின் கருத்து மூலம் தூண்டப்பட்ட எதிர்வினையை ஆராய்கிறது மற்றும் தனிப்பட்ட வெளிப்பாடு தொடர்பான அழகு மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை ஆராய்கிறது. நேர்காணலின் போது, ரேகா நாயர் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக இருக்க வேண்டும் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.அது தனது தனிப்பட்ட கருத்து என்று அவர் தெளிவுபடுத்திய நிலையில், அந்த அறிக்கை கவனத்தை ஈர்த்தது மற்றும் பல்வேறு குழுக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட வெளிப்பாட்டின் வக்கீல்கள் நாயரின் கருத்து மக்களின் விருப்பங்களை கட்டுப்படுத்தும் மற்றும் தேவையற்ற சமூகக் கட்டுப்பாடுகளை சுமத்துவதாக விமர்சித்தனர். 17 வயதிலேயே எனக்கு திருமணம் நடந்தும் முதலிரவுக்கு முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார் ரேகா. ஒரு இயக்குனர் என்னிடம் ஒரு கதையை கூறுகிறார்.அவர் கூறியதாவது, மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. இப்படி நடந்து கொள்ளுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதே சமயம் ஆடை குறித்து நான் பேசிய கருத்து வேறு.. நான் சின்னதாக ஆடை அணிவது என்னுடைய விருப்பம். அதை அணிந்து கொண்டு நான் வெளியேறு செல்லும் பொழுது ஒருவன் என்னுடைய தொடையை தொட்டால்.. நான் அவனுடைய கழுத்தை பிடிப்பேன்.. அதுதான் பெண் சுதந்திரம். ஆடை இல்லாமல் வெளியில் செல்வது பெண் சுதந்திரம் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் நடிகை ரேகா.
  • 64
Added article 
ஷாலு ஷம்மு சென்னையிலுள்ள சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தனது கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்தார். சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ திவ்யாவுடன் இணைந்து பொன்ராம் இயக்கிய 2013 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான வருடபடாத வாலிபர் சங்கம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.அவர் நன்கு அறியப்பட்ட தமிழ்த் திரைப்படங்களான தமிழுக்கு என் ஒன்று அழுதவும் (2015), றெக்க (2016) மற்றும் திருட்டுப் பயலே 2 (2017) ஆகியவற்றிலும் தோன்றினார். பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது முழுவதுமாக மாடலிங் துறையில் மட்டுமே ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோஷூட்களில் கலந்துகொண்டு மிகவும் கவர்ச்சியாக போட்டோக்களை எடுத்து அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகிறார் ஷாலு ஷம்மு.  இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலு ஷம்மு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு படத்தில் நடிக்க தன்னை அனுகியதாகவும், உங்களுடைய கதாபாத்திரம் குறித்து விவாதிப்போம் என்று சொன்னார்கள். அவர்கள் கூறிய முகவரிக்கு சென்றேன். அங்கு அந்த நபரின் குடும்ப புகைப்படங்கள் இருந்தது. அப்போதுதான் நான் உணர்ந்தேன். அது அவரது வீடு என்று அவர் எனக்கு ஜூஸ் கொடுத்தார். படத்தை பற்றி பேசாமல் மற்ற விஷயங்களை பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் அங்கு இருந்து பயந்து வந்து விட்டேன் என்றும், அந்த விஜய் தேவரகொண்டா பட இயக்குனர் மீது புகார் அளித்திருப்பதாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.
  • 66
Added a news 
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும். அதற்காக தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவதற்கான தயார் நிலைமையை இவ்வருடத்திற்கான COP28 மாநாட்டில் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  எதிரி கதவை அண்மித்து விட்டதால் ஒருபோதும் மேற்படி தீர்மானத்தை காலம் தாழ்த்த முடியாதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான COP28 உயர்மட்ட மாநாடு 54 அரச தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (01) டுபாய் எக்ஸ்போ சிட்டியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐந்தாவது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் மாநாட்டின் இணக்கபாட்டுக்கு அமைவாக,  2024 பெப்ரவரி 06 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் காலநிலை நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை இலங்கை முன்வைக்கவிருப்பதாகவும், அந்த நீதிமன்றம் ஊடாக காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமானதும் செயற்திறன் மிக்கதுமான தலையீடுகளை மேற்கொள்வதற்கான களத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.22 ஆவது நூற்றாண்டில் வெப்ப வலயம் பூமத்திய ரேகையிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ள நிலையில், மீள்புதுப்பிக்கதக்க வலுசக்திக்கு, சுற்றால் பாதிப்பு கட்டுப்பாடு மற்றும் இயற்கை தீர்வுகளுக்கான பெருமளவான முதலீடுகள் அவசியப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.  இலங்கை உட்பட ஏனைய பங்குதாரர்கள் வெப்ப வலய  தொடர்பான அறிக்கையிடலுக்காக நிபுணத்துவ சபையொன்றை கூட்டுவதற்கு எதிர்பாப்பதாகவும், அதனூடாக வெப்ப வலயத்திற்கு மாத்திரமின்றி முழு துறைசார் திட்டமிடலொன்றை பகிர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  
  • 66
Added a news 
அரசியலமைப்பைத் தெரிந்து கொண்டே மீறினால் ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு அது போதுமான காரணமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அரசியலமைப்பு பேரவையினுடைய அனுமதி இல்லாமல் பொலீஸ் மா அதிபர் நியமிக்கப்பட முடியாது. ஜனாதிபதி ஓட்டு மொத்தமாக அரசியலமைப்பை மீறி செயல்படுகிறார். அத்துடன் பதில் பொலிஸ்மா அதிபரைக் கூட நியமிக்க முடியாது. இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் சில சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்திருக்கிறோம்.அத்தோடு கட்சி உறுப்பினர்களோடும் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாக ஒரு சிறு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
  • 67