Feed Item
Added a post 

பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது. அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கும் தெரியாது.

அந்த பெண் யோசிக்கின்றாள்:- “ நான் கீழே விழப்போகின்றேன் என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது இந்த ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான்! அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று ஆனால் அந்த ஆண் யோசிக்கின்றான்:- “ மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன் ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை? ”

இந்த படம் சொல்லும் நீதி:- எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை/பிரச்சனைகளை பார்க்க முடியாது அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண / உணர முடியாது.

இது வாழ்க்கை,வேலை,குடும்பம்,நண்பர்கள்,உணர்வுகள் எப்படியாக இருந்தாலும் , ஒருவருக்கொருவர்_புரிந்துகொள்ள_முயலவேண்டும் இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும் பொறுமையுடன் கூடிய தெளிவான தொடர்பாடலையும் கற்றுக்கொள்ளல் வேண்டும். சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக்கூடியது.

நாமும் , நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

  • 659