Feed Item
Added a post 

ஒரு அதிகாலைப் பொழுது.... கணவன் மனைவியை எழுப்பி கேட்டான். "டியர்... யோகா பண்ணப் போறேன்... நீயும் வர்றியா?"

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி , "ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்.. உடம்பை குறைன்னு சொல்றீங்க.. அப்படி தானே?"

கணவன்: "அதுக்கில்லைம்மா.. யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது".

மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"

கணவன்: "இல்லை இல்லை.. நீ வரவேணாம். விடு".

மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க"

கணவன்: "ஐயோ இல்லை.. ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"

மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"

கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"

மனைவி: அப்படிதான் சொன்னீங்க.. அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"

கணவன்: "தயவு செஞ்சு விடு.. காலங்காத்தால ஏன் சண்டை?"

மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்".

கணவன்: "Ok.. நானும் போகலை. போதுமா?"

மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு.. அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”

கணவன்: "சரி, நீ தூங்கு.. நான் தனியா போய்க்கிறேன்.. சந்தோஷமா?"

மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்.. அதுக்கு தானே இவ்வளவும் பேசுனீங்க?"

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை.. டயர்டாகி யோகாவுக்கு போகாமல் படுத்துவிட்டான்..

  • 539