Feed Item
Added a post 

ஒருநாள் இரவு, தன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலாவிக் கொண்டிருந்தார், பிரெஞ்சு சக்கரவர்த்தி மாவீரன் நெப்போலியன் போனபார்ட். அப்போது, காவல் பணியிலிருந்த ஒரு வீரன் துாங்கி வழிந்து கொண்டிருப்பதை கண்டார்.

ஏதோ ஒரு வேலையாக அந்த பக்கம் வந்த, தளபதியும் அந்த காட்சியை கண்டு திடுக்கிட்டார்.

'அரசே, காவல் பணியிலிருக்கும் ஒரு வீரன் துாங்குவது மிகப்பெரிய குற்றமாகும். இது அவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் கடமையை அலட்சியப்படுத்தி விட்டு துாங்குகிறான். அவனுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்...' என்றார், தளபதி.

அதற்கு, 'இல்லை தளபதியாரே... அவன் தன் கடமையை அலட்சியப்படுத்தி இருக்க மாட்டான். அவன் அதிகமாய் உழைத்திருக்க வேண்டும். அதனால் தான், அவன் உடல் சோர்ந்து அவனுக்கு துாக்கம் வந்து விட்டது.

'துாக்கம், தானே வருவது. அது அவனுக்கு தேவை. அவன் துாங்கட்டும்...' எனச் சொல்லி, கீழே இறங்கி போய், அவனுடைய துப்பாக்கியை எடுத்து, அவனது காவல் பணியைச் செய்யத் துவங்கினார், நெப்போலியன்.

கண்டிப்புக்கு பெயர் போனவராக இருந்தாலும், அவருக்குள் எதார்த்தமான மனிதாபிமான உணர்வும் இருப்பதை எண்ணி திகைத்தார், தளபதி.

  • 525