மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் பாராட்டினர். இவர் கன்னடத் திரையுலகிற்கு பாலு மகேந்திராவின் கோகிலா திரைப்படத்தில் (1977) தமிழ் நடிகர் கமல்ஹாசனுடன் அறிமுகமானார் . 1980 இல் மூடுபனி வெளியானதிலிருந்து இவர் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரானார். 1980 களில் மோகன் 'வெள்ளி விழா நாயகன்' என்று அழைக்கப்பட்டார். இவர் நடித்த கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களும் வெற்றி அடைந்தது.
கோகிலாவுக்குப் பிறகு, மடலசா (1978) என்ற மலையாளத் திரைப்படத்தில் மோகன் நடித்தார் . இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மோகன் என்ற பெயருடன் கிழக்கே போகும் ரயில் (1979) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கமான தூர்ப்பு வெள்ளே ரயில் என்ற தெலுங்கு படம் ஒன்றில் கையெழுத்திட்டார். தெலுங்கு பதிப்பை பாபு இயக்கியுள்ளார் . அதன்பிறகு இயக்குனர் மகேந்திரன் இவரை நெஞ்சத்தை கிள்ளாதே தமிழில் அறிமுகப்படுத்தினார். இந்த படம் ஓராண்டு ஓடியதுடன் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது .இவரது நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓட தொடங்கியது. இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் (1982) பெற்றார். இதனால் தமிழில் பெரிய நடிகரானார்.
இவர் மைக் பிடித்து பாடும் மேடைப் பாடகராக நடித்ததில் மிகவும் பிரபலமானார்.இதனால் மைக் மோகன் என்றும் பட்டப் பெயர் வைத்து அழைக்கப்பட்டார்.
. இவர் பல்துறை நடிகரில்லை என்று ஒரு பொதுவான கருத்து இருந்தது. இவர் நடித்த விதி (1984), நூறாவது நாள் (1984), ரெட்டை வால் குருவி (1987), மற்றும் சகாதேவன் மகாதேவன் (1988) போன்ற வெற்றிப் படங்களில் உச்சத்தை அடைந்தார்.
கோவைதம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிக திரைப்படங்களில் நடித்தார். 1986 ஆம் ஆண்டில் மௌன ராகம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கினார்.இப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றதோடு, இயக்குனர் மணி ரத்தினத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் 80 களின் திரைப்படங்களுக்காகவும், இளையராஜாவின் பாடல்களுக்காகவும், பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தாலும் இன்றும் பேசப்படுகிறார்.
பயணங்கள் முடிவதில்லை படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான "பிலிம்பேர் விருது "கிடைக்க பெற்றார்.
80களின் தமிழ்த் திரை உலகின் அசைக்க முடியாத நாயகனாக இருந்தவர் மோகன். மைக் மோகன் என்று சொல்லும் அளவுக்கு அவர் மைக் பிடித்துப் பாடாத படங்களே இல்லை என்று சொல்லாம்… எல்லாமே சூப்பர் ஹிட்தான்.
" ராஜா ஹிட்ஸ்" என்றால் அதில் மோகன் படப் பாடல்களே பிரதானம்.
ஒரு நாளைக்கு 18 மணிநேரம் என ஓயாமல் நடித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர்.
ஒரு நடிகையின் காதலை ஏற்காததால், அவர் பரப்பிய அவதூறான 'மோகனுக்கு எயிட்ஸ் 'எனும் பெயரால் திரையுலகை விட்டு விலகும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.
திருமண வாழ்க்கை
மோகன் 1987 இல் கௌரியை மணந்தார். தம்பதியருக்கு ஆகாஷ் என்ற மகன் 1989 இல் பிறந்தார்.
மோகன் ஹிட்ஸ்
- என்னோடு பாட்டுப் பாடுங்கள்..
- கூட்சு வண்டியிலே..
- இளைய நிலா பொலிகிறது…
- இதயம் ஒரு கோவில்…
- குழல் ஊதும் கண்ணனுக்கு…
- மணி ஓசை கேட்டு எழுந்து…
- மன்றம் வந்த தென்றலுக்கு…
- நான் பாடும் மவுனராகம்…
- நிலாவே வா…செல்லாதே வா…
- பாடு நிலாவே…தேன் கவிதை…
- நிலவு தூங்கும் நேரம்…
- ஊரு சனம் தூங்கிருச்சு….
- பாட வந்தோர் கானம்…
- பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…
- பருவமே …புதிய பாடல் பாடு….
- 16.புதிய பூவிது பூத்தது …
- இன்றைக்கும் இந்தப் பாடல்களில் தம்மை இழக்காதவர்கள் இல்லை எனலாம்.
நடிகர் மோகன் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமானார் என்று சொன்னால் அது மிகையாகாது.
- 501