Feed Item
Added a post 

மூத்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, முதல்வர் எம் ஜி ஆர் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர் இப்போது பழம்பெறும் நடிகர் எம்.கே.ராதா அவர்கள் விருதுவாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி.

ராதாவுக்கும் மிக ஆதங்கம், முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி. மேடையில் முதல்வரைக் காணவில்லை. குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி.

ராதா ஏதோ சொல்லமுயலும் போது அவரை தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது, "நான் ஆரம்பகாலத்தில் கஷ்டப்படும் போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தங்களை அவமதிக்கும் செயலாகும்.தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும்" என்று சொன்னது தான் தாமதம்.

ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின. ஒரு மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்து ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது?"

்கள் திலகம் எம்ஜிஆர் தன் வாழ்நாளில் பொஞ மேடையில் இருவர் காலில் மட்டுமே விழுந்து வணங்கி இருக்கிறார் ஒருவர் பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் சாந்தாராம் மற்றொருவர் எம் கே ராதா . எம் கே ராதா அவர்களின் தந்தையார் எம் கந்தசாமி முதலியார் அவர்களின் நாடக கம்பெனியில் சிறுவர்களாக இருந்த போது மக்கள் திலகமும் பெரியவர் சக்ரபாணியும் வயிற்றுப் பசியை போக்கிக் கொள்வதற்காக நாடக கம்பெனியில் இணைந்து பணியாற்றி படிப்படியாக வளர்ந்து தனது முதல் படமான சதிலீலாவதி படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பை வாங்கித் தந்தவர் திரு எம் கே ராதா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வில் எவ்வளவு பெரிய உச்சத்திற்கு போனாலும் தான் கடந்து வந்த பாதை திரும்பிப் பார்ப்பது மக்கள் திலகத்தின் வழக்கம்.

  • 176