யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று(11) காலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் கைதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
000
- 891